புத்தக விமர்சனம்

நிமித்தம் : புறக்கணிப்பின் துக்கம்

கேசவமணி *** வாழ்க்கையில் பிறர் நமக்குச் செய்யும் அவமானங்களும், துரோகங்களும் வலி நிரம்பியவைதான் என்றாலும், அவைகள் புறக்கணிப்பின் துக்கத்தைப் போல அவ்வளவு வலி நிறைந்ததல்ல. நாம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் புறக்கணிப்பின் துன்பத்திற்கு ஆளாகிறோம். ஆனாலும், ஒரு காது கேளாதவனின் புறக்கணிப்பின் துக்கத்தை நாம் ஒரு போதும் உணர முடியாது. அதை அந்த உலகத்தில் இருப்பவர்களால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் தேவராஜ் எனும் காது கேளாத மனிதனின் துக்கத்தை, வலியை, வேதனையை எஸ்.ராமகிருஷ்ணன் உணர்வுப் …

நிமித்தம் : புறக்கணிப்பின் துக்கம் Read More »

நோய்மையை விசாரிக்கும் துயில்

ந.முருகேசபாண்டியன் மதங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு காலந்தோறும் தொடர்கின்றது. உடல்ரீதியிலும் மனரீதியிலும் வாடி வதங்கிடும் மனிதனுக்கு ஆறுதல் அளிக்க கடவுள் தேவைப்படுகிறார். உடல்கள் அனுபவிக்கும் இன்பங்கள் கீழானவை என்ற கருத்தை வலியுறுத்துகிறது மதம். இந்நிலையில் ஏதோவொரு காரணத்தால் உடல் நலிவடைந்து நோய்க்குள்ளாகும்போது, கடவுள் தந்த தண்டனையாகக் கருதுவது வழக்கினில் உள்ளது. தங்கள் நோயைப் போக்க கடவுளிடம் மன்றாடுவது உலகமெங்கும் நடைபெறுகிறது. இத்தகைய துயில்தரு மாதா ஆலயம் உள்ள தெக்கோடு கிராமத்தில் ஆனி மாதம் திருவிழா …

நோய்மையை விசாரிக்கும் துயில் Read More »

உறுபசி – தீராத மோகம்

 அமெரிக்காவில் வாழும் கணிதவியல் அறிஞர் பாஸ்கர் லட்சுமண் உறுபசி நாவல் குறித்து எழுதியுள்ள விமர்சனம்,  பாஸ்கர், தேர்ந்த இலக்கிய வாசகர், சொல்வனம் இணைய இதழில் கணித ஆளுமைகள் பற்றி மிகச்சிறப்பான கட்டுரைகளை எழுதிவருகிறார், ***  எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம் -பாஸ்கர் லட்சுமண் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து …

உறுபசி – தீராத மோகம் Read More »

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும்

கடந்த சனிக்கிழமை டிஸ்கவரி புக் பேலஸ் நடத்திய துயில் பற்றிய விமர்சனக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது, நிறைய வாசகர்கள் துயில் குறித்து ஆர்வமான கேள்விகளைக் கேட்டார்கள், நேரலையின் வழியாகவும் இந்த நிகழ்ச்சி நிறைய நண்பர்களால் கேட்கப்பட்டிருக்கிறது. முனைவர் இராம குருநாதன் அவர்கள் துயில் விமர்சனக்கூட்டத்திற்கு தலைமையேற்று நாவல் குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தினார் , தமிழின் மரபு இலக்கியங்களைப் பற்றிய நுண்மையான புலமை கொண்ட இராம குருநாதன் அவர்கள், நவீன இலக்கியப்படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்து பல்வகை விமர்சனக்கோட்பாடுகளைக் கொண்டு துல்லியமான …

துயில் – நாவலும், நோய்மை பற்றிய புரிதலும் Read More »

சாக்லேட் கனவுகள்

I am only 8 years old, I told myself. No little boy of 8 has ever murdered anyone. It’s not possible. Roald Dahl உலக அளவிலான சிறுவர்களுக்கான இலக்கியம் குறித்து தமிழில் அதிகம் பேசப்படுவதேயில்லை, அப்படி பேசப்பட வேண்டிய முக்கியமானவர்களில் ஒருவர் ரொவால்ட் டால் (Roald Dahl). சிறுவர்களுக்கான அவரது புனைகதைகள் உலகப்புகழ் பெற்றவை, அதே அளவிற்கு அவரது சிறுகதைகளும் முக்கியமானவை, திகில் ஊட்டும் சம்பவங்களைக் குடும்பச் சூழலின் பின்புலத்தில் …

சாக்லேட் கனவுகள் Read More »

கதைக்கம்பளம் விமர்சனம்

குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள ஏழு புத்தகங்கள் குறித்த விமர்சனம்,  எஸ்.வி,வேணுகோபாலன் கதைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக எழுதியிருக்கிறார், அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி. ** கதைகளின் உலகிற்குக் குழந்தைகளை மீட்டெடுக்கும் அற்புதக் கற்பனைக் கொத்துக்கள்… எஸ் வி வேணுகோபாலன் ஏய், சிப்பு, குப்பு, பப்பு, திப்பு, கப்பு,லப்பு, மப்பு. ….எல்லாம் இங்க பக்கத்திலே வந்து உக்காருங்க. முதல்ல எல்லாரும் கண்களை மூடிக்கணும். நான் சொல்ற வரைக்கும் திறக்கக் கூடாது. சுவாரசியமா சில விஷயங்களைக் காட்டப் …

கதைக்கம்பளம் விமர்சனம் Read More »

துயில் விம‌ர்ச‌ன‌ம்

– டி.சே. த‌மிழ‌ன் 1. நாம் எத்த‌னையோ இட‌ங்க‌ளுக்கு நம் வாழ்வில் ப‌ய‌ணித்திருப்போம். அவ்வ‌வ்விட‌ங்களின் இய‌ற்கையின‌தோ, க‌ட்டிட‌க்க‌லையின‌தோ அழ‌கைக் க‌ண்டு ம‌ன‌ஞ்சிலிர்த்து இர‌சித்துமிருப்போம். ஆனால் எப்போதாவ‌து நாம் நின்று இர‌சிக்கும் இட‌த்தின் நில‌விய‌லும் வாழ்விய‌லும் எவ்வாறு சில‌ தசாப்த‌ங்க‌ளுக்கோ, நூற்றாண்டுக‌ளுக்கு முன்னே இருந்திருக்கும் என்று யோசித்த‌துண்டா?  அவ்வாறு பிர‌பல்ய‌ம் வாய்ந்த‌ ஒரு தேவால‌ய‌த்தின் வ‌ர‌லாற்றையும், அத‌னோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளையும் விரிவாக‌ப் பேசுகின்ற‌ ஒரு நாவ‌ல்தான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘துயில்’. இத்தேவால‌ய‌ம் பிற்கால‌த்தில் (அல்ல‌து நிக‌ழ்கால‌த்தில்) நோய்மையுற்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ம்பிக்கை த‌ரும் …

துயில் விம‌ர்ச‌ன‌ம் Read More »

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல்

தீவிர இலக்கிய வாசகரும் எனது நண்பருமான கார்த்திகைப் பாண்டியன் நெடுங்குருதி நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனம். •• ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள்எவையெவை என்று சொல்லலாம்… அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறியஒன்றும் இருக்கிறது. அது  அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை. இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில்குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு …

நெடுங்குருதி : விசித்திரத்தின் அழகியல் Read More »

மாற்று சினிமா

கிராபியன் ப்ளாக் ஒரு இளம் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், திரைத்துறையிலும் பத்திரிக்கையிலும் தொடர்ந்து பணியாற்றிவருகிறார், அவரது இரண்டு புத்தகங்களை சமீபத்தில் வாசித்தேன், ஒன்று மாற்றுசினிமா, மற்றது திரைப்படக்கல்லூரி ஆளுமைகள், இரண்டையும்  புதிய கோணம் என்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது இதில் மாற்றுசினிமா தமிழில் வெளியான 32 சிறந்த குறும்படங்களைப் பற்றியது, குறும்படத்திற்கான விமர்சனம் என்பதோடு. அந்த இயக்குனரைப் பற்றியும் குறும்படங்களின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான முதற்படி என்று சொல்வது சரியான ஒன்றே, இதன்வழியே புதிய …

மாற்று சினிமா Read More »

வரலாறு என்னும் கதை

எடுவர்டோ கலியானோ (Eduardo  Galeano) மிக முக்கியமான லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்,  உருகுவேயைச் சேர்ந்தவர், பத்திரிக்கையாளராக துவங்கி முக்கிய வரலாற்றுஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் தனிஇடம் கொண்டவர் இவரது Mirrors: Stories of Almost Everyone படித்திருக்கிறேன், கலியானோவின் எழுத்து மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டது, நேரடியான அரசியல் ஈடுபாடும் இடதுசாரிக் கருத்தியலும் கொண்ட எழுத்தாளர் இவர், போர்ஹெஸ், மார்க்வெஸ், ப்யூந்தஸ். இசபெல் ஆலெண்டே, கொர்த்தசார், லோசா,  நெரூதா. ஆக்டோவியா பாஸ் என்று பல லத்தீன் அமெரிக்க …

வரலாறு என்னும் கதை Read More »