சிறுகதை

ஆப்பிளுடன் ஒரு நடனம்

புதிய சிறுகதை. ஆகஸ்ட் 20.2025 அது இரண்டரை நிமிஷ வீடியோ. விஜயராகவனின் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. இரண்டு நாட்களுக்குள் பத்து முறைக்கும் மேலாகப் பார்த்துவிட்டிருந்தார். துனிசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலையில் ஆப்பிள் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடுகிறாள். பூக்கள் நிரம்பிய அடர்நீல பாவாடை. முடிச்சிட்ட வெண்ணிற ஜாக்கெட். காதில் இரண்டுவகை காதணிகள். கையில் பட்டாம்பூச்சி உருவம் கொண்ட பிரேஸ்லெட். அவள் சுழன்றாடும் வேகத்திலும் ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழவில்லை. அந்தப் பெண்ணிற்கு இருபது வயதிற்குள் இருக்கக் கூடும். …

ஆப்பிளுடன் ஒரு நடனம் Read More »

சாய்ந்தாடும் குதிரை

புதிய சிறுகதை. – July25. அவன் வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் கிரௌன் தியேட்டர் சாலையில் நிறையப் பழைய மரசாமான்கள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் வெளியே ஸ்டீல் நாற்காலி, இரும்பு பீரோ. மரக்கதவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். வீட்டிலிருந்து வெளியேறியதும் கதவுகள் பற்களை இழந்த மனிதனைப் போலாகி விடுகின்றன.. விடிகாலையில் நடக்கும் போது இரவு விளக்கின் மஞ்சள் வெளிச்சமும் காலையின் மென்னொளியும் கலந்து அந்தச் சாலை விநோதமாகத் தோற்றமளிக்கும். வீதியோர மரங்களில் அசைவேயிருக்காது. …

சாய்ந்தாடும் குதிரை Read More »

வெயில் வரைந்த ஓவியம்

புதிய சிறுகதை சாலை ஓவியன் இறந்து கிடந்தான். அருகில் அவன் வரைந்த யானை ஒவியமிருந்தது. ஒவியனுக்கு நாற்பது வயதிருக்ககூடும். கோரையான தாடி. கழுத்துவரை நீண்ட தலைமயிர்.. அழுக்கடைந்து போன காக்கி பேண்டும், கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அவன் விழுந்துகிடந்த நிலை சாலையில் அவனே ஒவியமாகக் கிடப்பது போலிருந்தது. பரபரப்பான மாநகரின் காலை நேரத்தில் அவனைக் கவனிக்க யாருமில்லை. பள்ளிச்சிறுவர்களில் இருவர் இறந்தவனின் அருகே குனிந்து பார்த்துவிட்டு செத்துப்போயிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். இறந்தவனை என்ன செய்வது …

வெயில் வரைந்த ஓவியம் Read More »

நிழல் உண்பதில்லை

புதிய சிறுகதை. காலம் இதழில் வெளியானது. 2025 விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடைப்பெண் சலிப்பான குரலில் சொன்னாள். “கவிதைப் புத்தகங்களை யாரும் வாங்குவதில்லை. இரண்டு வருஷங்களாக இந்தக் கடையில் வேலைபார்க்கிறேன். நீங்கள் தான் கவிதைப் புத்தகம் கேட்ட முதல் ஆள்“. “எனக்கு வானத்தில் கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்“ என்றான் மதன்குமார். “நீங்கள் கவிஞரா“ என்று கேட்டாள் அப்பெண் “இல்லை. கவிதை வாசகன். உங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமா. “ “ஆமாம்“ என்று தலையாட்டினாள். “நான் சாக்லேட்டிற்குப் பதிலாகக் கவிதைகளைச் …

நிழல் உண்பதில்லை Read More »

கேளா வரம்

புதிய சிறுகதை அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார். இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.. அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான, மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். …

கேளா வரம் Read More »

கழுத்து நீண்ட விளக்கு

புதிய சிறுகதை. 26.11.24 . மழை பெய்யப்போவது போலக் காற்று வேகமாகியிருந்தது. சாத்தப்படாத ஜன்னல் காற்றின் வேகத்தில் அடிக்கும் சப்தம் கேட்டு படுக்கையிலிருந்து ராமநாதன் எழுந்து கொண்டார். ஜன்னலை மூடிவிட்டுத் திரும்பும் போது பாதித் திறந்திருந்த பிரபுவின் அறையில் சிரிப்புச் சப்தம் கேட்டது. அறைக் கதவைத் தள்ளி ராமநாதன் உள்ளே எட்டிப் பார்த்தார். பிரபு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துச் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாகப் பாடம் படிக்கலாமே. ஏன் இப்படி …

கழுத்து நீண்ட விளக்கு Read More »

மகிழ்ச்சியின் இசைத்தட்டு

புதிய சிறுகதை. செப்டம்பர் 1 , 2024 புதன்கிழமையோடு ஜெயசங்கரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறாள். அதற்கான பிரிவு உபசார விழா விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். விழாவைப் புதுமையாக நடத்த வேண்டும் என்றாள் விமலா. ஆனால் என்ன புதுமை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஜெயசங்கரி பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாம் என்ற யோசனையைச் சொன்னது மதுரவன். அவரே அலுவலக விழாக்களில் எடுக்கபட்ட பழைய புகைப்படங்களைத் தேடி …

மகிழ்ச்சியின் இசைத்தட்டு Read More »

பசித்தவர்

புதிய சிறுகதை தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து அடுக்கு டிபன்கேரியரைப் பார்த்தபடியே இருந்தார் துரைக்கண்ணு. நாற்பத்தியாறு வயதிற்குள் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. எப்போதும் அணிவது போன்ற வெள்ளைச் சட்டை. பளுப்பு நிற பேண்ட். அகலமான பிரேம் கொண்ட கண்ணாடி. அவரது சட்டைபையில் ஒரு மொபைல் போன். கையில் ஒரு மொபைல் போன். சற்றே பெரிய காதுகள். இடது கண் ஓரம் சிறிய மச்சம். சமீபமாக யாராவது அதிர்ந்து பேசினால் கை நடுக்கம் வந்துவிடுகிறது. அரசாங்க விருந்தினர் …

பசித்தவர் Read More »

அப்பாவின் வருகை.

புதிய சிறுகதை. 2024 சண்டிகரிலிருந்த அவனது வீட்டுப் படியில் அப்பா உட்கார்ந்திருந்தார். குமார் அவரை எதிர்ப்பார்க்கவில்லை. மதுரையில் இருந்த அப்பா எதற்காகத் திடீரென வந்து நிற்கிறார் என்று புரியவும் இல்லை. தனது பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு புன்சிரிப்புடன் அப்பாவை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்தவுடன் அப்பா எழுந்து கொண்டபடி கையில் வைத்திருந்த காய்ந்த கொய்யா இலையை வீசி எறிந்தார். ஒடிசலான உருவம். தலை முழுவதும் நரைத்துவிட்டது. எப்போதும் அணிவது போலக் கோடு போட்ட சட்டை. அடர்பச்சை நிற …

அப்பாவின் வருகை. Read More »

சிறகுள்ள புலி

புதிய நெடுங்கதை. அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பதினாறு ஆண்டுகள் ஆகியிருந்தது. இன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்கள். பூமாலை கொல்லப்பட்ட போது வெயிலானுக்கு வயது ஆறு. அந்த வழக்கில் எதிரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட தனுக்கோடி நாலு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போய்விட்டார். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கமாரியப்பன் இப்போது நகராட்சி துணைத் தலைவராகிவிட்டார். அவரது இரண்டாவது மகன் ஆனந்த் உள்ளூரிலே வக்கீல் , அடுத்தவன் பிரபு பைபாஸ் ரோட்டில் பெரிய ஹோட்டல் …

சிறகுள்ள புலி Read More »