அறிவிப்பு

சி. சு. செல்லப்பா உரை.

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சி. சு. செல்லப்பா குறித்து உரையாற்றினேன். ஒரு மணி நேர விரிவான உரை. தமிழ்மொழித்துறை மாணவர்களும் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் நிறைந்த அவை. சி.சு.செல்லப்பாவின் பேரன் கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூரிலிருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த உரையில் செல்லப்பாவின் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள், அவரது, சிறுகதைகள் , புதுக்கவிதை உருவான விதம், அவர் முன்னெடுத்த அமெரிக்க இலக்கிய விமர்சன முறை, அவரது இலக்கிய நண்பர்கள், செல்லப்பாவின் …

சி. சு. செல்லப்பா உரை. Read More »

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில்

9வது நெல்லை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் அ.மாதவையா வாழ்வும் எழுத்தும் குறித்து உரையாற்றுகிறேன். அ. மாதவையா தமிழின் முன்னோடி நாவலாசிரியர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலியில் படித்திருக்கிறார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றவர் Salt Inspector ஆகப் பணியாற்றியுள்ளார். முத்துமீனாக்ஷி, பத்மாவதி சரித்திரம், கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எம். கிருஷ்ணன் …

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் Read More »

சி.சு. செல்லப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை சார்பில் நடைபெறும் எழுத்தாளர் சி.சு. செல்லப்பா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். மெரினா வளாக அரங்கில் 18.2.26 புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

திருவாரூர் புத்தகத் திருவிழாவில்

4வது திருவாரூர் புத்தகத் திருவிழா பிப்ரவரி 8 முதல் 17 வரை நடைபெறுகிறது இதில் பிப்ரவரி 10 மாலை எழுத்தாளரின் பயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்

கோவையில்

கவிஞர் சிற்பி அவர்களின் 90 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது நினைவலைகளின் தொகுப்பான நான் ஒரு வானம்பாடி நூலின் வெளியீட்டு விழா ஜனவரி 31 சனிக்கிழமை காலை கோவை கேபி ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்

நன்றி

49வது சென்னை புத்தகத் திருவிழா இன்றோடு நிறைவுபெற்றது. கடந்த இரண்டு வாரங்களாக நிறைய வாசகர்களை, நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. எனது தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து புத்தகங்கள் வாங்கி ஆதரித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த முறை இளைஞர்களே அதிக அளவில் புத்தகங்களை வாங்கினார்கள். தனது அப்பா அம்மாவிற்கு, தோழிக்கு, நண்பனுக்கு, உறவுகளுக்கு என அவர்கள் கைநிறைய புத்தகங்களை வாங்கிக் கையெழுத்து பெற்றுக் கொண்டது வாசிப்பில் உருவாகியுள்ள  புதிய மாற்றத்தின் அடையாளமாகவே …

நன்றி Read More »

லண்டனில் நரிகள்

தனது 99வது வயதில் டேவிட் அட்டன்பரோ இயக்கியுள்ள வைல்ட் லண்டன் ஆவணப்படம் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. பிபிசி இதனைத் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடங்களும் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்களும் கொண்ட லண்டன் மாநகரம் எண்ணிக்கையற்ற பூங்காங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நகரில் வளரும் விலங்குகளை அட்டன்பரோ ஆவணப்படுத்தியிருக்கிறார். லண்டன் நகரில் உலவும் நரிகளைக் காண ஆச்சரியமாகவுள்ளது. குறிப்பாகப் புதரிலிருந்து திடீரென ஒரு நரி வெளியே வருவதைக் காண சிலிர்ப்பாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான நரிகள் லண்டனில் வசிப்பதாகச் …

லண்டனில் நரிகள் Read More »

இடக்கை நாவல் கன்னடத்தில்

எனது இடக்கை நாவல் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கனகராஜ் மற்றும் சம்பா ஜெயபிரகாஷ் இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். விரைவில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இதனை கன்னடத்தில் வெளியிடுகிறார்கள்.

புத்தகப் பரிந்துரைகள் -1

சென்னைப் புத்தகக் காட்சியில் நிறைய புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. நான் முக்கியம் எனக் கருதும் சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இஸ்ஸாவும் பூஸனும் ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிகளான இஸ்ஸா மற்றும் பூஸனின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளை யுவன் சந்திரசேகர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நூல்வனம் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த புத்தகமாக்கம். அனாகத நாதம். இளந்தலைமுறையின் சிறந்த சிறுகதையாசிரியரான செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகளின் தொகுப்பு அனாகத நாதம். தனித்துவமிக்க மொழியழகும் கதைக்களமும் கொண்ட நேர்த்தியான கதைகள். சொற்றுணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது …

புத்தகப் பரிந்துரைகள் -1 Read More »

சாய்ந்தாடும் குதிரை

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. இதில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சாய்ந்தாடும் குதிரை படித்தவுடன் எழுதுகிறேன். எங்கள் வீட்டில் ஒரு சிகப்பு நிற மரக்குதிரை இருந்தது. பதற்றத்துடன் இரட்டை சடை போட்ட சிறுமியாக அக்கா குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு போட்டோ உண்டு. இப்போது குதிரையும் இல்லை. அக்காவும் இல்லை. ஆனால் எனது மனம் இன்று கசிவது கதையில் வரும் இரண்டு மரக்குதிரைகளுக்காக.சாய்ந்தாடும் குதிரை அற்புதமான கதை சந்தானம். பெங்களூர்.