அறிவிப்பு

நன்றியுடன்

நேற்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றது. கடந்த மூன்று நாட்களாகப் பெருந்திரளாகக் கூட்டம். நிறைய இளைஞர்கள். பெண்கள். அவர்கள் பைநிறைய புத்தகங்களுடன் வலம் வருவதைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த ஊரடங்கு வாழ்க்கை அனைவரின் கவனத்தையும் புத்தகங்களின் மீது திருப்பியிருப்பதன் விளைவாகவே இதனைக் கருதுகிறேன். இப்படி ஒரு அறிவுத் திருவிழாவிற்கு அனுமதி தந்து, புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடக்க முதற்காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி புத்தகக் …

நன்றியுடன் Read More »

சௌமியின் கசப்பு

ஓவியர் கே.விக்னேஷ்வரன். எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உடலின் அலைகள் என்னும் சிறுகதையை வாசித்தேன். மிகவும் அருமை. இக்கதையின் கரு சிறியதுதான், ஆனால் அவர் இந்தக் கதையைக் கையாண்ட விதம் மிகவும் லாபகமானது. இக்கதையில் ஒரு மனிதன் தொழிற்சாலையில் பணி புரிகிறான். திருமணமாகாதவன். மதுரையைச் சார்ந்தவன் பணி நிமித்தம் காரணமாக வெளிமாநிலத்தில் பணிபுரிகிறான். எப்போது தனது சொந்த ஊருக்குப் பணியிடைமாற்றம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சமயத்தில் ரயில் பயணம் செய்யும்போது தனக்கு எதிரே உள்ள …

சௌமியின் கசப்பு Read More »

அன்பும் நன்றியும்.

புத்தகக் கண்காட்சியில் ஏன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். உடல் நலமில்லையா என்று பலரும் அன்போடு விசாரிக்கிறார்கள். மூட்டு அழற்சி காரணமாக எனது வலது முழங்காலில் வீக்கம் ஏற்படுகிறது. அதனால் நாற்காலியில் அமர்ந்து வாசகர்களைச் சந்திக்கிறேன். அதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறாக நினைத்து கண்டனக்குரல் எழுப்பி வருகிறார்கள். நின்றபடியே புத்தகங்களில் கையெழுத்துப் போடுவது சிரமமானது. மேலும் தொடர்ந்து நிற்பதால் கால் வீக்கம் அதிகமாகிறது என் அருகிலே இரண்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. விரும்புகிறவர்கள் அதில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். …

அன்பும் நன்றியும். Read More »

டால்ஸ்டாய் ஓவியம்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலின் முகப்பிலுள்ள டால்ஸ்டாய் ஓவியத்தை 11வயதான சித்தார்த் வரைந்து அனுப்பியிருக்கிறான். சித்தார்த்திற்கு எனது மனம் நிறைந்த அன்பும் வாழ்த்துகளும்

அக்ஸின்யா

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலில் வரும் அக்ஸின்யாவை ஓவியமாக வரைந்திருக்கிறார் சுரேஷ். நாவலைப் படித்த நண்பர் வேலூர் லிங்கம் அக்ஸின்யாவை யாராவது ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அவரது விருப்பம் இன்று நிறைவேறியுள்ளது. சுரேஷிற்கு மனம் நிறைந்த நன்றி

சென்னை புத்தகத் திருவிழா -1

கடந்த இரண்டு நாட்களாக சென்னை புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வந்தேன். நேற்று நல்ல கூட்டம். நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது. தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 317 318ல் வாசகர்களைச் சந்தித்துப் புத்தகங்களில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன். மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு பதிப்பு விற்று முடிந்து அடுத்த பதிப்ப வெளியாகியுள்ளது. தினசரி மாலை நான்கு மணிக்குப் புத்தக் கண்காட்சிக்கு வருகை தருவேன். எட்டு மணி வரை இருப்பேன். வழியில் சந்தித்து …

சென்னை புத்தகத் திருவிழா -1 Read More »

கிடைக்காத புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சிக்கென புதிய புத்தகங்கள் நிறைய வெளியாகியுள்ளன. நான் எப்போதும் கிடைக்காத அரிய நூல்களைத் தான் முதலில் தேடி வாங்குவேன். எனது சேமிப்பிலிருந்து காணாமல் போனவை. இரவல் கொடுத்துத் திரும்பி வராதவை எனப் பல அரிய நூல்களை மறுபடி வாசிக்கத் தேடிவருகிறேன். சிறந்த இந்த நூல்களை புத்தகக் கண்காட்சி அரங்கில் தேடிப் பாருங்கள். கிடைத்தால் அவசியம் வாசியுங்கள்.

கதாவிலாசம்

தமிழின் சிறந்த நூல்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்வதற்காகத் தமிழக அரசு புதிய திட்டத்தினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் சார்பில் நடைபெறும் இத்திட்டத்தில் சிறந்த தமிழ்ப் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. தமிழக அரசு இத்திட்டத்துக்குப் பத்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. பழைய பாடநூல்கள் மறுபதிப்பு, நாட்டுடைமை ஆக்கப்பட்ட அச்சில் இல்லாத நூல்களின் பதிப்பு, ஆங்கிலப் பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ் இலக்கிய ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகள் இத்திட்டத்தின் …

கதாவிலாசம் Read More »