அறிவிப்பு

புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நிகழ்விற்குத் தலைமேற்று சிறப்பித்தார் தொழிலதிபர் அம்பாள் ஆர் முத்துமணி. அவர் தேர்ந்த இலக்கிய வாசகர். என் மீது அன்பு கொண்ட நண்பர். நிகழ்விற்கு காளிமார்க் நிறுவன உரிமையாளர் தனுஷ்கோடி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார். கவளம் நூல் குறித்து சேரலாதன் சிறப்பான உரையை நிகழ்த்தினார். சிறுகதையின் பல்வேறு முனைகளைத் தொட்டு பேசியது …

புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள் Read More »

டிசம்பர் 25 புத்தக வெளியீடு

நாளை மாலை எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. இதில் எமர்சன் பற்றி சிறப்புரை நிகழ்த்துகிறேன் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

தேசாந்திரி அரங்கு எண்

48வது சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எனது அனைத்து புத்தகங்களும் அங்கே கிடைக்கும். எண் 334 மற்றும் 335

தேவதச்சன் புதிய கவிதைத் தொகுப்பு

தேவதச்சனின் புதிய கவிதைத் தொகுப்பு தேதியற்ற மத்தியானம் கெட்டி அட்டை ( Hard Bound ) பதிப்பாக வெளியாகியுள்ளது. முந்தைய பதிப்பில் காணப்பட்ட அச்சுப்பிழைகள் நீக்கப்பட்டு சிறப்புப் பதிப்பாக தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. விலை ரூ 300. சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பக அரங்கு எண் 334 மற்றும் 345ல் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் •• தேவதச்சனின் 2016 வரையிலான முழுக்கவிதைத் தொகுப்பினையும் தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. சில தினங்களில் இந்த நூல் வெளியாகும்.

கிதார் இசைக்கும் துறவி

2024ல் கவனம் பெற்ற நூல்களின் பட்டியலை இந்து தமிழ்திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் எனது கிதார் இசைக்கும் துறவி சிறுகதை நூல் இடம் பெற்றுள்ளது.

சாகித்ய அகாதமி விருது

2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது ஆ.இரா.வேங்கடாசலபதியின் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 என்னும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். பாரதி, புதுமைப்பித்தன், வஉசி என அவரது அரிய பதிப்புப் பணிகள் மற்றும் ஆய்வுகள் சிறப்பானவை. சங்க கவிதைகளைத் தங்கப்பாவுடன் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறந்த வரலாற்று அறிஞர். தமிழ் பதிப்பு வரலாற்றை ஆய்வு செய்து புதிய வெளிச்சத்தைக் காட்டியவர். அவர் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

அழைப்பிதழ்

டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

மூன்று மெய்யியல் நாவல்கள்

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் மூன்று மெய்யியல் நாவல்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். •• நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள். இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ் மன். காளி கோவிலில் துண்டிக்கபட்ட தலை மறுஉயிர்ப்பு பெறும் போது உடல் மாறிவிடுகிறது. இதனால் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆணின் உடலையும் மற்றொரு ஆணின் தலையையும் நேசிக்கும் …

மூன்று மெய்யியல் நாவல்கள் Read More »

சென்னை கலை இலக்கிய விழா.

நாளை சென்னையில் நடைபெறும் கலை இலக்கிய விழாவில் எனது ஆங்கில நூலின் மொழியாக்கம் குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. The Man Who Walked Backwards and Other Stories நூலின் மொழிபெயர்ப்பாளர் நீதிநாயகம் பிரபா ஸ்ரீதேவனுடன் அனில் ஸ்ரீனிவாசன் உரையாடுகிறார் இடம் : Madras School Of EconomicsGandhi Mandapam Rd, Behind Government Data Center, Surya Nagar, Kotturpuram, Chennai நேரம் : மதியம் 3 மணி. அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் …

சென்னை கலை இலக்கிய விழா. Read More »

எமர்சன் / சிறிய அறிமுகம்.

அமெரிக்கக் கவிஞர், இயற்கையியலாளர் ரால்ப் வால்டோ எமர்சன் பற்றிச் சிறப்புரை  நிகழ்த்த இருப்பதாக அறிவித்த நாளிலிருந்து பலரும் அவரைப் பற்றி ஏன் இப்போது சிறப்புரை ஆற்றுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள் இன்றைய வாசகர்கள் பலருக்கும் ரால்ப் வால்டோ எமர்சன் அறிமுகமாகியிருக்கவில்லை.  அவர் 200 வருஷங்களுக்கு முற்பட்டவர். எமர்சனின் முக்கியப் படைப்புகள் தமிழில் மிகவும் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. வி.ஆர்.எம் செட்டியார் மொழியாக்கம் செய்த விதியும் தன்னம்பிக்கையும் (எமர்ஸன் கட்டுரைகள்) மற்றும் அறிமுகநூலான எமர்ஸன் சிந்தனைகள் ஜெயமோகன் மொழியாக்கம் செய்த …

எமர்சன் / சிறிய அறிமுகம். Read More »