அறிவிப்பு

கரிசல் இலக்கியத் திருவிழா

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரிசல் இலக்கியத் திருவிழா டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் சிவகாசியில் நடைபெறுகிறது. கரிசல் நிலத்தின் பண்பாடு மற்றும் இலக்கியங்கள் குறித்த கருத்தரங்குகளும் நிகழ்த்துகலைகளும் இணைந்த சிறப்பான விழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

தூதுவன்

காஃப்காவின் அரசனின் தூதுவன் என்ற குறுங்கதையில் சாவுப்படுக்கையில் உள்ள மன்னர் ஒரு ரகசிய செய்தியை தெரிவிக்கத் தூதுவன் ஒருவனை வரவழைக்கிறார். அவனை அருகில் மண்டியிடச்செய்து காதோடு காதாகச் செய்தியைச் சொல்கிறார் அவன் தான் சொல்லியதை சரியாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறானா என மன்னர் கேட்டு உறுதிபடுத்திக் கொள்கிறார். அந்த அறையிலிருந்து தூதுவன் வெளியேறுவதற்குள் மன்னர் இறந்துவிடுகிறார். ரகசிய செய்தியோடு தூதுவன் தனது பயணத்தைத் துவங்குகிறான். அரண்மனையில் திரண்டிருந்த கூட்டத்தைத் தாண்டி வெளியேறி போக முடியவில்லை. முட்டிமோதி தனக்கான வழியை …

தூதுவன் Read More »

கவளம்

எனது புதிய சிறுகதைத் தொகுப்பு கவளம் டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. இந்த நூல் குறித்த அறிமுகவுரையை நிகழ்த்துகிறார் ப. சேரலாதன். ஜெர்மன் மொழி ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான சேரலாதன் சென்னையில் உள்ள கதே நிறுவத்தில் பணியாற்றுகிறார்.

மதார் கவிதை நூல் வெளியீடு

கவிஞர் மதாரின் புதிய கவிதைத்தொகுப்பு மாயப்பாறை வெளியீட்டு விழா டிசம்பர் 18 மாலை சென்னை அண்ணா நூலக அரங்கில் நடைபெறுகிறது. இந்த நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறேன். அழிசி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது, அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

யாமம் – இணைய வழி கருத்துரை

நூல் வாசிப்பு முற்றம் சார்பாக இன்று இரவு ஏழு மணிக்கு இணைய வழியாக யாமம் நாவல் குறித்த கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சிரிக்கும் வகுப்பறை

சிறார் நாவல் விமர்சனம் – கே.பாலமுருகன். மலேசியா பாடநூலைத் தாண்டிய வாசிப்பென்பது பெரும்பாலும் ‘எதற்கு, என்ன நன்மை’ என்கிற கேள்விகளுக்குள் சுழன்று தவித்துக் கொண்டிருக்கிறது. பாடநூல் அறிவென்பது மாணவர்களின் வயது, ஆற்றல், திறன், கருப்பொருள் என்பதைக்குட்பட்டு தயாரிக்கப்படுவதாகும். அதனையொட்டி போதிக்கும்போது மேற்கோள்களாக இலக்கியம், வரலாறு, சமூகவியல் எனப் பலவற்றை அணுகிச் செல்ல முடியும். ஆனால், இலக்கிய வாசிப்பென்பது சிறார்களின் மனத்தை மகிழ்ச்சிக்குள்ளும் கொண்டாட்டத்திற்குள்ளும் ஆழ்த்தக்கூடிய சாத்தியங்களை உடையதாகும். ஒரு சிறார் நாவல் அல்லது சிறார் கதைகளை வாசிக்கும்போது …

சிரிக்கும் வகுப்பறை Read More »

தஸ்தாயெவ்ஸ்கி திரைப்படம்

முன்பணம் கொடுத்த பதிப்பாளரின் ஒப்பந்தப்படி முப்பது நாட்களுக்குள் ஒரு நாவலை எழுதி முடிக்க வேண்டிய கட்டாயம் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஏற்பட்டது. அதற்காக இளம் பெண்ணான அன்னாவை சுருக்கெழுத்தாளராக வைத்துக் கொண்டார். அப்போது அன்னாவின் வயது 20. அந்த நாட்களை விவரிக்கும் Twenty six days in the life of Dostoevsky திரைப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது .Aleksandr Zarkhi இயக்கியுள்ள இப்படம் 1981ல் வெளியானது. இந்த நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம் என்றொரு நாடகத்தை …

தஸ்தாயெவ்ஸ்கி திரைப்படம் Read More »

எமர்சன் – சிறப்புரை

அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர், இயற்கையியலாளர் எமர்சன் குறித்த சிறப்புரை ஒன்றை நிகழ்த்துகிறேன் டிசம்பர் -25. 2024 – புதன்கிழமை கவிக்கோ மன்றத்தில் இந்த உரை நடைபெற இருக்கிறது. டிசம்பர் 25 மாலை ஆறு மணிக்கு எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த சிறப்புரையை நிகழ்த்துகிறேன்

இரண்டு வழிகாட்டிகள்

Flaubert said: “Writing is just another way of living.” எழுத விரும்புகிறவர்களுக்கு இது தான் முதல்பாடம். ஒரு கதையோ, கவிதையோ எழுத ஆசைப்படுகிறவர்களுக்கு அது குறித்த அறிமுகப்பாடங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அதற்காக எழுதப்பட்ட புத்தகங்களில் இரண்டு மிகவும் முக்கியமானது. ஒன்று கவிஞர் ரில்கே எழுதிய Letters to a Young Poet, Franz Xaver Kappus என்ற இளம் கவிஞனுக்கு ரில்கே எழுதிய பத்து கடிதங்களின் வழியாகக் கவிதையின் ஆதாரங்கள். நுட்பங்கள் மற்றும் …

இரண்டு வழிகாட்டிகள் Read More »