காலைக் குறிப்புகள்

காலைக்குறிப்புகள்-11 சந்தோஷமான குடும்பம்.

“Happy families are all alike; every unhappy family is unhappy in its own way.” என டால்ஸ்டாயின் அன்னாகரீனினா நாவலின் முதல்வரி உள்ளது. புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளரான உர்சுலா லெ குவின் தனது நேர்காணல் ஒன்றில் இந்த வரியை மறுத்து நாவலின் அழகான முதல்வரி என்பதற்கு மேல் இதற்கு மதிப்பில்லை என்கிறார். சந்தோஷமான குடும்பங்கள் யாவும் ஒன்று போல இருக்கின்றன என்பது கற்பனை. எந்த இரண்டு சந்தோஷமான குடும்பங்களும் ஒன்று போல …

காலைக்குறிப்புகள்-11 சந்தோஷமான குடும்பம். Read More »

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம்.

தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தை, சகோதரன் மற்றும் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நூலை வாசித்தேன். இதில் தனது 17 வயதில் தஸ்தாயெவ்ஸ்கி தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.  அந்தக் கடிதத்தில் உள்ள அவரது வரிகள் பின்னாளில் அவரது கதையின் குரலாக ஒலிப்பதைக் காண முடிகிறது. ஒரு தந்தைக்கு மகன் இப்படிக் கடிதம் எழுதுவானா  என வியக்க வைக்கிறது. பிரான்ஸ் காஃப்கா தனது தந்தையின் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள் பற்றி ஒரு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால் …

காலைக்குறிப்புகள்-10 தந்தைக்கு ஒரு கடிதம். Read More »

காலைக்குறிப்புகள் -9. ஒரு விளையாட்டு.

இதாலோ கால்வினோவின் Numbers in the Dark சிறுகதைத் தொகுப்பில் Making Do என்றொரு சிறுகதை உள்ளது. இன்றைய ஊரடங்கு வாழ்க்கையின் விசித்திரத்தை 1985லே கால்வினோ எழுதியிருக்கிறார். இலக்கியம் பலநேரம்வாழ்க்கையின் முன்னறிவிப்பு போலவே இருக்கும் என்பதன் அடையாளமிது. கால்வினோவின் சிறுகதைகள் விசித்திரமும் யதார்த்தமும் ஒன்று கலந்தவை. சமகாலப்பிரச்சனைகளை அவர் மாய எழுத்தின் மூலம் வெளிப்படுத்தக்கூடியவர். கதைமொழியிலும் கதை சொல்லும் விதத்திலும் கால்வினோ நிகழ்த்திய சாதனைகள் அபாரமானவை. Making Do கதையில் ஒரு நகரில் எல்லாமும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. எதற்காக …

காலைக்குறிப்புகள் -9. ஒரு விளையாட்டு. Read More »

காலைக்குறிப்புகள் -8 ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமை

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய செவ்வாய்க்கிழமை மதியத்தூக்கம் சிறுகதை மிகச்சிறப்பானது. இந்தக் கதையில் வாழைத்தோட்டங்களுக்கு இடையில் கரி என்ஜின் கொண்ட ரயில் செல்லும் காட்சி வருகிறது. கொலம்பியாவின் வாழைத்தோட்டங்களுக்கு நடுவில் வளர்ந்தவர் மார்க்வெஸ். அமெரிக்காவின் வாழைப்பழத் தேவைக்காகக் கொலம்பியா, ஈக்வடார், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் யுனைடெட் புரூட் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்தக் கதையில் முடிவேயில்லாத வாழைத்தோட்டங்களின் காட்சி தான் முதலில் இடம்பெறுகிறது. வாழைத்தோட்டங்களை ரயில் கடக்கும் போது காற்றில் ஈரம் பரவுகிறது. பசும் வாழைத்தார்கள் ஏற்றப்பட்ட …

காலைக்குறிப்புகள் -8 ஆகஸ்ட்மாத செவ்வாய்க்கிழமை Read More »

காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள்

யாசுனாரி கவாபத்தா Thank You என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதில் ஒரு பேருந்து ஒட்டுநர் தன்னைக் கடந்து செல்லும் குதிரைவண்டிகள், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுகிறார். உண்மையான மகிழ்ச்சியோடு அவன் தனக்காக வழிவிடும் அத்தனை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நன்றி சொல்லுகிறார். மலைப்பாதையில் செல்லும் அந்தப் பேருந்தில் ஒரு பெண் தனது மகளுடன் பயணம் செய்கிறாள். பேருந்து பயணத்தின் வழியே ஒட்டுநரின் அகம் முழுமையாக வெளிப்படுகிறது. சாலையில் செல்லும் குதிரைகளுக்குத் தனது பேருந்தின் வெளிச்சம் கண்ணை உறுத்தக்கூடும் என்பதால் …

காலைக்குறிப்புகள் 7 ஆயிரம் நன்றிகள் Read More »

காலைக்குறிப்புகள் 6 மொழியே அடையாளம்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஐசக் பாஷவிஸ் சிங்கர் இட்டிஷ் மொழியில் எழுதியவர். இவரது நோபல் பரிசு ஏற்புரையில் தனது மொழியைப் பற்றிச் சிங்கர் இப்படிக் குறிப்பிடுகிறார். ” language of exile, without a land, without frontiers, not supported by any government, a language which possesses no words for weapons, ammunition, military exercises” இட்டிஷ் இறந்து போன மொழியாகக் கருதப்படுகிறது. இறந்தவர்களின் கதையை எழுதுவதற்கு இறந்து போனதாகச் …

காலைக்குறிப்புகள் 6 மொழியே அடையாளம். Read More »

காலைக்குறிப்புகள் 5 எழுத்தில் பறப்பது.

அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிராட்பரி தனது நேர்காணல் ஒன்றில் அறிவியல் புனைவுகளுக்குத் தத்துவமே அடிப்படையானது. பிளேட்டோ தான் உலகின் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர். மனிதர்களின் லட்சிய வாழ்க்கையைப் பற்றி அவர் கண்ட கனவு தான் இன்றும் அறிவியல் புனைவின் அடிப்படையாக உள்ளது. உண்மையில் பதின்வயதில் நாம் கற்பனையில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம். அந்தக் கற்பனையான பறத்தலிலிருந்தே படைப்பு மனநிலை பிறக்கிறது. எழுத்தாளன் சொற்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. விண்ணிலிருந்து பெய்யும் மழை போல அது ஒரு …

காலைக்குறிப்புகள் 5 எழுத்தில் பறப்பது. Read More »

காலைக்குறிப்புகள் -4 மழையும் குடையும்

ரிச்சர்ட் கார்சியா என்ற கவிஞரின் கவிதை ஒன்றில் குடை ஒரு காலத்தில் சீனர்களின் முக்கியமான ஆயுதமாக விளங்கியது. இன்றோ அது வெறும் அலங்காரப் பொருள். குடை தன் வரலாற்றை மறந்துவிட்டது என்ற வரியை வாசித்தேன். குடை பற்றி உலகெங்கும் நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. குடை ஒரு காலத்தில் வசதியானவர்களின் அடையாளம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பான் என்று ஒரு பழமொழி இருக்கிறது. மழைக்காலத்தில் தான் குடையை தேடுவார்கள். இன்று மழையோ வெயிலோ குடை என்பது கூடவே வைத்திருக்கும் …

காலைக்குறிப்புகள் -4 மழையும் குடையும் Read More »

காலைக்குறிப்புகள் -3 மணலின் விதி

Collection of Sand என்ற கட்டுரைத் தொகுப்பில் இதாலோ கால்வினோ விசித்திரமான பழக்கம் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பெண் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருந்து பிடி மண் அள்ளிக் கொண்டுவந்து அதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டுப் பாதுகாத்து வைப்பது வழக்கம். அந்த ஜாடியின் வெளியே அது எந்த ஊரில் எடுக்கப்பட்ட மண் என்று எழுதி வைத்துக் கொள்வார். இப்படி அவர் சேகரித்தவற்றை ஒரு முறை கண்காட்சியில் வைத்திருக்கிறார். அதைப் பார்வையிட்ட கால்வினோ …

காலைக்குறிப்புகள் -3 மணலின் விதி Read More »

காலைக்குறிப்புகள்-2 காலமெனும் புதிர்.

Cosmic time is the same for everyone, but human time differs with each person. Time flows in the same way for all human beings; every human being flows through time in a different way. என நோபல் பரிசு பெற்ற யாசுனாரி கவாபத்தா (Yasunari Kawabata ) கூறுகிறார். காலம் பற்றிய சிந்தனையில்லாத எழுத்தாளனே கிடையாது. அதிலும் கடந்தகாலத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்பது …

காலைக்குறிப்புகள்-2 காலமெனும் புதிர். Read More »