அறிவிப்பு

குறும்பட விழா

நேற்று ஹரிபிரசாத் இயக்கிய இருள் இனிது குறும்படத்தின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் ஞானவேல், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறும்படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி. எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அன்பு நண்பர் …

குறும்பட விழா Read More »

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது.

எனது நேசத்திற்குரிய நண்பரும் மலேசியாவின் மிகச்சிறந்த கல்வியாளருமான பி.எம். மூர்த்தி இந்த ஆண்டிற்கான வல்லினம் விருது பெறுகிறார். டிசம்பர் 21 அன்று மலேசியாவில் வல்லினம் விருதளிப்பு நடைபெறுகிறது. பி.எம். மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநராக மூர்த்தி மேற்கொண்ட பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவரது விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் டிசம்பர் 25 எனது …

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது. Read More »

இருள் இனிது குறும்பட விழா

எனது மகன் ஹரிபிரசாத் இயக்கியுள்ள இருள் இனிது குறும்படத்தின் திரையிடல் மற்றும் அறிமுகவிழா நவம்பர் 14 வெள்ளிக்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஞானவேல், இயக்குநர் துரைசெந்தில்குமார், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் ••

சென்னை : வரலாறும் வாழ்க்கையும்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் துவங்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. நவம்பர் 7 வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்குப் புத்தகப் பூங்கா அரங்கில் சென்னை : வரலாறும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

வான்கோவை வரைதல்

துருக்கிய கலைஞர் கரிப் அய் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான விண்மீன்கள் நிறைந்த இரவைத் தண்ணீரில் வரைகிறார். நம் கண் முன்னே மாயம் உருவாகிறது.இது “Ebru” என்று அழைக்கப்படும் ஒருவகை ஒட்டோமான் கலை, துருக்கியில் மிகவும் பரவலாக உள்ளது என்கிறார்கள் Van Gogh on Dark Water

மருந்தாகும் பாடல்கள்

கறுப்பு வெள்ளைப் பாடல்களின் மீதான பித்து என்பது வெறும் ஏக்கம் மட்டுமில்லை. அது ஒரு நினைவுமீட்சி. யூடியூப்பில் உள்ள பழைய பாடல்களுக்குக் கீழே பின்னூட்டம் எழுதியவர்களைத் தேடிப் படிப்பது சுவாரஸ்யமானது. பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்கப் பாடலை ரசித்திருக்கிறார்கள். சிலர் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளியான நாள் யாருடன் எங்கே பார்த்தோம் என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்கள். வியப்பூட்டும் சில பதிவுகளும் உண்டு. இந்தப் பாடல்கள் லட்சக்கணக்கான முறை கேட்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் …

மருந்தாகும் பாடல்கள் Read More »

இருள் இனிது

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள புதிய குறும்படம் இருள் இனிது. எனது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ள இந்தக் குறும்படத்தின் அறிமுகவிழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை மீடியா சயின்ஸ் படித்துள்ள ஹரி பிரசாத் NFDC யில் திரைப்பட படத்தொகுப்பு பயின்றுள்ளான். தற்போது தேசாந்திரி யூடியூப் சேனலை நடத்தி வருவதுடன். White Knights என்ற டிஜிட்டில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றையும் …

இருள் இனிது Read More »