சினிமா

பூமியை வணங்குகிறார்கள்

புனித யாத்திரைக்குச் செல்லுவது உலகெங்கும் உள்ள வழக்கம். எல்லாச் சமயங்களிலும் புனித யாத்திரை முக்கியக் கடமையாகக் குறிப்பிடப்படுகிறது. நடந்தே புனித தலங்களுக்குச் செல்வது உயர்வான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பாதயாத்திரை செல்வது தலைமுறையாகத் தொடரும் பழக்கம். கிறிஸ்துவச் சமயத்திலும் இது போன்ற புனித யாத்திரைகள் இருக்கின்றன. காண்டர்பரி தேவாலயத்திற்குப் பாதயாத்திரை போனவர்களின் கதையைத் தான் ஆங்கிலத்தில் சாசர் காண்டர்பரி கதைகள் என எழுதியிருக்கிறார். திபெத்திலுள்ள பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் செல்லும் புனித யாத்திரை வியப்பூட்டக்கூடியது. லாசாவிலுள்ள பௌத்த …

பூமியை வணங்குகிறார்கள் Read More »

ஸ்ரீதேவி

இந்திய திரையுலகின் ஒப்பற்ற நாயகி ஸ்ரீதேவி மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எண்பதுகளின் இளைஞர்களில் ஸ்ரீதேவியைக் காதலிக்காதவர்களேயில்லை. ஸ்ரீதேவி பற்றி இயக்குனர் ராம் கோபால் வர்மா எழுதிய கட்டுரையை கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் தமிழில் மொழியாக்கம் செய்து சில ஆண்டுகள் முன்பாக வெளியிட்டிருந்தார் அழியாத நினைவுகளில் வாழும் ஸ்ரீதேவிக்காக  இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன் •• எனது ஸ்ரீ – ராம் கோபால் வர்மா தமிழில்: ஷங்கர் விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, …

ஸ்ரீதேவி Read More »

பால்சாக்கின் சிற்பம்

நவீன சிற்பங்களின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் சிற்பி ரோடின் பற்றிய Rodin (2017) திரைப்படம் பார்த்தேன். ஒவியர்கள், சிற்பிகள், எழுத்தாளர்கள் எனப் பலரது வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பிரெஞ்சில் வெளியாகியுள்ளன. கலையாளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க எடுப்பது தனிப்பிரிவாகவே உள்ளது. உண்மையில் அதுவொரு சவால். ஒரு கலைஞனின் முழுவாழ்க்கையைத் திரையில் காட்டிவிட முடியாது. ஆகவே அவரது வாழ்வின் பிரதான சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டே திரைப்படம் உருவாக்கபடுகிறது. ரோடினுக்கும் அவரது மாணவியும் காதலியுமாக இருந்த கேமிலோ கிளெடலிற்குமான உறவும் …

பால்சாக்கின் சிற்பம் Read More »

நீதியின் பதாகை

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரையிலுள்ள Three Billboards Outside Ebbing, Missouri படத்தை நேற்று பார்த்தேன். இப்படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ளது. நிச்சயம் இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகள் கிடைக்ககூடும். குறிப்பாக நீதிக்காகப் போராடும் தாயாக நடித்துள்ள Frances McDormand விருதை வெல்வார் என நம்புகிறேன். ஏழு மாதங்களுக்கு முன்பு, வன்புணர்ச்சி செய்து கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் எனக் கேட்டு மில்ட்ரட் போராடுகிறாள். காவல்துறை குற்றவாளி யாரெனக் கண்டறிந்து …

நீதியின் பதாகை Read More »

‘பத்மாவத்’: வரலாற்றின் மீது படரும் வெளிச்சம்

மிகுந்த சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளான ‘பத்மாவத்’ திரைப்படத்தைப் பார்த்தேன். வரலாற்றைப் படமாக்குவது எளிதில்லை. பெரும்பொருட்செலவில் பலநூறு மனிதர்களை ஒருங்கிணைத்துப் பிரம்மாண்டமாக படம் இயக்குவது பெரும் சவால். சஞ்சய் லீலா பன்சாலி இதில் பெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார் . கொண்டாட்டம்தான் படத்தின் ஆதாரத் தொனி. ஒளிரும் ஓவியங்களாக காட்சிகள் நகர்கின்றன. பிரம்மாண்ட அரங்குகள். வியப்பூட்டும் போர்களக் காட்சிகள், இனிமையான ஆடல்பாடல், சிறந்த நடிப்பு என இப்படம் பொழுதுபோக்கு சினிமாவின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. வீண்சந்தேகத்தின் பெயரால் உருவான எதிர்ப்புகள், போராட்டங்கள் …

‘பத்மாவத்’: வரலாற்றின் மீது படரும் வெளிச்சம் Read More »

லூவரின் பெருமை.

அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் மிகச்சிறந்த இயக்குனர். அவரது இயக்கத்தில் வெளியான Mother and Son, Father and Son, Moloch போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன். ரஷ்யாவின் புகழ்பெற்ற Hermitage Museumத்தை ஆவணப்படுத்துவது போலச் சிங்கிள் ஷாட் மூவியாக Russian Ark என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார் சுக்ரோவ். இது சினிமா வரலாற்றில் முக்கியமான படம். இப்படத்தின் பிறகே பல்வேறு நாடுகளிலும் அருங்காட்சியகம் குறித்த திரைப்படங்கள் உருவாகத் துவங்கின. சுக்ரோவின் சினிமா கவித்துவமானது. குறிப்பாக Mother and Son, Father …

லூவரின் பெருமை. Read More »

துரத்தும் பணம்

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் மராத்திபடங்கள் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றுவருகின்றன. மராத்தி சிறுகதைகளில் இருந்தோ, நாவல்களில் இருந்தோ படத்திற்கான ஆதாரக்கதையைப் பெற்றுக் கொண்டு இளம் இயக்குனர்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அத்துடன் ஐம்பது லட்ச ரூபாய்க்குள் படத்தை முடித்துவிட முடிகிற வாய்ப்புகளும் அங்குள்ளன. மல்டிபிளெக்ஸ் அரங்குகளில் கட்டாயம் ஒரு திரை மராத்தி திரைப்படங்களுக்கு ஒதுக்கபட வேண்டும் என்பது மாநில விதிமுறை. ஆகவே விநியோக முறையும் சாதகமாகவுள்ளது. ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் பலரும் மராத்தி …

துரத்தும் பணம் Read More »

வான்கோவின் கடைசி கடிதம்

ஓவியர் வான்கோவின் (Vincent vanGogh)வாழ்க்கை குறித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் LOVING VINCENT. திரையில் இப்படத்தைக் காண்பது பரவசமூட்டுகிறது. வான்கோவின் ஒவியங்கள் உயிர்பெற்று கண்முன்னே கடந்து போகின்றன. அவர் வரைந்த உருவங்கள் நம்முன்னே நடமாடுகிறார்கள். வான்கோவின் சீற்றமிக்கக் கோடுகள் திரையில் அலைபோல எழுந்து மறைகின்றன. வான்கோவின் நீலம் வான்கோவின் மஞ்சள், சிவப்பு என அவரது வண்ணக்கலவைகளே படத்தின் ஆதாரவண்ணங்கள். ஒவியத்திலிருந்தே ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தின் சாதனைப்படைப்பு இதுவென்பேன். அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் …

வான்கோவின் கடைசி கடிதம் Read More »

அறம் வென்றது

கோபி நயனார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அறம் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். அற்புதம். தமிழ்சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படத்தை இயக்கியிருக்கிறார் கோபி நயினார். பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற மாயையை உடைத்து அரங்கு நிரம்பி வழிகிறது. கடைசிக்காட்சியின் போது அருகிலுள்ள இருக்கையில் இருந்தவர்கள் பீறிடும் கண்ணீரை துடைக்கமுடியாமல் விசும்பினார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திரையில் வெளிப்படும் உண்மை. திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து …

அறம் வென்றது Read More »

கடைசி வைஸ்ராய்

Gurinder Chadha இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்Viceroy’s House. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். லண்டனில் வசிக்கும் குரிந்தர் Bend It Like Beckham, Bride and Prejudice போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர். இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் தேசப்பிரிவினையை எதற்காக உருவாக்கினார். அவர் முன்னிருந்த சவால்கள் எவை என்பதையே இப்படம் சித்தரிக்கிறது. சிறந்த கலைவடிவமைப்புடன் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் உருவாக்கபட்டுள்ள இப்படம் வைஸ்ராய் இல்லத்தின் பிரம்மாண்டத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இன்றைய ஜனாதிபதி மாளிகையே அன்றைய வைஸ்ராய் மாளிகை.  ஆகவே அதன் …

கடைசி வைஸ்ராய் Read More »