அறிவிப்பு

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது.

தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக்கொள்கைக்கான உயர்மட்டக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றுகிறேன். நீதியரசர் முருகேசன் தலைமையில் இந்தக் கல்விக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டுமே இது போலக் கல்விக் கொள்கைக்கான குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசின் சிறந்த முன்னெடுப்பு என்பேன். தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள். மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள். பெற்றோர்கள், கல்வியியல் அறிஞர்கள், பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் …

மாநில கல்விக்கொள்கை உருவாகிறது. Read More »

விருதுநகர் புத்தகத் திருவிழாவில்

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 17 துவங்கி 27 வரை நடைபெறுகிறது விருதுநகர் மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் பொருட்காட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது இந்தப் புத்தகத்திருவிழாவில் நவம்பர் 18 மாலை உரையாற்றுகிறேன் தலைப்பு : நினைவின் சித்திரங்கள்.

மணிபாரதி – அரவான்

எனது அரவான் நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி நடத்துகிறார். இந்த நிகழ்வு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிஸியோதெரபிஸ்டான மணிபாரதி தொடந்து அழகம்மை அரங்கம் சார்பாக நவீன நாடகங்களை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்னர் எனது “கொஞ்சம் இனிப்பு அதிகம்” என்ற சிறுகதையை நாடகமாக இயக்கியிருந்தார். ஞானராஜ சேகரன் ஐஏஎஸ்  “ராமானுஜன்” திரைப்படத்தில் மணிபாரதியை கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்தார்.  அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள “ஐந்து உணர்வுகள்” திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மணிபாரதி நடித்துள்ளார் …

மணிபாரதி – அரவான் Read More »

அரவான் நாடகம்

நான் எழுதிய அரவான் நாடகம் சிறந்த நடிகரும் பதிப்பாளருமான கருணாபிரசாத் இயக்கி நடித்து பல்வேறு ஊர்களில் நிகழ்த்தப்பட்டது அந்த நாடகம் தனி நூலாகவும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு குயின்மேரீஸ் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அரவான் நாடகம் மலையாளத்திலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளின் முன்பு புதுவையில் நாடக கலைஞர் சுகுமார் இந்த நாடகத்தை சிறப்பாக நிகழ்த்தினார். இப்போது இந்த நாடகத்தின் ஒரு பகுதியை மணிபாரதி சிறுநாடகமாக உருவாக்கியிருக்கிறார் பத்துநிமிஷங்கள் கொண்ட நாடகங்களுக்கான விழாவில் இடம்பெறுகிறது Short+Sweet Theatre …

அரவான் நாடகம் Read More »

சேலத்தில்

சேலம் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசக சாலை இணைந்து நடத்தும் இலக்கியச் சந்திப்பு நிகழ்வில் எனது சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல் நாளை மாலை நடைபெறுகிறது.

அஞ்சலி

தனித்துவமிக்க சிறுகதை படைப்பாளியாகவும் இடதுசாரி சிந்தனை கொண்ட தீவிர சமூகச் செயற்பாட்டாளராகவும் விளங்கிய தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலி.

இடக்கை நாடகம்

சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஔவை மன்றத் துவக்கவிழாவில் கலந்து கொண்டேன். இந்நிகழ்வில் மாணவியர் எனது இடக்கை நாவலின் முக்கியப் பகுதியை நாடகமாக்கியிருந்தார்கள். மிகச்சிறப்பான நாடகமாக உருவாக்கபட்டிருந்தது. குறிப்பாக ஔரங்கசீப்பாக நடித்துள்ள பெண் அபாரமாக நடித்தார். இடக்கை நாவலை ஆழ்ந்து படித்து உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்திருந்தார்கள். நாடகத்தை மானசி இயக்கியிருந்தார். நாடகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது பாராட்டினைத் தெரிவித்தேன். அவர்கள் இந்த நாடகத்தை வெளி அரங்கில் நிகழ்த்தினால் இன்னும் அதிக கவனமும் பாராட்டும் பெறும் …

இடக்கை நாடகம் Read More »

பெட்னா நிகழ்வு

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA)  சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைய வழி இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். தலைப்பு : எழுதப்படாத உண்மைகள் நாள் : சனிக்கிழமை, அக்டோபர் 22 நேரம் : இந்திய நேரம் இரவு 9 மணி        அமெரிக்க நேரம் காலை 11 30 மணி நேரலை – Zoom Live : https://tinyurl.com/FETNAIK2022 Zoom Meeting ID: 893 5830 7330Passcode: 577073

பொள்ளாச்சியில்

16.10.22 ஞாயிறு காலை பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் 100 வது நிகழ்வில் கலந்து கொண்டு கவிதையும் கவிஞனும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்