அறிவிப்பு

புத்தகக் காட்சி துவங்கியது

இன்று காலை 44- வது சென்னை புத்தகக் காட்சி இனிதே துவங்கியது. தேசாந்திரி பதிப்பகம் அரங்கு எண் 494 & 495ல் தயாராகிவிட்டது. எனது புதிய நூல்களையும் தேசாந்திரியின் பிற வெளியீடுகள் அனைத்தையும் இந்த அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய சிறந்த நூல்கள் குறித்த பரிந்துரைகளை தினமும் வெளியிட இருக்கிறேன். அத்துடன் காணொளி மூலமாகவும் எனது பரிந்துரைகளை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன். புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் தினமும் காலை 11 மணி …

புத்தகக் காட்சி துவங்கியது Read More »

ஒவிய நூல்கள்

தேசாந்திரி பதிப்பகம் எனது ஒவிய நூல்களின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. சென்னைப் புத்தகக் கண்காட்சி தேசாந்திரி அரங்கு எண் 494 & 495ல் இந்த நூல்களைப் பெறலாம்.

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகும் புதிய வெளியீடுகள். புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 494 & 495 ல் புதிய நூல்களைப் பெறலாம்.

தேசாந்திரி அரங்கு

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது கடை எண் 494 மற்றும் 495. எட்டாவது நுழைவாயிலின் இறுதியில் அமைந்துள்ளது. பிப்ரவரி மாதம் 24ம் தேதி முதல் மார்ச் 9 வரை புத்தக் காட்சி நடைபெறுகிறது தினமும் காலை 11 மணி இரவு 8 வரை இந்தக் கண்காட்சி நடைபெறும். எனது எல்லா நூல்களையும் தேசாந்திரி அரங்கில் பெற்றுக் கொள்ளலாம். அனைவரும் வருக

நீலம் இதழில்

ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது. அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன். பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.

திரைப்படவிழாவில்

சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன். சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

கற்றுத் தரும் உலகம்

பத்திரிக்கையாளரும் எனது நண்பருமான ஜென்ராம் புதிய யூடியூப் சேனல் ஒன்றினைத் துவக்கியுள்ளார்.அந்தச் சேனலுக்காக ஜென் ராம் அவர்களுடன் Life in a day ஆவணப்படம் குறித்து உரையாடினேன்.

தாகூரைப் பற்றி

சொல்வனம் இணைய இதழ் சார்பில் வங்காள இலக்கியத்திற்கான சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிரத்தையாக, விரிந்த தளத்தில் செறிவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு இளம்வாசகனுக்கு இந்தச் சிறப்பிதழ் பெரும்பொக்கிஷமாகவே அமையும். சொல்வனம் ஆசிரியர் குழு சிறப்பான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த பாஸ்டன் பாலா, நம்பிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குழுவினர், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். இந்தச் சிறப்பிதழுக்காக அற்புதமான லோகோ அமைத்தவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள். சொல்வனம் இதழில் சத்யஜித்ரே இயக்கிய தாகூர் பற்றிய …

தாகூரைப் பற்றி Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4

புத்தக வாசிப்பை ஒரு விளையாட்டாக மாற்றக்கூடிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய சிறார் நூல்களில் இது போன்ற முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. தமிழில் இது போன்ற கதாவிளையாட்டுகள் இல்லை. ஆகவே முதன்முயற்சியாக ஒரு கதையைப் படிக்கும் வாசகர் கையில் ஒரு பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப கதையின் பாராக்களை படித்துப் போனால் எப்படியிருக்கும் என்ற சுவாரஸ்யமான விளையாட்டினை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. வீடியோ கேம் ஒன்றினை நீங்கள் புத்தகமாக உருமாற்றினால் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4 Read More »