புத்தக விமர்சனம்

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2.

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை. நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது? வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய …

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2. Read More »

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1.

காலம் : சர்வதாரி வருடம் தை 30.  ஹிஜ்ரி 1430 ஸபர் ரபிஉல் அவ்வல். பிப்ரவரி 2009. நேரம் இரவு. 10.37 சென்னை. ( பழைய பெயர் மதராஸ் அதற்கு முந்திய பெயர் மதராபட்டினம் ) தமிழ்நாடு. பழைய பெயர் ( சென்னை ராஜஸ்தானி ) தென்னிந்தியா. இந்தியா. ( சரித்திர நாவலை விமர்சனம் பண்ண வேண்டும் என்பதால் இவ்வளவு துல்லியமாக நாள் நேரம் போன்ற விபரங்களை எழுதி தொலைக்க வேண்டியுள்ளது. ) பூர்வாங்கம் சு. வெங்கடேசனின் …

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 1. Read More »

வலி தரும் முள்.

முள் – முத்துமீனாள். ஆழிபதிப்பகம் .சென்னை. 24. விலை ரூ.50. சமீபத்தில் வெளியாகியுள்ள முள் என்ற முத்துமீனாளின் நாவலை வாசித்தேன். முத்துமீனாள் கவிஞர் பௌத்த அய்யனாரின் மனைவி. சிறுபத்திரிக்கை உலகில் அய்யனார் பெரிதும் அறியப்பட்டவர்.  இதை ஒரு நாவல் என்பதை விடவும் முத்துமீனாளின் நினைவுக்குறிப்புகள் என்றே வகைப்படுத்த வேண்டும். முத்துமீனாள் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட தொழுநோய் பற்றியும் அதற்காக கும்பகோணத்தில் உள்ள கிறிஸ்துவ மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிட்சை செய்த போது ஏற்பட்ட நினைவுகளையும், நோய் நீங்கிய …

வலி தரும் முள். Read More »

நெடுங்குருதி – 2

நவீன தமிழ் இலக்கியம் குறித்த உரையாடலை வளமைப்படுத்தவும், புதிய புத்தகங்களை முறையாக வாசித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் என்ற அமைப்பில் மாதம் ஒரு புத்தகம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புத்தகம் குறித்து விரிவான கட்டுரைகள் வாசிக்கபடுகின்றன. அதன் தொடர்ச்சியாக விவாதங்களும் நடைபெறுகின்றன. எனது நாவலான நெடுங்குருதி குறித்து வாசிக்கபட்ட கட்டுரைகள் இவை *** எஸ் ராமகிருஷ்ணனின் `நெடுங்குருதி` –  ஜெயந்தி சங்கர் **ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் …

நெடுங்குருதி – 2 Read More »

நெடுங்குருதி

நவீன தமிழ் இலக்கியம் குறித்த உரையாடலை வளமைப்படுத்தவும், புதிய புத்தங்களை முறையாக வாசித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் என்ற அமைப்பில் மாதம் ஒரு புத்தகம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புத்தகம் குறித்து விரிவான கட்டுரைகள் வாசிக்கபடுகின்றன. அதன் தொடர்ச்சியாக விவாதங்களும் நடைபெறுகின்றன. எனது நாவலான நெடுங்குருதி குறித்து வாசிக்கபட்ட மூன்று கட்டுரைகள் இவை. தேர்ந்த வாசிப்பு அனுபவத்தின் வெளிப்பாடுகள் இவை. இந்த கட்டுரைகளை எழுதிய ரெ. …

நெடுங்குருதி Read More »