வல்லினம் இதழில்
வல்லினம் இணைய இதழில் எனது புதிய சிறுகதை கறுப்பு ரத்தம் வெளியாகியுள்ளது. https://vallinam.com.my/version2/?p=7442&fbclid=IwAR3oh6k5UlTlhF1ikVWqZmFgF8h1UwlZKltZ3zDDuCYjZGHBoAyU0zPt3tw
வல்லினம் இணைய இதழில் எனது புதிய சிறுகதை கறுப்பு ரத்தம் வெளியாகியுள்ளது. https://vallinam.com.my/version2/?p=7442&fbclid=IwAR3oh6k5UlTlhF1ikVWqZmFgF8h1UwlZKltZ3zDDuCYjZGHBoAyU0zPt3tw
காந்தியவாதியும் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான அருமை நண்பர் டாக்டர் ஜீவா ( ஈரோடு) இன்று காலமானார். எளிமையும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட அற்புதமான மனிதர். நிறைய மொழியாக்க நூல்களை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியதில் முன்னோடி. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இன்று காலை 44- வது சென்னை புத்தகக் காட்சி இனிதே துவங்கியது. தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 494 & 495ல் தயாராகிவிட்டது. எனது புதிய நூல்களையும் தேசாந்திரியின் பிற வெளியீடுகள் அனைத்தையும் இந்த அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய சிறந்த நூல்கள் குறித்த பரிந்துரைகளை தினமும் வெளியிட இருக்கிறேன். அத்துடன் காணொளி மூலமாகவும் எனது பரிந்துரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் தினமும் காலை 11 மணி …
சென்னைப் புத்தகக் காட்சியில் தேசாந்திரி அரங்கு மற்றும் புதிய நூல்கள் குறித்த அறிமுகம்.
தேசாந்திரி பதிப்பகம் எனது ஒவிய நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 494 & 495ல் இந்த நூல்களைப் பெறலாம்.
தேசாந்திரி பதிப்பகம் சார்பில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் புதிய வெளியீடுகள். புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 494 & 495 ல் புதிய நூல்களைப் பெறலாம்.
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 494 மற்றும் 495. எட்டாவது நுழைவாயிலின் இறுதியில் அமைந்துள்ளது. பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 9 வரை புத்தக் காட்சி நடைபெறுகிறது தினமும் காலை 11 மணி இரவு 8 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். எனது எல்லா நூல்களையும் தேசாந்திரி அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் வருக
ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது. அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன். பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன். சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
பத்திரிக்கையாளரும் எனது நண்பருமான ஜென்ராம் புதிய யூடியூப் சேனல் ஒன்றினைத் துவக்கியுள்ளார்.அந்தச் சேனலுக்காக ஜென் ராம் அவர்களுடன் Life in a day ஆவணப்படம் குறித்து உரையாடினேன்.