admin

டிசம்பர் 25 புதிய புத்தக வெளியீடு

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. குற்றமுகங்கள் குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைப் புனைவின் வழியே புதிய கதைகளாக்கியிருக்கிறேன்.

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை

The Most Precious of Cargoes என்ற பிரெஞ்சு அனிமேஷன் திரைப்படம் ஆஷ்விட்ஸ் யூதப் படுகொலையை மையமாகக் கொண்டது. ஆனால் வதைமுகாமின் துயரக் கதையைச் சொல்வதில்லை. முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வின் வழியாக யூத வெறுப்பு அந்த நாளில் எப்படி வேரோடியிருந்தது என்பதையும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய இருவரையும் பற்றி விவரிக்கிறது. மரபான தேவதைக் கதையைப் போலத் துவங்கும் திரைப்படம் வரலாற்றின் இருண்டபக்கத்தை ஆராய்கிறது அனிமேஷன் திரைப்படத்தின் மூலம் வரலாற்றையும் அதன் அறியப்படாத உண்மைகளையும் பேச முடியும் …

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை Read More »

அன்றும் இன்றும்.

தி நியூயார்க்கர் இதழின் நூற்றாண்டினை முன்னிட்டு அது கடந்த வந்த காலத்தை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்கள். மார்ஷல் கரி  இதனை இயக்கியுள்ளார். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இதுவரை தி நியூயார்க்கரில் வெளியான சிறுகதைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் நியூயார்க்கர் இதழ் யாரால் எப்படித் துவங்கப்பட்டது. அதன் பிரபலமான ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறை, வெளியீட்டில் காட்டும் துல்லியம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. நியூயார்க்கர் அமெரிக்க உயர்குடியின் ரசனைக்குரியது என்ற விமர்சனத்தையும் கூட …

அன்றும் இன்றும். Read More »

மலர்களை நேசிக்கும் காளை.

அமெரிக்க எழுத்தாளர் முன்ரோ லீஃப் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபெர்டினாண்ட் குழந்தைகளுக்கான சிறந்த கதைப் புத்தகம். மலர்களை நேசிக்கும் ஒரு காளையின் கதையைச் சொல்லும் இந்நூல் அனிமேஷன் திரைப்படமாகவும் வந்துள்ளது இளம் காளையான ஃபெர்டினாண்ட் மற்ற காளைக் கன்றுகளைப் போல மோதவும், குதிக்கவும், மற்ற காளைகளோடு சேர்ந்து விளையாடவும் விரும்பாமல் தனிமையில் அமர்ந்து கொண்டு பூக்களை ரசிக்கிறது. அதற்கு. பூக்களை மிகவும் பிடிக்கும், தனிமையும் பிடிக்கும். மலர்களின் நறுமணத்தை அனுபவிக்கிறது. இதற்கென ஒரு மரத்தடி நிழலினையும் …

மலர்களை நேசிக்கும் காளை. Read More »

மழையை ருசிக்கும் சிறுமி

தெலுங்குச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 1973ல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. அதில் எழுத்தாளர் திரிபுரநேனி கோபிசந்த் எழுதிய பாசம் என்ற கதை விவசாயி ஒருவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. திரிபுரநேனி  கோபிசந்த் சிறந்த தெலுங்கு எழுத்தாளர். பத்து நாவல்கள், பன்னிரண்டு நாடகங்கள்,  நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ஜோகய்யா என்ற விவசாயிக்கு மூன்று மகன்கள். பேரன் பேத்தி எனப் பெரிய குடும்பம்.. அவரது மனைவி நோயாளியாக மரணப் படுக்கையில் கிடக்கிறார். ஜோகய்யாவிற்கு நிறைய நிலமிருக்கிறது. …

மழையை ருசிக்கும் சிறுமி Read More »

நார்மனின் திட்டம்

ஹாலிவுட்டில் வங்கிக் கொள்ளை பற்றி நிறையப் படங்கள் வெளியாகியுள்ளன. அதே கதைக்கருவைக் கொண்டு மாறுபட்ட படத்தை உருவாக்கியுள்ளார் பிரிட்டீஷ் இயக்குர் பாசில் டியர்டன். பிரிட்டிஷ் சினிமாவின் பெருமைக்குரிய படங்களில் ஒன்றாக இன்று கொண்டாடப்படுகிறது. The League of Gentlemen 1960ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம். ராணுவ அதிகாரியான நார்மன் ஹைட் The Golden Fleece, என்ற புத்தகத்தை ஏழு பேருக்கு ஏழு உறைகளில் போட்டு அனுப்பி வைக்கிறார், கூடவே பாதிக் கிழிக்கபட்ட ஐந்து பவுண்ட் நோட் ஒன்றையும் …

நார்மனின் திட்டம் Read More »

ஏழு வயது வாசகி

மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகள் பிரகதியாழினி அவளுடைய சிறு குறிப்பேட்டில் பின்வருமாறு குறித்து வைத்திருந்தாள் என அவளது தந்தை ரவி அனுப்பி வைத்திருந்தார். பள்ளி மாணவர்கள் என்னை விருப்பத்துடன் வாசிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரகதியாழினிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவர் தமிழில் எழுதிட பெற்றோர்கள் உதவிட வேண்டும்.

காதலின் மழை

A Season of Good Rain அழகான காதல் திரைப்படம். வசந்தகாலத்தில் உரிய நேரத்தில் மழை பெய்யும் என்ற நம்பிக்கை ஜப்பானில் உள்ளது. அதனைத் தனது கவிதையிலும் கவிஞர் து ஃபூ குறிப்பிடுகிறார். ஒரு ஆணும் பெண்ணும் எப்போது, எங்குச் சந்திக்கிறார்கள் என்பது காதலில் முக்கியம் என்பதையே படம் விவரிக்கிறது. கொரிய இளைஞரான டோங்-ஹா ஒரு கட்டிடக் கலைஞர். சீனாவில் 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு தனது நிறுவனம் சார்பாகச் செங்டு நகரத்தை மீண்டும் …

காதலின் மழை Read More »

இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள்.

ஒரு கவிதையைப் போல இன்னொரு கவிதை இருப்பதில்லை. எந்த இரண்டு கவிதைகளையும் ஒன்று போல வாசிக்கவும் முடியாது. செவ்வியல் இசையை ரசிப்பதைப் போலக் கவிதை வாசிப்பதற்கும் சில பயிற்சிகள். அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன. அதே நேரம் திரையிசை பாடல்களைக் கேட்பதை போல நேரடியாக மனதில் சென்று தேங்கிவிடும் கவிதைகளும் இருக்கின்றன, ஒரு கவிதையைப் புரிந்து கொண்ட விதத்தை வைத்து மற்றொரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒரு சாவியிருக்கிறது. கவிதை துளையில்லாத பூட்டு. எங்கே …

இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள். Read More »

இனிக்கும் இருள்

எழுத்தாளர் கோ.புண்ணியவான், மலேசியா கல் மனங்களிலும் கனிவு பிறக்கும் என்பது இக்குறும்படத்தின் கதைப் பொருள். அதனை கலைநயம் குன்றாமல் கொண்டு செல்கிறார் ஹரி பிரசாத். நிலத்தை எப்படியாவது பார்வையற்ற தம்பதியினரின் தலையில் கட்டிவிடவேண்டும் என்று கண்ணையா புரோக்கரும் அவர் சகாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் பார்வைக்குறைவானவர்கள் என்று முதற் சந்திப்பிலேயே தெரிந்துகொள்ளும் கண்ணையா ஓரு கரிசனமான மன அசைவை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். வீட்டு மனையின் நிலப்பட்டாவை வாங்க பணம் தேவையென்று சொன்னதும் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள் தம்பதிகள். …

இனிக்கும் இருள் Read More »