சொல் தரும் வெளிச்சம்
கனடாவில் வசிக்கும் நாடகக் கலைஞர், கல்வியாளர், க. நவம் 54 ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து எனினும் நான் எழுகின்றேன் என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். இந்தக் கவிதைகளின் பொதுத்தன்மையாக இருப்பது சுதந்திர வேட்கையும் சமாதானத்திற்கான குரலுமாகும். லாங்ஸ்ரன் ஹியூஸ் துவங்கி யாங் வான் லி வரையான சிறந்த கவிஞர்களின் முக்கியக் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். கவிதைகளை மொழிபெயர்ப்புச் செய்வது மிகவும் சவாலானது. கவிதையில் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளை அளிக்கிறது. அதற்கு நிகரான தமிழ்சொல்லைக் …









