காலைக் குறிப்புகள்

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால்

இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றுள்ள கவிஞர் லூயிஸ் க்லூக் பெயரைக் கூட இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. பரிந்துரைப் பட்டியலிலிருந்த நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ, கவிஞர் ஆன் கார்ஸன், ரஷ்ய நாவலாசிரியர் ல்யூட்மிலா உலிட்ஸ்கயா, சீன எழுத்தாளர் யான் லியான்கே, முரகாமி, ஜமைக்கா கின்கைட் போன்றவர்களை வாசித்திருக்கிறேன். ஆனால் எந்தப் பரிந்துரையாளரும் லூயிஸ் க்லூக் பெயரைச் சொல்லவேயில்லை. நோபல் பரிசு கமிட்டி இது போன்ற திகைப்பூட்டும் ஆச்சரியங்களைத் தருவதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள். ஸ்வீடிஷ் அகாடமி …

காலைக்குறிப்புகள் 21 நோபல் பரிசின் பின்னால் Read More »

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன

அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரான சிந்தியா ஓசிக்  கட்டுரை ஒன்றில் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்வி பற்றி எழுதியிருக்கிறார்.  இந்தக் கதைகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதே அக் கேள்வி. இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாத எழுத்தாளரே கிடையாது. ஏன் தொடர்ந்து இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் அறிஞரிடம்  கண்டுபிடிப்பிற்கான எண்ணம் எங்கிருந்து கிடைத்தது என்று எவரும் கேட்பதில்லை. வேறு துறை சார்ந்த அறிஞர்கள் எவரிடம் இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்படுவதில்லை. ஆனால் எழுத்தாளர்களிடம் தொடர்ந்து …

காலைக்குறிப்புகள் 20 எங்கிருந்து கிடைக்கின்றன Read More »

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம்

ஜப்பானிய இயக்குநர் ஓசுவின் திரைப்படம் ஒன்றில் திருமணமாகிச் செல்லும் மணப்பெண்ணை வீட்டிலிருந்து அழைத்துப் போகிறார்கள். அவள் தந்தையிடம் ஆசி பெறுகிறாள். அப்போது இத்தனை ஆண்டுகள் தன்னை வளர்த்து அன்பு செலுத்தியதற்கு நன்றி தெரிவிக்கிறாள். தந்தை அவளது எதிர்காலம் கடந்தகாலத்தை விடவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார். அந்தக் காட்சியை என்னால் மறக்கமுடியவில்லை கடந்தகாலத்தை விடவும் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பது தான் இலக்கியத்தின் பணியும். அந்தத் தந்தையின் ஆசியைப் போன்ற ஒரு …

காலைக் குறிப்புகள் 19 நினைவின் நறுமணம் Read More »

காலைக்குறிப்புகள் 18 சிறிய கதை

இயக்குநர் மணிகௌல் ஒரு நேர்காணலில் தனது படங்களுக்குச் சிறிய கதை போதுமானது. பெரிய கதையும் நிறையக் கதாபாத்திரங்களும் சிலருக்கே தேவைப்படுகின்றன என்கிறார். Uski Roti (1970) Duvidha போன்ற அவரது படங்களே இதற்கு உதாரணம். இதையே தான் ஹெமிங்வே சிறுகதை பற்றிய குறிப்பு ஒன்றில் வெளிப்படுத்துகிறார். குறைவான கதாபாத்திரங்கள். ஒரு சம்பவம் ஒரு நல்ல சிறுகதைக்குப் போதும். கதையின் ஆழம் தான் முக்கியமானது என்கிறார். இதற்குச் சிறந்த உதாரணம் அவரது Killers என்ற சிறுகதை. சிகாகோவைச் சேர்ந்த …

காலைக்குறிப்புகள் 18 சிறிய கதை Read More »

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன்

800 முதல் 600 B C வரையிலான பண்டைய சீன பாடல்களின் தொகுப்பு The Book of Songs. இந்த நூலை வாசிக்கையில் சீனாவில் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் பாடல்களும் இசையும் கலந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழின் சங்க கவிதைகளைப் போலவே இயற்கையைப் புகழ்ந்துபாடும் இந்தக் கவிதைகள் சீனப்பண்பாட்டின் பொக்கிஷமாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்க் கவிதைகளைப் போலவே சீனக் கவிதைகளுக்கும் ஒரு நீண்ட மரபிருக்கிறது. டாங் மன்னரின் வம்சம் ஆட்சி செய்த காலமே …

காலைக்குறிப்புகள் -17 கடைசி மனிதன் Read More »

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன்

தபால்காரரை எதிர்பார்த்து எழுத்தாளர்கள் காத்திருப்பது குறித்து எழுத்தாளர் ஜான் பிரைன்  எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். பாப்லோ நெரூதாவிற்கு வரும் தபால்களைக் கொண்டு வருவதற்கென்றே தனியே ஒரு தபால்காரர் இருந்தார். தினமும் நூற்றுக்கணக்கில் கடிதங்கள் வருவது வழக்கம். அதில் பாதிக் காதல் கடிதங்கள். விண்ணுலகிலிருந்து ஒரு தேவதூதன் வருவது போலவே தபால்காரர் நம் வீதிக்கு வருகிறார். அவரது கையிலுள்ள கடிதங்கள் எத்தனை பேரை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றன என்று அவருக்குத் தெரியும். உண்மையில் அவர் தான் மகிழ்ச்சியின் தூதுவர். அதே …

காலைக்குறிப்புகள் 16 மகிழ்ச்சியின் தூதுவன் Read More »

காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம்.

கணிப்பொறி வந்தபிறகு கையால் எதையும் எழுதுவதேயில்லை. அரிதாக வெளியூர் பயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் கையால் எழுதியிருக்கிறேன். மற்றபடி 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிப்பொறியில் தான் எழுதுகிறேன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர்கள் பலரும் டைப்ரைட்டரில் எழுதினார்கள். பாப்லோ நெரூதா தலைமறைவாக ஒளிந்து வாழ்ந்த போது கூடத் தன் கையோடு ஒரு டைப்ரைட்டரை தூக்கிக் கொண்டே அலைந்தார். அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவிற்குக் கணிப்பொறியில் எழுதுவது என்றால் பயம். அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட கணிப்பொறியை வாழ்நாள் முழுவதும் …

காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம். Read More »

காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம்

ஒரு நாளில் இரண்டு பக்கங்கள் எழுதினால் போதும் ஒரு ஆண்டிற்குள் ஒரு நாவலை முடித்துவிடலாம் என்று நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் சரமாகோ சொல்கிறார். ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஒரு நாளில் இத்தனை சொற்கள் என்று வார்த்தைகளை எண்ணி எழுதக்கூடியவர்கள்.  அன்றாடம் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு எழுதுவது விருப்பமான வேலையாகிவிடும். ஆனால் புதிதாக எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு ஒரு நாளில் மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எழுதுவது என்பது இயலாத ஒன்றே. பெரும்பான்மை நாவலாசிரியர்கள் தனது நாவலுக்கான …

காலைக்குறிப்புகள் 14 நாவலின் வரைபடம் Read More »

காலைக்குறிப்புகள் 13 நாவலின் வழி தேடுதல்

நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலில் ரூத் ஸ்வைன் என்ற படுக்கையில் கிடக்கும் பெண் கதைகளுக்குள்ளாகத் தனது தந்தையைத் தேடுகிறாள். நாம் ஒவ்வொருவரும் ஒரு நீண்ட கதையே என்கிறது இந்த நாவல். We are our stories. We tell them to stay alive or keep alive என்றே நாவல் துவங்குகிறது. இளமையிலே நோயுற்ற ரூத் ஸ்வைன் படுக்கையிலே கிடக்கிறாள். சுற்றிலும் புத்தகங்கள். கதைகளுக்குள் தனது தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க …

காலைக்குறிப்புகள் 13 நாவலின் வழி தேடுதல் Read More »

காலைக்குறிப்புகள் 12 ஜூலியன் பார்ன்ஸின் கிளி

எழுத்தாளர் ஜூலியன் பார்ன்ஸின் அப்பா அம்மா இருவரும் பிரெஞ்சு ஆசிரியர்கள். அம்மாவின் பூர்வீகம் பிரான்ஸ். பிரிட்டனில் வசித்த போதும் அவர்கள் மனதிலிருந்தது பிரெஞ்சு தேசமும் அதன் பண்பாடுமே. வீட்டில் பிரெஞசு பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். ஜூலியன் பார்ன்ஸ் பள்ளியில் பிரெஞ்சு மொழி பயின்றார். விடுமுறைக் காலத்தினைக் கழிக்கப் பிரான்ஸ் போவது அவரது வழக்கம். பெரிய நகரங்களை விடவும் பிரான்சின் கிராமப்புறங்களைத் தான் மிகவும் நேசிப்பதாகக் கூறும் ஜூலியன் பார்ன்ஸ் பிரெஞ்சு இலக்கியத்தின் ஒப்பற்ற படைப்பாளியான குஸ்தாவ் …

காலைக்குறிப்புகள் 12 ஜூலியன் பார்ன்ஸின் கிளி Read More »