அறிவிப்பு

எஸ்.வி.ஆர் – சந்திப்பு.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கோத்தகிரி சென்று உடல் நலமற்றிருந்த தோழர் எஸ்.வி. ஆர் அவர்களைச் சந்தித்தேன். தாங்க முடியாத வலியுடன் போராடியபடி படுக்கையில் இருந்தார். அவரது கட்டிலின் அருகிலே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். உரையாடல் துவங்கிய அரைமணி நேரத்தில் அவரிடம் உற்சாகம் ஏற்பட்டு எழுந்து அமர்ந்து கொண்டார். பேச்சும் எழுத்தும் தான் அவருக்கான மருந்து எங்களுக்காக மதிய உணவு தயாரிக்கச் சொன்னார். நல்ல உணவளித்தார்கள். நான்கு மணி நேரம் அவருடன் இருந்தேன். வலியின் உச்சத்தில் வாழ்ந்து வந்த …

எஸ்.வி.ஆர் – சந்திப்பு. Read More »

world Literature Today இதழில்

எனது சிறுகதை சொந்தக்குரல் world literature today மே இதழில் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற இலக்கிய இதழிது. சர்வதேச அளவில் படைப்புகள் வெளியாகின்றன. திலா வர்கீஸ் எனது கதையை மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கதையை வாசிக்க இணைய தளத்திற்கு செல்லவும்.

இயல்விருது

இந்த ஆண்டிற்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது சிறந்த ஆய்வாளரும் பதிப்பாசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது.   அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் அபுனைவு பிரிவில் தனது சுயசரிதைக்காக நீதிநாயகம் சந்துரு இயல்விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள். புனைவிலக்கியத்திற்கான விருது  பெற்றுள்ள ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது  பெற்றுள்ள ஆழியாளுக்கும் அன்பான வாழ்த்துகள்.

உலகம் கொண்டாடுகிறது.

பல்வேறு நாடுகளிலும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் கொண்ட பணத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்களின் கதையுலகின் காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்திய எழுத்தாளர்களுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் கௌரவம் தபால்தலை அல்லது சிறப்புத் தபால் உறை வெளியிடப்படுவது தான். தி.ஜானகிராமன் நினைவாகச் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்ட நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். 2016ல் நடந்ததாக நினைவு. கையெழுத்துப் பிரதிகள். முதற்பதிப்புகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. மகாகவி பாரதியின் குரல் எப்படியிருக்கும் என்று …

உலகம் கொண்டாடுகிறது. Read More »

காலத்தின் குரல்

நேற்று மாலை முதல் மொழி அமைப்பின் சார்பில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் “காலத்தின் குரல்” என்ற தலைப்பில் உரையாற்றினேன். நன்றி : ஸ்ருதி டிவி முதல்மொழி

சித்திர செவ்வானம்

எனது பள்ளி வயதில் சினிமா பாடல்களைக் கேட்பதற்கு ரேடியோ ஒன்று தான் வழி. அதுவும் சிலோன் ரேடியாவில் அருமையான பாடல்களை ஒலிபரப்புச் செய்வார்கள். அடுத்து என்ன பாடல் வரும் என்று முன்கூட்டியே சொல்லும் போட்டி எங்களுக்குள் நடக்கும். அந்த நாட்களில் சித்திர செவ்வானம் சிரிக்கக்கண்டேன் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். காற்றினிலே வரும் கீதம் படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல். இசைஞானி இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன் பாடியது.பஞ்சு அருணாசலம் எழுதியது. இந்தப் பாடலில் வரும் தையரத்தைய்யா தையரத்தைய்யாவை பாடலுடன் …

சித்திர செவ்வானம் Read More »

அஞ்சலி

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. மிகச்சிறந்த மனிதர். புன்னகை மாறாத முகத்துடன் எதையும் நிதானமாக, ஆழ்ந்து அறிந்து அணுகக்கூடியவர். கம்பத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு மதுரைக்குப் பேருந்தில் வந்து இறங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனார் என்பது வேதனையளிக்கிறது. என் வளர்ச்சியிலும் எழுத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவர். எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவு கொண்டவர். அவரது மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். 25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் எஸ்.ஏ.பி …

அஞ்சலி Read More »

நூறு விமர்சனங்கள்

2021 டிசம்பர் 25ல் எனது புதிய நாவல் மண்டியிடுங்கள் தந்தையே வெளியானது. இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இந்த கட்டுரைகளில் சிலவற்றை நானே எனது இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நாவல் குறித்த காணொளி. டால்ஸ்டாய் மற்றும் அக்ஸின்யா குறித்த ஓவியம், நாவலின் வரைபடம், டால்ஸ்டாய் போஸ்டர், கனடாவில் நடைபெற்ற ஜும் சந்திப்பு, பாலம் புத்தக கடை ஏற்பாடு செய்த அறிமுக நிகழ்வு …

நூறு விமர்சனங்கள் Read More »

உலகெங்கும் விரியும் தமிழ்

(இந்து தமிழ் திசையில் வெளியானது.) இணையத்தின் வருகையால் தமிழ் இலக்கியம் இன்று உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வாசிக்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்குப் பிறகான தமிழ் இலக்கியம் பன்முகத்தன்மை கொண்டது. தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பர்மா, ஹாங்காங், வியட்நாம், ஆப்பிரிக்கா மொரிசீயஸ், பிரான்ஸ் எனச் சர்வதேச அளவில் வாழும் தமிழர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நோபல் பரிசு, புக்கர் விருது, டப்ளின் விருது …

உலகெங்கும் விரியும் தமிழ் Read More »

உலக புத்தக தின வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் நிறைந்த உலக புத்தக தின வாழ்த்துகள். நேற்று சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். இரண்டு மணி நேர நிகழ்ச்சி. அரங்கு நிரம்பியிருந்தது. நான்கு மணிக்கு முடியவேண்டிய நிகழ்வு ஐந்து மணி வரை நீண்டு சென்றது. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்று கேள்வி கேட்டார்கள். நிறைய மாணவர்கள் எனது புத்தகங்களை ஆழ்ந்து படித்திருக்கிறார்கள். சிறப்பான கேள்விகளை எழுப்பினார்கள் . இந்த நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த கல்லூரி முதல்வர் முனைவர் ராமனுக்கும் துணை நின்ற …

உலக புத்தக தின வாழ்த்துகள் Read More »