அறிவிப்பு

எம்.டி.வாசுதேவன் நாயர் நேர்காணல்

Sahapedia சிறந்த இலக்கியவாதிகளின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளது. எம்.டி. இந்த நேர்காணலில் அவரது படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்துப் பேசியிருக்கிறார்.

தேசாந்திரி அரங்கு

திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது எண் 68 & 69 எனது அனைத்து நூல்களும் அங்கே கிடைக்கும். செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன். அன்று மாலை நான்கு மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன்

ஃபின்லாந்தியா

Jean Sibelius இசையமைத்த Finlandia மிகச்சிறந்த இசைக்கோர்வை. இம்பீரியல் ரஷ்யாவின் கெடுபிடியான தணிக்கைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டும் விதமாகவும் ஃபின்னிஷ் மக்களின் நம்பிக்கையினைத் தூண்டும் விதத்திலும் ஜீன் செபெலியஸ் 1899 ல் இதனை உருவாக்கியுள்ளார். ரஷ்ய தணிக்கையைத் தவிர்ப்பதற்காக, ஃபின்லாந்தியாவைப் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் மாற்றுப் பெயர்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள்

காலை உணவுத் திட்டம்

அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளிலுள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள். மாணவர்களுக்கு காலை, மதியம் என இருவேளை உணவு வழங்குவதில் இந்தியாவின் முதல் மாநிலமாகத் தமிழகம் திகழ்வது பெருமையளிக்கிறது. நான் பள்ளியில் படிக்கும் நாட்களில் வறுமையான குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களில் சிலர் காலை உணவு …

காலை உணவுத் திட்டம் Read More »

திருச்சி புத்தகத் திருவிழா

திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 வரை நடைபெறுகிறது. இடம் : வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானம். திருச்சி நேரம் காலை 11 மணி முதல் இரவு 9 வரை இதில் செப்டம்பர் 24 சனிக்கிழமை மாலை வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன் திருச்சி புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அங்கே எனது அனைத்து நூல்களும் கிடைக்கும்.

யாமம் தெலுங்கு மொழிபெயர்ப்பு

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவை நாவல் குறித்து வெளியான அறிமுகக்குறிப்புகள் இந்த நாவலை தெலுங்கில் ஜி. பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். இவரே தற்போது எனது சஞ்சாரம் நாவலை சாகித்ய அகாதமிக்காக மொழியாக்கம் செய்துள்ளார்

Katha Vilasam: The Story Within

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பி.சி. ராமகிருஷ்ணா மற்றும் மாலினி சேஷாத்ரி. Katha Vilasam: The Story Within offers a path-breaking series of 50 articles by S. Ramakrishnan, published over the course of two years in the widely read Tamil magazine Ananda Vikatan, to a wider reading public through translation into English. The writing style is …

Katha Vilasam: The Story Within Read More »

காந்தி தொகை நூல்

Mahatma Gandhi in Indian Language Series என்றொரு வரிசையை காந்தி பவுண்டேஷன் வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழில் காந்தி பற்றி வெளியான முக்கியப் படைப்புகளை எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் தொகுத்துள்ளார். த.கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தத் தொகுப்பில் எனது படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. சுனில் கிருஷ்ணன் மற்றும் த. கண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றி.

சலூன் நூலகம் நடத்தும் விழா.

பொன்மாரியப்பன் தூத்துக்குடியிலுள்ள தனது சலூனில் நூலகம் அமைந்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பொன்மாரியப்பனுடன் உரையாடி நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை சலூனில் வைத்திருக்கிறார். பொன்மாரியப்பன் எனது தீவிர வாசகர். இவரது சலூனில் எனது இலக்கிய உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார். தற்போது புத்தக வாசிப்பை வளர்க்கும் விதமாக இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். …

சலூன் நூலகம் நடத்தும் விழா. Read More »