admin

புலிக்கட்டம் – மொழியாக்கம்

எனது புலிக்கட்டம் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் பரத் குமார்.www.usawa.in இணைய இதழில் கதை வெளியாகியுள்ளது நன்றி : https://www.usawa.in/issue-8/Translation/lambs-and-tigers-bharath-kumar.html

பெயர் தெரியாத ஞானி.

The Unknown Saint அலா எடின் அல்ஜெம் இயக்கிய 2019 மொராகோ திரைப்படம் தான் திருடிய பணத்தை எங்கே ஒளித்து வைப்பது என்று தெரியாமல் யாருமற்ற பாலைவன மணல்மேடு ஒன்றில் புதைத்துவைத்துவிட்டு அடையாளத்திற்காகப் புதைமேடு போல ஒன்றை உருவாக்கி விட்டு சிறைக்குப் போகிறான் யான்ஸ். சிறை வாழ்க்கையை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தான் புதைத்த பணத்தை எடுக்க வருபவன் அங்கேயுள்ள காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைகிறான். காரணம் அவனது புதைமேட்டினை ஒரு ஞானியின் சமாதி என நினைத்து …

பெயர் தெரியாத ஞானி. Read More »

சி. மோகன் விழா

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கலைவிமர்சகர் சி.மோகன் அவர்களின் கலை இலக்கியப் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாக அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. அத்துடன் அவருக்குப் பணமுடிப்பு அளித்து கௌரவிக்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன் டிசம்பர் 18 மாலை இந்த நிகழ்வு நடைபெறுகிறது இடம் கவிக்கோ மன்றம் சென்னை.

புத்தக வெளியீட்டு விழா

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் டிசம்பர் 25 2022 ஞாயிறு மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது. நிகழ்வினைத் தலைமையேற்று புத்தகங்களை எழுத்தாளர் வண்ணநிலவன் வெளியிடுகிறார் சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்வு நடைபெறுகிறது

டிசம்பர் 25 – உலக இலக்கியப் பேருரை

டிசம்பர் 25 ஞாயிறு மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் ஒருங்கிணக்கும் இந்த நிகழ்வில் எனது புதிய நூல்களும் வெளியாகின்றன இந்த ஆண்டு எனது மூன்று புதிய நூல்கள் வெளியாகின்றன பகலின் சிறகுகள் -சிறுகதைத் தொகுப்பு வான் கேட்கிறது – உலக- இந்திய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நிறங்களை இசைத்தல் – ஒவியங்கள் குறித்த கட்டுரைகள். •• புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக்கின் வாழ்வும் …

டிசம்பர் 25 – உலக இலக்கியப் பேருரை Read More »

கி.ராஜநாராயணன் மணி மண்டபம் – விழா

கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறப்பான மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் நாளை (02.12.22) திறந்து வைக்கிறார். மாலை ஐந்து மணிக்கு கிரா நினைவரங்கத்தில் கலை இலக்கிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கிராவைப் போற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொணடு உரையாற்றுகிறேன்.

இரண்டு முடிவுகள்

Between Two Dawns கடந்த ஆண்டு வெளியான துருக்கி திரைப்படம். இதன் இயக்குநர் செல்மன் நகார். இவரது முதல் படமிது. தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்துக் காரணமாக அதன் நிர்வாகியின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களையும் விபத்துக்குள்ளான தொழிலாளியின் குடும்ப நிலையினையும் மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறுகதை அளவேயுள்ள சம்பவம். ஆனால் அதனை நேர்த்தியாக, நுட்பமாகப் படம் விவரிக்கிறது. காதிர் அவரது சகோதரர் ஹலீல் அவர்களின் தந்தை இப்ராகிம் மூவரும் சாயமிடப்பட்ட துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்திவருகிறார்கள். …

இரண்டு முடிவுகள் Read More »

கேரளா இலக்கிய விழா

2023 ஆண்டிற்கான KLF-KERALA LITERATURE FESTIVAL கோழிக்கோடு கடற்கரையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்.