திருச்சியில்
நாளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெறும் கனவுமெய்ப்பட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நாளை திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் நடைபெறும் கனவுமெய்ப்பட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
நண்பர் ஆம்பூர் அசோகன் சமீபத்தில் பிராக் நகருக்குச் சென்றிருந்தார். காஃப்கா நூற்றாண்டுக் கொண்டாட்டங்களை நேரில் கண்டு மகிழ்ந்திருக்கிறார். காஃப்கா அருங்காட்சியம் மற்றும் நகரிலுள்ள காஃப்காவின் சுழலும் தலை, புத்தகக் கடைகள், நூலகம் குறித்து வியந்து புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார் அங்கிருந்து எனக்காக சில பரிசுப்பொருட்களை வாங்கி வந்திருக்கிறார். இன்று அவற்றை அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும். புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்ற அசோகன் தேர்ந்த இலக்கிய வாசகர். சர்வதேச இலக்கியங்களை ஆழ்ந்து …
எனது எலியின் பாஸ்வேர்ட் சிறார் நூலை மேகலா உதயசங்கர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நூல் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
இந்து தமிழ் நாளிதழில் (07.07.24) மகாபாரத நிகழ்வை மையமாகக் கொண்டு நான் எழுதிய சிறுகதை குறித்து சுப்பிரமணி இரமேஷ் தனது தொன்மம் தொட்ட கதைகளில் எழுதியிருக்கிறார். ஆழ்ந்து வாசித்துச் சிறப்பாக எழுதியுள்ள சுப்பிரமணி இரமேஷிற்கு மனம் நிறைந்த நன்றி.
எனது இடக்கை நாவல் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ஜனவரியில் வெளியாக கூடும்.
காஃப்கா எழுதிய கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து நாளை உரையாற்றுகிறேன். அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்ளலாம். நுங்கம்பாக்கம் ஜெர்மன் பண்பாட்டு மையமது. புனைவில் நாம் காணும் காஃப்கா வேறு. நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காணும் காஃப்கா வேறு. அவர் தஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்தே உருவாகியிருக்கிறார். அதற்கான சான்றுகளை அவரது நாட்குறிப்பு மற்றும் கடிதங்களில் காண முடிகிறது. நீச்சலில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்த, உடல் நலத்தினைப் பேணுவதில் அக்கறை கொண்டிருந்த, தீவிரமாக வாசிக்க கூடிய, இசையில் ஆர்வமான காஃப்காவை இதில் …
கோவை புத்தகக் கண்காட்சிக்கான புதிய வெளியீடு -1 சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு. இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காஃப்கா மறைந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. இதனைக்குறிக்கும் வகையில் சென்னையிலுள்ள, Goethe-Institut சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. ஜூலை 4 மாலை ஆறுமணிக்கு காஃப்காவின் கடிதங்கள் மற்றும் நாட்குறிப்புகள் குறித்து உரை வழங்குகிறேன். அத்துடன் காஃப்கா குறித்த உரையாடலில் கலந்து கொள்கிறேன். இந்த நிகழ்வில் ப.சேரலாதன், ரம்யா ராமஸ்வாமி கலந்து கொள்கிறார்கள். அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• நாள் : 4. ஜூலை 2024 நேரம்: மாலை 6-7pm இடம்: கோதே இன்ஸ்டிடியூட் …
2024 Valley of Words Book Awards இறுதிப்பட்டியலில் எனது சிறுகதைத் தொகுப்பு The Man Who Walked Backwards and Other Stories இடம் பெற்றுள்ளது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. Valley of Words என்பது டேராடூனில் நடைபெறும் சர்வதேச இலக்கிய விழாவாகும்.
“அப்பாவின் வருகை“ சிறுகதை குறித்த இருவரின் பார்வைகள் கோ.புண்ணியவான். மலேசியா அப்பாவின் வருகை சிறுகதையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அலாதியான வாசிப்பின்பம் உண்டாகிறது. அப்பா எந்த முக்கியக் காரணமாகவும் சண்டிகார் வரவில்லை. தன் மகனைப் பார்க்கவே வருகிறார். இக்கதையில் அப்பா தன் மகனுக்குச் சிறு பிராயத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அதனையே மகனும் அப்பா தனக்குச் செய்ததற்கு ஈடான அன்போடு செய்கிறார். இந்த நுணுக்கம் தான் கதையைக் கலைநயமிக்கதாக்குகிறது. அப்பாவின் வருகையை வேற்றிடத்தில் வேலை செய்யும் மகன்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. …