அறிவிப்பு

அஞ்சலி

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த மனிதர். புன்னகை மாறாத முகத்துடன் எதையும் நிதானமாக, ஆழ்ந்து அறிந்து அணுகக்கூடியவர். கம்பத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு மதுரைக்குப் பேருந்தில் வந்து இறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது வேதனையளிக்கிறது. என் வளர்ச்சியிலும் எழுத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டவர். அவரது மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். 25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எஸ்.ஏ.பி …

அஞ்சலி Read More »

நூறு விமர்சனங்கள்

2021 டிசம்பர் 25ல் எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே வெளியானது. இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த கட்டுரைகளில் சிலவற்றை நானே எனது இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நாவல் குறித்த காணொளி. டால்ஸ்டாய் மற்றும் அக்ஸின்யா குறித்த ஓவியம், நாவலின் வரைபடம், டால்ஸ்டாய் போஸ்டர், கனடாவில் நடைபெற்ற ஜும் சந்திப்பு, பாலம் புத்தக கடை ஏற்பாடு செய்த அறிமுக நிகழ்வு …

நூறு விமர்சனங்கள் Read More »

உலகெங்கும் விரியும் தமிழ்

(இந்து தமிழ் திசையில் வெளியானது.) இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா மொரிசீயஸ், பிரான்ஸ் எனச் சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது …

உலகெங்கும் விரியும் தமிழ் Read More »

உலக புத்தக தின வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் நிறைந்த உலக புத்தக தின வாழ்த்துகள். நேற்று சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். இரண்டு மணி நேர நிகழ்ச்சி. அரங்கு நிரம்பியிருந்தது. நான்கு மணிக்கு முடியவேண்டிய நிகழ்வு ஐந்து மணி வரை நீண்டு சென்றது. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று கேள்வி கேட்டார்கள். நிறைய மாணவர்கள் எனது புத்தகங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார்கள். சிறப்பான கேள்விகளை எழுப்பினார்கள் . இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரி முதல்வர் முனைவர் ராமனுக்கும் துணை நின்ற …

உலக புத்தக தின வாழ்த்துகள் Read More »

உலகெங்கும் விரியும் தமிழ்

இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் உலகப் புத்தக தினம் குறித்து சிறப்பு கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழின் இளம் சிறுகதையாசிரியர்கள் மற்றும் அயலில் வாழும் முக்கிய தமிழ் படைப்பாளிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

டால்ஸ்டாய் வரவேற்கிறார்.

P பொன் மாரியப்பன் தூத்துக்குடி டால்ஸ்டாய் என்பவர் யார்? நான் ஏன்? அவரைத் தெரிந்துகொள்ளவேண்டும், பல கேள்விகளோடு நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். டால்ஸ்டாய் பற்றி நான் வாசித்த முதல் நாவல் இதுதான். முதல் தொடக்கமே உள்ளம் உருக வைத்தது. முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை டால்ஸ்டாய் என் பக்கம் இருப்பதை உணர்ந்து கொண்டேன். அந்த வயது முதிர்ந்த டால்ஸ்டாயின் அட்டை படம் புதிய வாசனையாக என்னைச் சூழ்ந்தது. நான் வாசிக்கும் போது அவரும் வாசித்தார். …

டால்ஸ்டாய் வரவேற்கிறார். Read More »

இந்திய இலக்கியத்தின் முகம்

கலை கார்ல்மார்க்ஸ் திருவாரூர் ••• நிலவழி குறித்த வாசிப்பனுபவம் இந்நூலில் பத்துக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் சமகால இந்திய இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமைகளையும் அவர்களது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது. முதல் கட்டுரையில் ஞானபீட பரிசு பெற்ற அசாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி அவர்களின் ‘தென் காமரூபத்தின் கதை’ என்ற நாவல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திரா கோஸ்வாமி பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட நாவல்கள் அதன் பொருட்டு அவருக்கு வந்த …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

புத்தகத்துடன் ஒரு பயணி

சுவாமிநாதன் பாலசுப்ரமணியன் தனது அலுவல் காரணமாகத் தொடர் பயணங்களை மேற்கொள்கிறவர். இவர் எனது தேசாந்திரி புத்தகத்தை விருதுநகர் ரயில் நிலையத்தில் படிக்கத் துவங்கி மதுரை, கொச்சி, கொல்லம், பெங்களூரு போன்ற இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் படித்து டெல்லி மெட்ரோவில் முடித்திருக்கிறார். பயண நூலை இப்படிப் படிப்பது மகிழ்ச்சி தருகிறது. சுவாமிநாதனுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

மாநிலக் கல்லூரியில் உரையாற்றுகிறேன்

சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நாம் ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். இதைத் தொடர்ந்து ஐந்து வருட மௌனம் என்ற எனது புதிய சிறுகதைத் தொகுப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெறுகிறது நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் இரா. இராமன் தலைமை தாங்குகிறார்.

எனது நாடகம்

தியேட்டர் லேப் குழுவின் 16வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதன் இயக்குநர் ஜெயராவ் மே 7 மற்றும் 8 தேதிகளில் நாடகவிழா ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஸ்பேசஸ் அரங்கில் இந்த நாடகங்கள் நடைபெற இருக்கின்றன. இந்த விழாவில் பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground யை மையமாகக் கொண்டு நான் எழுதிய மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் நிகழ்த்தப்படுகிறது.