அறிவிப்பு

வ. அதியமான் கவிதைகள்

சொல்வனம் இதழில் வ. அதியமான் எழுதும் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். சிறப்பான கவிதைகள். தனக்கான கவிதை மொழியினையும் குரலையும் கொண்டுள்ள இளங்கவிஞராக இருக்கிறார் அதியமான். இதுவரை அவரது கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியாகவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கவிதைகளின் வழியே அவர் உருவாக்கும் சித்திரங்கள் எளிமையும் அழகும் கொண்டவை. மரபும் நவீனமும் இணைந்த கவிமொழியைக் கையாளுகிறார். ஒளியும் இருளும் கலந்த இந்தக் கவிதைகள் நெருக்கடிக்குள்ளும் வாழ்வின் இனிமையைப் பேசுகின்றன. ஜென் கவிதைகளில் அடையும் உணர்வுகளின் இன்னொரு …

வ. அதியமான் கவிதைகள் Read More »

ஜெயகாந்தனுடன்

2012ல் ரஷ்யக் கலாச்சார மையம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடந்த விழாவில் ஜெயகாந்தன் அவர்களால் கௌரவிக்கப்பட்டேன். அந்தப் புகைப்படத்தை நேற்று நண்பர் தங்கப்பன் மெயிலில் அனுப்பியிருந்தார். ஜேகே அவர்களுடன் பழகிய நாட்களை நினைத்துக் கொண்டேன். அபூர்வமான மனிதர். அரிய புகைப்படம்.

நான் புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதியிருக்கிறேன். ஒரு மணி நேர அளவில் நடக்கும் நாடகம். எனது நண்பர் கருணா பிரசாத் இதனை இயக்கவுள்ளார். கருணாபிரசாத் எனது அரவான் நாடகத்தை மிகச்சிறப்பாக நடித்து இயக்கியவர். மிகத் திறமையானவர். ஒராண்டிற்கு முன்பாக இந்த நாடகத்தை அவருக்கு எழுதிக் கொடுத்தேன். பெருந்தொற்றுச் சூழல் மற்றும் நாடகம் தயாரிக்கத் தேவையான பொருளாதார வசதிகள் கிடைக்காத காரணத்தால் நாடகத்தை நிகழ்த்த இயலவில்லை. விரைவில் அந்த நாடகம் நிகழ்த்தப்படும் என நம்புகிறேன்.

பஷீரும் தகழியும்

புனலூர் ராஜன் எடுத்த பஷீரின் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறப்பான புகைப்படங்கள். ராஜன் ரஷ்யாவிற்கு சென்று மாஸ்கோ பல்கலைக்கழகத்துடன் இணைந்த USSR Institute of Cinematographyயில் மூன்று ஆண்டுகள் ஒளிப்பதிவு பயின்றவர். அன்றைய கேரள கம்யூனிஸ்ட் கட்சி தனக்கான திரைப்படங்களை தயாரிக்க விரும்பியது. அதன் பொருட்டே ராஜன் ரஷ்யா அனுப்பி திரைக்கலை பயின்று வந்தார். ராஜனின் மாமா கம்பிசேரி கருணாகரன் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர். ராஜன் ஒளிப்பதிவு  படித்து முடித்து திரும்பிய போது கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட …

பஷீரும் தகழியும் Read More »

ஒலிம்பிக் வெற்றி

கடந்த பதினைந்து நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து பார்த்து வந்தேன். இந்தப் போட்டிகள் மனதை மிகவும் உற்சாகப்படுத்தியது. பெருந்தொற்றின் காரணமாக இந்தியா முழுவதுமே பெரும் மனச்சோர்வும் அச்சமும் பீடித்திருந்த சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் இதற்கு மாற்றான நம்பிக்கையை, உத்வேகத்தை அளித்தன. இந்தியர்கள் போட்டியில் வெல்லும் தருணங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சி நிகரற்றது.  அதிலும் ஹாக்கி மற்றும் மல்யுத்த போட்டிகளில் கடைசி நிமிஷம் வரை ஏற்பட்ட பரபரப்பும் முடிவில் நாம் அடைந்த வெற்றியும் மறக்க முடியாதது. ஒலிம்பிக் முழுவதும் …

ஒலிம்பிக் வெற்றி Read More »

சூடி மறையாத சூரியன்

குறுங்கதைகள் பற்றிய வாசிப்பனுபவம் சக்திவேல் ••• உங்களின் பூக்களை வரையும் சிறுமி குறுங்கதை வாசித்தேன். ஓவியத்தை வரைந்து நீருற்றி வளர்க்க முயலும் சிறுமி, ஒருகட்டத்தில் சலித்து முடியாமையால் விலகி விடுகிறாள். பின்பொரு நாள், தன் ஓவியம் மாறாது நிலைப்பது என்ற உணர்தலை அறிந்தவுடன் இயற்கையோடு முரண் கொள்வதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தைச் சூடிக் கொள்கிறாள். அவள் வரையும் அந்தச் செடியும் மலருமான ஓவியம் என்பது இயற்கையில் ஒருகணத்தில் சுடர்ந்தொளிரும் அற்புதம் அல்லவா. நம் நினைவுகள் அப்படித் தான் இருக்கின்றன. …

சூடி மறையாத சூரியன் Read More »

குறுங்கதைகள் விமர்சனம்

பொன் மாரியப்பன். தூத்துக்குடி. காலச்சுவடு 2021 ஆகஸ்ட் மாத இதழ் வாங்கினேன். 21 குறுங்கதைகளில் தங்களின் 3 குறுங்கதைகள் படித்தேன். மூன்றும் வாசிப்பில் இனிமையும் மாற்றத்தையும் உருவாக்கியது. இது போன்ற குறுங்கதைகள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்பேன். பதினேழாவது ஆள் பழைய நிழற்படத்தைக் கொண்டு வாசிக்கும் எல்லோருடைய மனதிலும் பதினேழாவது ஆள் தோன்றி மறைகிறான்.அது தான் மனசாட்சி. அந்த நிழற்படத்தின் பதினேழாவது தான் என்னை எழுத வைக்கிறது.ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும் குரூப் போட்டோ தூசி தட்டப்படும். நினைவுகள் …

குறுங்கதைகள் விமர்சனம் Read More »

காலச்சுவடு இதழில்

இம்மாத காலச்சுவடு இதழில் எனது மூன்று குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. இதில் ஒரு கதை வைக்கம் முகமது பஷீரைப் பற்றியது. குறுங்கதைகளின் சிறப்பிதழாக காலச்சுவடு வெளியாகியுள்ளது.

கன்னடத்தில்

எனது இந்தியா கன்னடத்தில் தொடராக வெளியாகிறது. அவதி இணைய இதழில் இந்தத் தொடர் வெளியாகிறது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் கே. நல்லதம்பி. கன்னடத்திலிருந்து தமிழுக்கு சிறந்த நூல்களை மொழியாக்கம் செய்திருப்பவர். இது போலவே தமிழிலிருந்து கன்னடத்திற்கும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். அவருக்கு என் அன்பும் நன்றிகளும். இணைப்பு

இரவின் இனிமை

யாமம் – நாவல் குறித்த விமர்சனம் ஏழுமலை •• எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது. யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையைப் பெறும் அப்துல் …

இரவின் இனிமை Read More »