நான்கு புதிய நூல்கள்
எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.
எனது நான்கு புதிய நூல்கள் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படவுள்ளன.
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. இந்த நூல் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்துகிறார் ப. சேரலாதன். ஜெர்மன் மொழி ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான சேரலாதன் சென்னையில் உள்ள கதே நிறுவத்தில் பணியாற்றுகிறார்.
கவிஞர் மதாரின் புதிய கவிதைத்தொகுப்பு மாயப்பாறை வெளியீட்டு விழா டிசம்பர் 18 மாலை சென்னை அண்ணா நூலக அரங்கில் நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறேன். அழிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது, அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
நூல் வாசிப்பு முற்றம் சார்பாக இன்று இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக யாமம் நாவல் குறித்த கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.
சிறார் நாவல் விமர்சனம் – கே.பாலமுருகன். மலேசியா பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச் செல்ல முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பென்பது சிறார்களின் மனத்தை மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டாட்டத்திற்குள்ளும் ஆழ்த்தக்கூடிய சாத்தியங்களை உடையதாகும். ஒரு சிறார் நாவல் அல்லது சிறார் கதைகளை வாசிக்கும்போது …
முன்பணம் கொடுத்த பதிப்பாளரின் ஒப்பந்தப்படி முப்பது நாட்களுக்குள் ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்டது. அதற்காக இளம் பெண்ணான அன்னாவை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டார். அப்போது அன்னாவின் வயது 20. அந்த நாட்களை விவரிக்கும் Twenty six days in the life of Dostoevsky திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது .Aleksandr Zarkhi இயக்கியுள்ள இப்படம் 1981ல் வெளியானது. இந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை …
அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், இயற்கையியலாளர் எமர்சன் குறித்த சிறப்புரை ஒன்றை நிகழ்த்துகிறேன் டிசம்பர் -25. 2024 – புதன்கிழமை கவிக்கோ மன்றத்தில் இந்த உரை நடைபெற இருக்கிறது. டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சிறப்புரையை நிகழ்த்துகிறேன்
Flaubert said: “Writing is just another way of living.” எழுத விரும்புகிறவர்களுக்கு இது தான் முதல்பாடம். ஒரு கதையோ, கவிதையோ எழுத ஆசைப்படுகிறவர்களுக்கு அது குறித்த அறிமுகப்பாடங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அதற்காக எழுதப்பட்ட புத்தகங்களில் இரண்டு மிகவும் முக்கியமானது. ஒன்று கவிஞர் ரில்கே எழுதிய Letters to a Young Poet, Franz Xaver Kappus என்ற இளம் கவிஞனுக்கு ரில்கே எழுதிய பத்து கடிதங்களின் வழியாகக் கவிதையின் ஆதாரங்கள். நுட்பங்கள் மற்றும் …
எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம். இதன் வெளியீட்டு விழா டிசம்பர் 25 மாலை சென்னை சிஐடி நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது இந்த நிகழ்வில் எனது நான்கு நூல்கள் வெளியாகின்றன. கவளம் நூலிற்கான புதிய அட்டை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். மிக அழகாக உள்ளது.
எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. (25.12.24) அதில் எனது நான்கு புதிய நூல்கள் வெளியாகின்றன. சிறார்களுக்காக நான் எழுதியுள்ள புத்தகம் தபால் பெட்டி எழுதிய கடிதம். இக்கதை தபால்பெட்டிக்கும் ஒரு பள்ளிச் சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பினைப் பேசுகிறது ஆயிரமாயிரம் தபால்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தபால்பெட்டி தன் வாழ்நாளில் ஒரேயொரு கடிதம் எழுதுகிறது அந்தக் கடிதம் வழியாக அதன் கடந்தகால நினைவுகள் விவரிக்கபடுகின்றன.