அறிவிப்பு

கோவையில்

நவம்பர் 14 வியாழன் மாலை கோவை ப்ரூக்பீல்ட் மாலில் உள்ள ஒடிஸி புத்தகக் கடையில் வாசகர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் புத்தக வாசிப்பு குறித்து உரையாற்றுகிறேன். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

வெண்ணிற நினைவுகள்

இந்து தமிழ்திசை நாளிதழில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். வெண்ணிற நினைவுகள் என்ற இந்தத் தொடர்  ஞாயிற்றுகிழமை தோறும் வெளியாகும். தமிழ் சினிமாவின் அறியப்படாத  விஷயங்களை முதன்மைப்படுத்தி இந்தத் தொடரை எழுதவுள்ளேன். இந்தத் தொடரை https://www.hindutamil.in/ ஆன்லைனிலும் வாசிக்கலாம். •••

அஞ்சலி

நண்பர் அருண்மொழியின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கூட எனது சிறுகதையை மையமாகக் கொண்ட நாடகம் ஒன்றை நிகழ்த்துவதாகச் சொல்லி அதைக் காணுவதற்காக அழைத்தார். வெளியூரில் இருக்கிறேன். வர இயலவில்லை என்றேன். தொலைப்பேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அருண்மொழியை இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். அவர் இயக்கிய காணி நிலம், ஏர் முனை  போன்ற  படங்கள் நிறையத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டுள்ளன. சினிமா பயிலரங்குகள் நிறைய நடத்தியிருக்கிறார். திரைப்படக் கல்லூரியில் ஆசிரியராகப் …

அஞ்சலி Read More »

பொன்னீலன் 80

பொன்னீலன் 80- விழா நாகர்கோவிலில் வருகின்ற 16 நவம்பர் 2019 அன்று நடைபெறுகிறது. நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளி பொன்னீலன். அவர் பொதுவுடைமைச் சிந்தனையாளர் , முற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர். சிறந்த பேச்சாளர். பண்பாளர். ஊற்றில் மலர்ந்தது, கரிசல், கொள்ளைக்காரர்கள், தேடல், புதிய மொட்டுகள், புதிய தரிசனங்கள், மறுபக்கம் முதலிய நாவல்களை எழுதியிருக்கிறார்.  அடித்தள மக்களே அவரது நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள். பொன்னீலன் எழுத்தில் நையாண்டியும், கேலியும் கூர்மையான அரசியல் விமர்சனமும் தனித்துவமாக வெளிப்படுகின்றன.. குமரி …

பொன்னீலன் 80 Read More »

சேலத்தில்

சேலத்திலுள்ள பாலம் புத்தகக் கடை சார்பில் நடைபெறும் பாலம் வாசகர் சந்திப்பில் அக்டோபர் 27 ஞாயிறு காலை 10.30 மணிக்கு எனது நாவல் ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை குறித்த அறிமுகக்கூட்டம் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும் படி அன்புடன் அழைக்கிறேன் ••

தீபாவளி சலுகை

தேசாந்திரி பதிப்பகம் எனது நூல்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது. தொடர்புக்கு https://www.desanthiri.com/ தேசாந்திரி பதிப்பகம் D1,Gangai Apartments,110 Sathya garden, Saligramam Chennai, India 60093 தொலைபேசி 044 23644947 அலைபேசி    096000 34659

கொச்சி இலக்கிய விழா

கேரளாவின் கொச்சியில்   நடைபெறவுள்ள இலக்கிய விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன். நவம்பர் 4 மற்றும்  5 தேதிகளில் கொச்சியில் இருப்பேன் ••

வாழ்த்துகிறேன்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுத்தாளர் வண்ணதாசன்.  பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் இருவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கிறது. இதற்கான பட்டமளிக்கும் விழா இன்று அக்டோபர் 22 -ம் தேதி தஞ்சையில் நடைபெறுகிறது. தனது கவித்துவ எழுத்துகளால் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ந்தவர் வண்ணதாசன். அன்பின் துணை கொண்டு இந்த உலகின் குரூரங்களை, அபத்தங்களை வென்றுவிட முடியுமெனக் காட்டும்  அற்புதமான படைப்புகளை உருவாக்கியவர் வண்ணதாசன். ரெனார், மோனே போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள் இயற்கையைத் தனது தூரிகையின் வழியே வசீகரமான ஒவியங்களாக …

வாழ்த்துகிறேன் Read More »