ஆங்கில இதழில்
எனது புருவமில்லாத பொம்மைகள் சிறுகதை borderlessjournal இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி இணைப்பு
எனது புருவமில்லாத பொம்மைகள் சிறுகதை borderlessjournal இதழில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி இணைப்பு
ஆஸ்கார் விருது பெற்ற அனிமேஷன் பட இயக்குநர் டுடோக் இயக்கிய குறும்படம் The Aroma of Tea (Michael Dudok de Wit.)2006 ஜப்பானிய சித்திர எழுத்து பாணியில் நேர்த்தியான இசையோடு அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நூறாவது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் அக்டோபர் 16 ஞாயிறு காலை பொள்ளாச்சி என்,ஜி. எம் கல்லூரியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
அக்டோபர் மாத அரூ இணைய இதழில் எனது சிறுகதை மற்றும் இரண்டு குறுங்கதைகள் வெளியாகியுள்ளன இணைப்பு – https://aroo.space/issue-15/
எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் எழுதியுள்ள தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூலின் வெளியீட்டுவிழா அக்டோபர் 8 மாலை சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் துவங்கியுள்ள புதிய கடையினுள் நடைபெறுகிறது 900 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். தமிழ் சிறுகதையுலகினை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். நூலை நான் வெளியிடுகிறேன். பாராளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பெற்றுக் கொள்கிறார். அண்ணன் தமிழ்செல்வனின் நூலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரது நிழலில் கோணங்கியோடு சேர்ந்து வளர்ந்தவன் என்பதால் அந்தப் பசுமையான …
சுடரும் சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்பு வந்தது என்னை ஆள வந்தது பாடல் எனக்கு பிடித்தமானது. இந்த பாடல் இருமுறை படத்தில் இடம்பெறுகிறது.தாயினை இழந்த பிள்ளைகளை தந்தை ஆறுதல்படுத்திப் பாடும் பாடல் ஜெமினி நடித்த இப்படத்தின் இசை எம்.எஸ்.வி பாடலை எழுதியவர் கண்ணதாசன். எஸ்பிபி பாடிய அன்பு வந்தது பாடலை எப்போது கேட்டாலும் மனது கரைந்துவிடுகிறது. அருமையான பாடல். எஸ்பிபியின் குரல் அமிர்தமாக இனிக்கிறது. கண் இரண்டில் கலக்கம் இன்றிஅமைதி காணலாம்காலம் வெல்லும் வெல்லும் என்றுஉறுதி கொள்ளலாம் …
பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் எனது படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் நவம்பர் 11 ம் தேதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. எனது நண்பரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான அபிலாஷ் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர் சரளா இருவரும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைப்பு செய்கிறார்கள். இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். விருப்பமான படைப்பாளிகள். கல்விப்புல ஆய்வாளர்கள், வாசகர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். •••• பொழில் மன்றம் பெங்களூரில் அமைந்துள்ள கிருஸ்து நிகர்நிலை …
கடந்த ஐந்து நாட்களாகப் பயணத்திலிருந்தேன். இன்று தான் சென்னை திரும்பினேன். திருச்சி மற்றும் மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டேன். திருச்சியில் புத்தகத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகமும் தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து கண்காட்சியை சிறப்பாக உருவாக்கியிருந்தார்கள். களம் அமைப்பின் சார்பில் உரையாற்ற வருகிறவர்களை வரவேற்று வசதியான தங்குமிடம், ருசியான உணவு கொடுத்துக் கவனித்துக் கொண்டார்கள். 24 சனிக்கிழமை மாலையில் நான் வரலாற்றின் மௌனம் என்ற தலைப்பில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். …
மதுரை புத்தகத்திருவிழா செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறுகிறது இடம் : தமுக்கம் மைதானம் இந்தப் புத்தகத்திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. செப்டம்பர் 25 ஞாயிறு மாலை புத்தகத்திருவிழா அரங்கில் உரையாற்றுகிறேன்
பிதியா மேரி க்ரோக்கர் எனப்படும் பி.எம்.க்ரோக்கர் பிரிட்டனைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் 14 ஆண்டுகள் வசித்திருக்கிறார். இதில் சில காலம் வெலிங்டனில் வாழ்ந்திருக்கிறார். 1882 ஆம் ஆண்டுத் தனது 33 வயதில் எழுதத் துவங்கிய க்ரோக்கர் 1919 வரையுள்ள 37 ஆண்டுகளில் 44 நாவல்கள் மற்றும் ஆறு சிறுகதைகளின் தொகுதிகளை எழுதியிருக்கிறார். இவரது நாவல்கள் இங்கிலாந்தில் விரும்பி வாசிக்கபட்டன. சில நாவல்கள் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளன. இதில் In Old Madras …