திருப்பூரில் உரையாற்றுகிறேன்
ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன்
ஏப்ரல் 16 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் உரையாற்றுகிறேன்
நேற்று நடைபெற்ற சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் நாள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. மிகவும் குறைவான கூட்டம். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி
கி.ராவின் கன்னிமை கதை குறித்து எழுதிய பதிவை வாசித்த சேது வேலுமணி நாச்சியாரை ஓவியமாக வரைந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் மார்ச் 30 மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வடபழனியிலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது
தமிழக அரசின் முன்னெடுப்பு காரணமாக சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு வெளியான நூல்களில் எனது கதாவிலாசமும் இடம்பெற்றுள்ளது. கதாவிலாசம் ஆங்கிலப் பிரதிகளை வேண்டுகிறவர்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற நாவல் குறித்த பார்வை கருத்துரைப்பவர்: ‘கனடா’ மூர்த்தி நாள்: 18-03-2022 வெள்ளிக்கிழமை கனடா ரொறன்ரோ நேரம்: இரவு 8:00 – 10:00 மணி (இந்தியா, இலங்கை நேரம்: 19 03 2022 சனிக்கிழமை காலை 5:30 – 7:30) Join Zoom Meeting Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை நாவலில் வரும் சுப்புவை படம் வரைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணா. ஒரு நாவல் எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு மூன்று இயக்குநர்கள் வேறுவேறு தருணங்களில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. அதற்கான சரியான தருணம் விரைவில் வரக்கூடும் என நம்புகிறேன்
எனது சிற்றிதழ் சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. பாலாஜி. நன்றி vaartha.com ஜி. பாலாஜி
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டம் சார்பில் எனது காந்தியின் நிழலில் நூல் குறித்து அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முனைவர் ம. பிரேமா அண்ணாமலை உரையாற்றுகிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவினுள் நிகழ்ச்சி நடைபெறுகிறது Google Meet வழியே நேரலையிலும் பங்குபெறலாம். இணைப்பு தொடர்பு எண்கள் 97907408869952952686 நாள்: 09.03.2022 நேரம்: மாலை .6 45