பிறமொழிகளில்
கடந்த இரண்டு ஆண்டுகளில் பிறமொழியில் வெளியாகியுள்ள எனது படைப்புகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் எழுதிய 32 சிறுகதைகளின் தொகுப்பு. 404 பக்கங்கள் இதிலுள்ள பஷீரின் திருடன் குறுங்கதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு செய்தவர் எழுத்தாளர் ஷாஜி. ஐந்து வருட மௌனம் சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. வங்காளத்தில் வெளியாகவுள்ளது. தேவகியின் தேர்,இரண்டு ஜப்பானியர்கள், வெயிலில் அமர்தல் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன கடைசிக் குதிரைவண்டி சிறுகதை குறும்படமாக உருவாகி வருகிறது. அஸ்வின்குமார் என்ற இளம் இயக்குநர் இதனை உருவாக்குகிறார்.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி ,கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஐரின் நெமிரோவ்ஸ்கி, பா ஜின், பில்லி காலின்ஸ், ஆலன் ஆல்பெர்க் ,ரெட் பைன், லி போ, கென்ஸாபுரோ ஒயி, வில்லியம் சரோயன் ,ஹெலன் ஹான்ஃப், அன்னா ஸ்விர், யோசனோ அகிகோ, யாசுனாரி கவாபத்தா உள்ளிட்ட பல்வேறு இலக்கிய ஆளுமைகள் மற்றும் அவர்களின் முக்கிய படைப்புகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.
உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களான Christ Stopped at Eboli , A Special Day, Two women Two Half Times in Hell Bitter Rice Twenty-four Eyes Stromboli போன்ற திரைப்படங்களை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட அயல்மொழிப்படங்கள் குறித்த அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு
உலக சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் நூலை தேசாந்திரி பதிப்பகம் மறுபதிப்பு செய்துள்ளது புத்தகக் கண்காட்சியில் இந்த நூல் வெளியாகிறது
நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலின் புதிய பதிப்பு ஒன்றை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது இதற்காக அனுமதி அளித்த கவிஞர் திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி
சிறார்களுக்காக நான் எழுதிய டான்டூனின் கேமிரா நூலை கவிஞர் சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்துஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியாகிறது.
எனது மலைப்பாம்பின் கண்கள் சிறுகதையை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அந்தக் கதை borderlessjournal என்ற இணைய இதழில் வெளியாகியுள்ளது இணைப்பு
சென்னை நந்தனத்தில் நடைபெறுகிற 45வது புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 317 மற்றும் 318 ஐந்தாவது நுழைவாயில் வழியே வந்தால் அரங்கினைக் காணலாம். எல்லா நாட்களும் புத்தகக் கண்காட்சிக்கு வருவேன். சந்திக்க விரும்புகிறவர்கள் தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கில் என்னைச் சந்திக்கலாம். எனது நூல்கள் யாவும் தேசாந்திரியில் கிடைக்கின்றன.
சேலத்தில் இயங்கி வரும் பாலம் புத்தகக் கடை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பாலம் வாசகர் சந்திப்பு 400 கூட்டங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பிப்ரவரி 12 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது. இணையவழியாக நடைபெறும் இந்த நிகழ்வில் வெ.திருப்புகழ் ஐஏஎஸ் அவர்கள் நாவல் குறித்து உரை நிகழ்த்துகிறார். இதில் நானும் கலந்து கொள்கிறேன். முகநூல் நேரலையில் இந் நிகழ்வினைக் காணலாம்.