அறிவிப்பு

தென்காசி புத்தகத் திருவிழாவில்

தென்காசி புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 10 புதன்கிழமை மாலை உலகெங்கும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது

நினைவில் ஒளிரும் முகங்கள்

கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவர்களின் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இணைந்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி நல்ல புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். கோவை புத்தகக் கண்காட்சியில் சிறிய கடையை அமைத்திருந்த சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷை சந்தித்தேன். இரண்டு புதிய நூல்களைப் பரிசாக அளித்தார். அவரது மகள் எனது உப பாண்டவம் நாவலை விரும்பிப் படித்திருக்கிறார் …

நினைவில் ஒளிரும் முகங்கள் Read More »

விட்மன் கவிதைகள்

வால்ட் விட்மன் கவிதைகள் எந்தத் திரைப்படத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பற்றிய இந்த ஆவணப்படம் விட்மனின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு 2019 ல் வெளியிடப்பட்டுள்ளது

ஏ.கே. செட்டியாரின் காந்தி

காந்தியைப் பற்றிய திரைப்படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ உருவாக்குவதற்கு முன்னதாக ஏ.கே.செட்டியார் காந்தி என்ற ஆவணப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள். சந்திப்புகள் வியப்பூட்டக்கூடியவை. இந்த அரிய ஆவணப்படம் முழுமையாக நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் மீட்கப்பட்ட சுருங்கிய வடிவம் தற்போது கிடைத்துள்ளது. காந்தி பவுண்டேஷன் இதனை வெளியிட்டுள்ளார்கள். அண்ணல் அடிச்சுவட்டில் என காந்தி ஆவணப்படத்திற்காக ஏ.கே. செட்டியார் மேற்கொண்ட பயணத்தை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்துள்ளார். 1937 அக்டோபர் 2. நியூயார்க்கிலிருந்து டப்ளின் செல்லும் கப்பலில் பயணம் …

ஏ.கே. செட்டியாரின் காந்தி Read More »

காந்தி கதைகள்

காந்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ்சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்திருக்கிறார். பரிசல் பதிப்பகம் அதனை வெளியிட்டிருக்கிறார்கள். இத்தொகுப்பில் எனது இரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன

ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்

நண்பர் மயன் மகேஷ் கோவையின் முக்கிய ஆளுமைகள் மற்றும் பல்துறைக் கலைஞர்கள் குறித்து தொடர்ந்து ஆவணப்படங்களை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஒவியர் ஆதிமூலம் குறித்த ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கோவை புத்தகக் கண்காட்சியில் நான் ஆற்றிய உரையைப் பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். நன்றி மயன் மகேஷ்.

ஜெயமோகன் சந்திப்பு

திங்கள்கிழமை மாலை ஜெயமோகன் தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்திருந்தார். அவரை வரவேற்று உரையாடினேன். ஜெயமோகனுடன் கோவை புத்தகக் கண்காட்சி நிர்வாகிகளும் உடன் வந்திருந்தார்கள். நான் தேர்வு செய்து தொகுத்துள்ள 100 சிறந்த கதைகள் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றிக் கண்காட்சி நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார். அஜிதனின் மைத்ரி நாவல் குறித்து அவரிடம் விசாரித்தேன். மாலை அமர்வில் நான் உரையாற்ற வேண்டிய நேரமானதால் ஜெயமோகனுடன் குறைவான நேரமே பேச முடிந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பதிப்பகம் முதன்முறையாகக் கோவை …

ஜெயமோகன் சந்திப்பு Read More »

கோவை புத்தகக் கண்காட்சியில்

இரண்டு நாட்களாகக் கோவை புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் மக்கள் கண்காட்சிக்கு வந்திருந்தார்கள். பை பையாக நூல்களை வாங்கிச் சென்றார்கள். தேசாந்திரி பதிப்பக அரங்கில் வாசகர்களைச் சந்தித்தேன். எனது புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலின் மொழிபெயர்ப்பை டாக்டர் சந்திரமௌலி செய்திருக்கிறார். அந்த நூலின் வெளியிட்டு விழா நடைபெற்றது. டாக்டர்  ரவி அதனை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கவிஞர். க.வை.பழனிசாமியின் கவிதையின் அந்தரங்கம் நூலினை வெளியிட்டு உரையாற்றினேன். இதில் விஜயா வேலாயுதம். …

கோவை புத்தகக் கண்காட்சியில் Read More »

புத்தக வெளியீடு

கவிஞர் க.வை.பழனிசாமி எழுதியுள்ள கவிதையின் அந்தரங்கம் என்ற விமர்சன நூலின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்கிறேன். நாளை மாலை கோவை புத்தகக் கண்காட்சி அரங்கினுள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது நவீன கவிதைகயை எப்படி புரிந்து கொள்வது, கவிதைக்குள்ளிருந்து ஒலிக்கும் கவிதைசொல்லி யார், கவிதையின் ஊடாக எதையெல்லாம் பெறுகிறோம், கவிதையின் ரகசியங்களாக எதைச் சொல்லலாம் எனப் பல்வேறு நிலைகளில் கவிதைகளை ஆராய்ந்திருக்கிறார் க.வை.பழனிசாமி தமிழின் 14 முக்கிய கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை முன்வைத்து மாறுபட்ட கவித்துவப் பார்வையை உருவாக்கியுள்ளார். …

புத்தக வெளியீடு Read More »

கோவை புத்தகக் கண்காட்சி குறித்து

இன்றைய தி இந்து நாளிதழில் கோவை புத்தகக் கண்காட்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதில் நான் கலந்து கொண்டு உரையாற்றுவது குறித்துப் பேசியிருக்கிறேன்