புத்தக விமர்சனம்

துயில் விமர்சனம்

புத்தகம் பேசுது, மே இதழில் வெளியாகி உள்ள துயில் நாவல் பற்றிய விமர்சனம் ** துயில் : நோய்மையின் தரிசனம் – பி.வசந்தா தமிழ் வாசகத் தளத்திற்கு நல்ல நாவல்கள் அபூர்வமாகவே வெளிவருகின்றன. இருண்மை, புரியாமொழி, கட்டுரைத்தனம், எனக் கதையின்றி வரும் நாவல்கள் வாசகரைச் சித்ரவதை செய்கின்றன. வாழ்க்கையைப்பற்றிய புரிதல் ஏற்படுத்தும் நாவல்கள் மிகவும் குறைந்துவிட்டன. இந்தக் களேபரங்களிலிருந்து விலகி சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், நோயாளிகளின் வாழ்வையும் முன்வைத்துச் சமூகத்திற்கு யதார்த்தமான நற்செய்திகளைச் சொல்லும் நாவலாய் …

துயில் விமர்சனம் Read More »

கடக்க முடியாத யாமம்

எனது நாவல் யாமம் குறித்து கவிஞர் சமயவேல் எழுதிய சிறப்பான விமர்சனக்கட்டுரை •• இரவால் கோர்க்கப்பட்ட கதைகள் – சமயவேல்   எஸ்.ராமகிருஷ்ணனின் புதினம் யாமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ஒரு கர்ண பரம்பரைக் கதைகளின் தொகுப்பு என அன்றைய புத்திலக்கியப் பரப்பால் ஒதுக்கப்பட்டது ஞாபகம் வந்தது. எனவேதான் ‘யாமம்’ பற்றிய இந்த எழுத்தாடலை ஒரு வாசகத் தளத்திலிருந்து தொடங்க விரும்புகிறேன். விதம் விதமாகக் கசியும் இருளுக்குள் ஏராளமான கதைகள் மெல்லிய குரலில் …

கடக்க முடியாத யாமம் Read More »

ஊர்வாசம்

ந.முருகேச பாண்டியன் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தேர்ந்த படிப்பாளி. தமிழில் மொழிபெயர்ப்பாகியுள்ள புத்தகங்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், புதுக்கோட்டையில் வசிக்கும் அவர் நாடகம். சிறுபத்திரிக்கை. கல்வி. நூலகத்துறை என்று விரிந்த தளங்களில் இயங்குபவர். உயிரோசை இணைய இதழில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்த கிராமத்து தெருக்களின் வழியே என்ற கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன், தனது கிராம வாழ்வின் நினைவுகளை துல்லியமாக, அதே நேரம் மிகை உணர்ச்சியின்றி அழகாக சித்தரித்திருக்கிறார் வாசிக்கும் …

ஊர்வாசம் Read More »

எஸ்.ஏ. பெருமாள்

எனது செகாவின் மீதுபனி பெய்கிறது நூல் பற்றி மிக அருமையான விமர்சனம் ஒன்றினை தமிழகத்தின் முக்கிய மார்க்சிய அறிஞரும், படைப்பாளியுமான தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் எழுதியிருக்கிறார், இது புத்தகம் பேசுது டிசம்பர் இதழில் வெளியாகி உள்ளது, வாசகர்களின் கவனத்திற்கான அந்தக் கட்டுரையைத் தந்திருக்கிறேன் •• உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல் –எஸ்.ஏ. பெருமாள்  இலக்கியங்களை வாசிப்பதும், அவற்றைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் ஒரு அற்புதக்கலை. அதுவும் கூட மிகச்சிறந்த படைப்பாளிகளுக்கே அது சாத்தியமும் ஆகும். தமிழில் ஒரு …

எஸ்.ஏ. பெருமாள் Read More »

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை

என் ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் அவர்கள் எனது சிறுகதைத்தொகுப்பான ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ பற்றி எழுதிய கட்டுரை. •• தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ‘திருநாவுக்கரசர்’ என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் …

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை Read More »

காண் என்றது இயற்கை

எனது புதிய புத்தகமான காண் என்றது இயற்கை குறித்து கவிஞர் கலாப்ரியாவின் கட்டுரை. •• காண் என்றது இயற்கை – கவிஞர் கலாப்ரியா ’நதி’ மலையாள சினிமா என்று நினைவு. வயலாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இது மொழிபெயர்ப்பு “ உன்னைக் குறித்து நான் பாடிய பாட்டுக்குஓராயிரம் அலைகள் சுருதியிட்டன உன் மனோராஜ்ஜியத்தின் நீலக்கடம்பில் நீயென் விளையாட்டோடத்தைக் கட்டிப் போட்டாய், அன்பே கட்டிப் போட்டாய்.” ஒரு நதிக்கரை. இக்கரைக்கும் அக்கரைக்கும் ஓடுகிற ஓடம், ஓட்டுகிற ஓடக்காரன்….ஓடத்தை சற்றே ஒரு …

காண் என்றது இயற்கை Read More »

சினிமா மின்னல்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச்சேர்ந்தவர் மின்னல். இவரது இயற்பெயர் உதுமான் முகையதீன்.  ஜனசக்தி இதழின் பத்திரிக்கையாளராக துவங்கி விளம்பர நிறுவன அதிபராகவும், படத்தயாரிப்பாளராகவும் இயங்கிய அவர் தனது சினிமா அனுபவங்களை தொகுத்து மறக்க முடியாத திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். நர்மதா பதிப்பகம் 2004ல் இதை வெளியிட்டுள்ளது. மிக சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த புத்தகமிது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ்முரசில் இதன் முதற்பாகம் தொடராக வெளியாகியிருக்கிறது. 2005ல்  நான் மலையாளத் திரைப்பட இயக்குனர் ஜான் …

சினிமா மின்னல். Read More »

நன்றி பாவண்ணன்

நவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் எழுத்தாளர் பாவண்ணன், மொழிபெயர்ப்பிற்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருப்பவர், தேர்ந்த வாசகர், அவரது சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும், அவை தனித்துவமான அனுபவமும் கச்சிதமான மொழிநடையும் கொண்டவை,  தான் வாசித்த புத்தகங்கள் குறித்து நுட்பமாக தொடர்ந்து எழுதி வருபவர் பாவண்ணன், அது மிகுந்த பாராட்டிற்குரியது அவர் எனது புதிய நூலான செகாவின் மீது பனி பெய்கிறது குறித்து திண்ணை இணைய இதழில் வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது” என்று ஒரு …

நன்றி பாவண்ணன் Read More »

ஒரு வாழ்க்கையின் துகள்கள்

எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது. – ஜெஸ்ஸி பெர்னார்டு மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண்உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின்நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி. ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு  ஒரு வாழ்க்கையின் …

ஒரு வாழ்க்கையின் துகள்கள் Read More »

காலத்தை செதுக்குதல்

Art could be said to be a symbol of the universe, being linked with that absolute spiritual truth which is hidden from us in our positivistic, pragmatic activities. கடந்த இரண்டு நாட்களாக தார்கோவெஸ்கியின் புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறேன். ரஷ்ய நவீன சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை ஆந்த்ரேய் தார்கோவெஸ்கி ((Andrey Tarkovsky). அவர் எழுதிய Sculpting in time  சினிமாவை பற்றிய தார்கோவெஸ்கியின் புரிதல்களை அனுபவங்களை பேசுகிறது.  கடந்த …

காலத்தை செதுக்குதல் Read More »