அறிவிப்பு

இருநூறு ஆண்டுகாலக் கதை

“யாமம்” வாசிப்பனுபவம் இர. மௌலிதரன். ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனை தான் நாம் கேட்க வேண்டும். ஏனெனில் அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும், அனுபவித்தும், தனக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருப்பான். இப்படி ஒரு கிராமமோ, ஒரு நகரமும் ஒருவன் நினைவில் இருந்தால் அது சாத்தியம். ஆனால் அதுவே ஒரு நாடு முழுவதும் ஒருவன் இப்படித் தனக்குள் வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறான் என்றால் அது அசாதாரணம். அப்படி …

இருநூறு ஆண்டுகாலக் கதை Read More »

அஞ்சலி

தமிழப்பெருந்தகை அய்யா நெல்லை கண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்ப உறவாக, என் மேல் பேரன்பு கொண்டவராய் விளங்கிய அய்யாவின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது.

நகுலனைக் கொண்டாடுவோம்

. நகுலன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அருவம் உருவம் நகுலன் 100 என்ற நூற்தொகுப்பு ஒன்றைக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கொண்டு வந்திருக்கிறார். நூல்வனம் இதனை வெளியிட்டுள்ளது. தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அவரது ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம், நகுலனின் வாக்குமூலத்தைச் சித்திரக் கதையாக வெளியிட்டிருப்பது, நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் சிறந்த கட்டுரைகள் என அரிய தொகுப்பாக வெளியாகியுள்ளது. நகுலனின் நூற்றாண்டினை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்நூல் நகுலனை …

நகுலனைக் கொண்டாடுவோம் Read More »

உனது மலர் கொடியிலே

நேற்றிரவு ஜூலியன் பார்ன்ஸ் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மனதில் சினிமா பாடலின் வரிகள் தோன்றியது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பாடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்த The Sense of an Ending நாவலுக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு. ஏன் நினைவில் வந்தது என்று புரியவில்லை. இது போல நினைவின் அடுக்கிலிருந்து சில பாடல்கள் மேல் எழுந்து வருவதுண்டு உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது …

உனது மலர் கொடியிலே Read More »

கவிஞன் எனும் மேகம்

சீனாவின் புகழ்பெற்ற கவிஞர் துஃபு (Du Fu) பற்றிய ஆவணப்படம். BBC இதனைத் தயாரித்துள்ளது 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துஃபு சீனக் கவிஞர்களில் மிகச்சிறந்தவராகக் கொண்டாடப்படுகிறார். இவரது சில கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் முக்கியமானது. இது போலவே உதிர்ந்த இலைகளின் பாடல் கல்பனா மொழிபெயர்ப்பில் வெளியான கவிதை தொகுப்பும் மிகச்சிறப்பானது. Du …

கவிஞன் எனும் மேகம் Read More »

தென்காசி புத்தகத் திருவிழாவில்

தென்காசி புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 10 புதன்கிழமை மாலை உலகெங்கும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது

நினைவில் ஒளிரும் முகங்கள்

கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவர்களின் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இணைந்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி நல்ல புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள். கோவை புத்தகக் கண்காட்சியில் சிறிய கடையை அமைத்திருந்த சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷை சந்தித்தேன். இரண்டு புதிய நூல்களைப் பரிசாக அளித்தார். அவரது மகள் எனது உப பாண்டவம் நாவலை விரும்பிப் படித்திருக்கிறார் …

நினைவில் ஒளிரும் முகங்கள் Read More »