புத்தக விமர்சனம்

எண்ணும் மனிதன்

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் இரண்டாம் நாளில் அகல் பதிப்பகம் வெளியிட்டுள்ள மல்பா தஹான் எழுதிய எண்ணும் மனிதன் என்ற மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வந்தேன். அட்டையை பார்த்தபோது பாரசீகம் அல்லது அரபு மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். தமிழாக்கம் செய்திருப்பவர் கயல்விழி. மல்பா தஹான் என்பவர் யார். எந்த தேசத்தை சேர்ந்தவர். எந்த ஆண்டு இந்த நூல் வெளியானது என்று எந்த குறிப்பும் புத்தகத்தில் இல்லை.  பின் அட்டை குறிப்பும் மிக …

எண்ணும் மனிதன் Read More »

ஜராதுஷ்ட்ரா.

கடந்த சில வருசங்களில் நான் வாசித்த மொழிபெயர்ப்பு புத்தகங்களில் ஆகச்சிறந்தது நீட்ஷேயின் ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் என்ற புத்தகமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. நீட்ஷேயை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் ரவி. இவர் குவளை கண்ணன் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். மாயா பஜார், பிள்ளை விளையாட்டு என்று இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன. நீட்ஷேயின் ஒரு படைப்பு முழுமையாக தமிழில் வெளியாவது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன். கடவுள் இறந்து போய்விட்டார் …

ஜராதுஷ்ட்ரா. Read More »

யானையின் கண்ணீர்.

jefferey mussaieff masson  எழுதிய when elephents weep புத்தகத்தை வாசித்தேன் நியூயார்க் டைம்ஸின் அதிகம் விற்பனையான புத்தகப்பட்டியலில் இந்த நூல் இடம் பெற்றிருந்தது. உளவியல் ஆய்வாளரான ஜெப்ரி இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காடுமலை சுற்றி மிருகங்களை தொடர்ந்து அவதானித்திருக்கிறார். உளவியல் ஆய்வில் அமைந்த இந்த புத்தகம் மிக சுவாரஸ்யமான அனுபவம் தருவதாகயிருந்தது. தமிழில் மருத்துவ இலக்கியங்கள் என்று தனிவகையே இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராவணன் என்பவர் எழுதிய சிந்தாமணி வைத்திய நூல்கள் ஒலைச்சுவடிகளாக நிறைய …

யானையின் கண்ணீர். Read More »

இருள் விலகும் கதைகள்

இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது.நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில் தான் சிறுகதை அதன் உச்சபட்ச சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு விதமான கதை சொல்லும் முறைகள், கதைமொழி, வடிவ சோதனைகள், பின்நவீனத்துவன எழுத்து முறை, தலித்திய, பெண்ணிய சிந்தனை சார்ந்த சிறுகதைகள் என்று தமிழ் சிறுகதைகள் உலகின் சிறந்த சிறுகதைகளுக்குச் சமமாக எழுதப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் …

இருள் விலகும் கதைகள் Read More »

சினிமா உருவாகிறது.

தமிழில் சினிமாஸ்கோப் முறையில் உருவாக்கபட்ட முதல் படம் ராஜராஜசோழன் . எழுத்தாளர் அரு. ராமநாதன் எழுதிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் டிகேஎஸ் சகோதரர்கள் சிறப்பாக கொண்டு சென்று புகழ் பெற்றனர். இதைத் திரைப்படமாக்கியவர் ஏ.பி. நாகராஜன். சிவாஜி ராஜராஜசோழனாக நடித்திருக்கிறார். படத்தை தயாரித்தவர் ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி ( அக்னி நட்சத்திரத்தில் வில்லனாக மிகச்சிறப்பாக நடித்திருப்பார் ) இந்த படம் துவங்கிய நாள் முதல் அதன் படப்பிடிப்பு முழுவதையும் கூடவே இருந்து அவதானித்து ஒரு …

சினிமா உருவாகிறது. Read More »

குட்டி இளவரசன்

இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களில் ஒன்றான குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம். அந்துவான்த் செந்த் எக்ச்பெரி ( Antoine de Saint-Exupery)பிரெஞ்சு எழுத்தாளர். இவர் விமான ஒட்டியாக ராணுவத்தில் பணியாற்றியவர். இவர் ஒரு முறை விமானகோளாறு காரணமாக …

குட்டி இளவரசன் Read More »

சாப்பாட்டு புராணம்.

தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமையற்கலை குறித்த புத்தகங்களை வாசிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அவை மிக நுட்பமாக …

சாப்பாட்டு புராணம். Read More »

யானையின் பல்

தேக்கடியில் உள்ள வனஉயிர் காட்சியகம் ஒன்றில் யானையின் பல்லை முதன்முறையாக பார்த்தேன். சிறு வயதில்  பல்தேய்க்க மறுக்கும் சிறார்களை கேலி செய்வதற்காக வீட்டில் யானை எல்லாம் என்ன பல்லா தேய்கிறது என்பார்கள். அந்த நாளில் யானைக்கு எத்தனை பல் இருக்கிறது என்ற கேள்வி எனக்குள் எழும். ஆனால் யாரிடம் கேட்டாலும் அதற்கு பதில் இருக்காது. ஆகவே அக்கேள்வி அப்படியே புதையுண்டு போயிருந்தது வேறுவேறு அடர்ந்த காடுகளில் பிறகு பலமுறை யானைக்கூட்டங்களை  கண்டிருக்கிறேன். யானையில் ஏறி கானக உலா …

யானையின் பல் Read More »

இந்திய சரித்திரக் களஞ்சியம்

தமிழில் வெளியாகும் பெரும்பான்மை வரலாற்று நூல்கள் படிக்க அலுப்பூட்டும் நடையில் எழுதப்படுகின்றன. அத்தோடு மரபான வரலாற்றுத் தகவல்களைத் தாண்டி அதில் வேறு எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை. காலத்தைப் பிரித்து காட்டும் முறையும் மிகப் பழமையானது.  வரலாற்றை மீள்பார்வை செய்துவரும் சமகாலச் சூழலில் நவீன பிரக்ஞையுடன் கூட மறுவாசிப்பு நூல்களின் தேவை  அவசியமாக உள்ளது. அந்த வகையில் டி.டி.கோசம்பி, ரொமிலா தாபர், மற்றும் பணிக்கரின் இந்திய வரலாற்று மீள்வாசிப்புகள் முக்கியமானவை. இவ்வகையில் ப. சிவனடி எழுதி பதிநான்கு …

இந்திய சரித்திரக் களஞ்சியம் Read More »

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2.

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை. நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது? வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய …

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் – 2. Read More »