நன்றி

நேற்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றி.

தூத்துக்குடியில் தனது சலூனில் நூலகம் அமைத்துள்ள P பொன்மாரியப்பன் எனது பிறந்தநாளுக்காக ஊர்முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் தொலைபேசியில் பேசினேன். ``எழுத்தாளர்களின் பிறந்த நாளை ஊரே கொண்டாடணும். என்னாலே முடிஞ்சதை நான் செய்திருக்கிறேன்“ என்றார். வாசிப்பின் வழியே உருவான இது போன்ற மனிதர்களே நாம் கொண்டாட வேண்டியவர்கள்.

ஒரு நண்பர் ரிஷிகேஷில் எனக்காக பிரார்த்தனை செய்து மகிழ்ந்திருக்கிறார்.

அமெரிக்காவில் எனது வாசகர்களில் சிலர் ஒன்று கூடி எனது பிறந்த நாளைக் கொண்டாடியதோடு எனது சிறுகதைகளை வாசித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடன் வீடியோ காலில் பேசினேன்.

ஆர்டிஸ்ட் கனலி ஒரு அழகான ஓவியத்தை வரைந்து அனுப்பியிருக்கிறார்.

வண்ணதாசனின் ஆசி நேற்றைய நாளை கூடுதல் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

நூற்றுக்கணக்கான குறுஞ்செய்திகள். வாட்ஸ்அப் வாழ்த்துகள். மின்னஞ்சல்கள். தொலைபேசி அழைப்பு , நேரடி சந்திப்பு என அன்பைப் பகிர்ந்து கொண்ட அனைவரும் எனது மனம் நிறைந்த நன்றி

0Shares
0