சிறுகதை

பறக்கத் தெரிந்த யானை

புதிய சிறுகதை. நவம்பர் 6. 2025 திவான் பூந்தானம் அந்தக் கடிதத்தைத் திரும்பவும் படித்துப் பார்த்தார். கொச்சியிருந்து ரெசிடெண்ட் வில்லியம் டக்ள்ஸ் அதனை அனுப்பியிருந்தார். அதில் இந்தியாவின் பேரரசியும் இங்கிலாந்தின் மகாராணியுமான விக்டோரியா கால்மூட்டு வீக்கத்தால் அதிகம் வலியை அனுபவித்து வருவதாகவும் அதற்கு வைத்தியம் செய்வதற்காக நெல்லியடி ஆசான் மாடப்பனை உடனே லண்டன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூடவே. தேவையான பச்சிலைகள் மற்றும் உதவியாளர்களை அனுப்ப வேண்டும். அவசரக் காரியம். என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லியடி எங்கேயிருக்கிறது …

பறக்கத் தெரிந்த யானை Read More »

மற்ற பாதி

புதிய சிறுகதை கையில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரத்னசபாபதி. மறதி வந்துவிட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்று சில நாட்கள் குழப்பம் வந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்தக் குழப்பம் இரவு நேரம் தான் ஏற்படுகிறது. இதனால் ஒரு நாள் இரண்டுமுறை மாத்திரை சாப்பிட்டு விட்டார். மறுநாள் முழுவதும் தலைசுற்றலாக இருந்தது. ஆகவே தேதி நேரத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தைத் துவங்கினார். மாத்திரை போட்டோமா எனச் சந்தேகம் வந்தால் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் …

மற்ற பாதி Read More »

கல்பனாவின் வியாழக்கிழமை

புதிய சிறுகதை. சதாசிவம் வீட்டின் முன்பு வந்து கல்பனா நின்றபோது மணி நாலு இருபத்தியாறு ஆகியிருந்தது. அவளாகத் தேர்வு செய்து எடுத்து வந்திருந்த வுதரிங் ஹைட்ஸ் நாவலை கையில் வைத்திருந்தாள். நிச்சயம் அவருக்குப் பிடிக்கக் கூடும் என்று தோன்றியது. சதாசிவம் வீட்டினை சேர்மன் ஹவுஸ் என்று அழைத்தார்கள். சதாசிவத்தின் அப்பா நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அவர் யானை சின்னத்தில் நின்று தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். அதன் நினைவாக வீட்டுத் தோட்டத்தில் யானை சிலை செய்து வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் …

கல்பனாவின் வியாழக்கிழமை Read More »

ஆப்பிளுடன் ஒரு நடனம்

புதிய சிறுகதை. ஆகஸ்ட் 20.2025 அது இரண்டரை நிமிஷ வீடியோ. விஜயராகவனின் வாட்ஸ்அப்பில் வந்திருந்தது. இரண்டு நாட்களுக்குள் பத்து முறைக்கும் மேலாகப் பார்த்துவிட்டிருந்தார். துனிசியாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தலையில் ஆப்பிள் ஒன்றை வைத்துக் கொண்டு ஆடுகிறாள். பூக்கள் நிரம்பிய அடர்நீல பாவாடை. முடிச்சிட்ட வெண்ணிற ஜாக்கெட். காதில் இரண்டுவகை காதணிகள். கையில் பட்டாம்பூச்சி உருவம் கொண்ட பிரேஸ்லெட். அவள் சுழன்றாடும் வேகத்திலும் ஆப்பிள் தலையிலிருந்து கீழே விழவில்லை. அந்தப் பெண்ணிற்கு இருபது வயதிற்குள் இருக்கக் கூடும். …

ஆப்பிளுடன் ஒரு நடனம் Read More »

சாய்ந்தாடும் குதிரை

புதிய சிறுகதை. – July25. அவன் வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் கிரௌன் தியேட்டர் சாலையில் நிறையப் பழைய மரசாமான்கள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் வெளியே ஸ்டீல் நாற்காலி, இரும்பு பீரோ. மரக்கதவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். வீட்டிலிருந்து வெளியேறியதும் கதவுகள் பற்களை இழந்த மனிதனைப் போலாகி விடுகின்றன.. விடிகாலையில் நடக்கும் போது இரவு விளக்கின் மஞ்சள் வெளிச்சமும் காலையின் மென்னொளியும் கலந்து அந்தச் சாலை விநோதமாகத் தோற்றமளிக்கும். வீதியோர மரங்களில் அசைவேயிருக்காது. …

சாய்ந்தாடும் குதிரை Read More »

வெயில் வரைந்த ஓவியம்

புதிய சிறுகதை சாலை ஓவியன் இறந்து கிடந்தான். அருகில் அவன் வரைந்த யானை ஒவியமிருந்தது. ஒவியனுக்கு நாற்பது வயதிருக்ககூடும். கோரையான தாடி. கழுத்துவரை நீண்ட தலைமயிர்.. அழுக்கடைந்து போன காக்கி பேண்டும், கோடு போட்ட சட்டையும் அணிந்திருந்த அவன் விழுந்துகிடந்த நிலை சாலையில் அவனே ஒவியமாகக் கிடப்பது போலிருந்தது. பரபரப்பான மாநகரின் காலை நேரத்தில் அவனைக் கவனிக்க யாருமில்லை. பள்ளிச்சிறுவர்களில் இருவர் இறந்தவனின் அருகே குனிந்து பார்த்துவிட்டு செத்துப்போயிட்டான் என்று பேசிக் கொண்டார்கள். இறந்தவனை என்ன செய்வது …

வெயில் வரைந்த ஓவியம் Read More »

நிழல் உண்பதில்லை

புதிய சிறுகதை. காலம் இதழில் வெளியானது. 2025 விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடைப்பெண் சலிப்பான குரலில் சொன்னாள். “கவிதைப் புத்தகங்களை யாரும் வாங்குவதில்லை. இரண்டு வருஷங்களாக இந்தக் கடையில் வேலைபார்க்கிறேன். நீங்கள் தான் கவிதைப் புத்தகம் கேட்ட முதல் ஆள்“. “எனக்கு வானத்தில் கவிதைகள் வாசிக்கப் பிடிக்கும்“ என்றான் மதன்குமார். “நீங்கள் கவிஞரா“ என்று கேட்டாள் அப்பெண் “இல்லை. கவிதை வாசகன். உங்களுக்குச் சாக்லேட் பிடிக்குமா. “ “ஆமாம்“ என்று தலையாட்டினாள். “நான் சாக்லேட்டிற்குப் பதிலாகக் கவிதைகளைச் …

நிழல் உண்பதில்லை Read More »

கேளா வரம்

புதிய சிறுகதை அந்த நபர் ரயிலில் பாஸ்கரனுக்கு எதிராக அமர்ந்திருந்தார். இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியின் முதல்பகுதியது. மற்ற இரண்டு பயணிகள் வரவில்லை. ஒருவேளை விழுப்புரத்தில் ஏறுவார்களோ என்னவோ. அந்த நபர் ஆங்கில வார இதழ் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்.. அந்த நபருக்கு ஐம்பது வயதிற்குள் இருக்கக் கூடும்.. சிவப்பான, மெலிந்த உடல். பட்டையான கோல்ட் பிரேம் போட்ட கண்ணாடி. இடது புருவத்தில் ஒரேயொரு நரைமயிர் நீட்டிக் கொண்டு தெரிந்தது. சிகரெட் பிடிப்பவர் போலத் தோலுரித்த உதடுகள். …

கேளா வரம் Read More »

கழுத்து நீண்ட விளக்கு

புதிய சிறுகதை. 26.11.24 . மழை பெய்யப்போவது போலக் காற்று வேகமாகியிருந்தது. சாத்தப்படாத ஜன்னல் காற்றின் வேகத்தில் அடிக்கும் சப்தம் கேட்டு படுக்கையிலிருந்து ராமநாதன் எழுந்து கொண்டார். ஜன்னலை மூடிவிட்டுத் திரும்பும் போது பாதித் திறந்திருந்த பிரபுவின் அறையில் சிரிப்புச் சப்தம் கேட்டது. அறைக் கதவைத் தள்ளி ராமநாதன் உள்ளே எட்டிப் பார்த்தார். பிரபு கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துச் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான். இப்படி நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாகப் பாடம் படிக்கலாமே. ஏன் இப்படி …

கழுத்து நீண்ட விளக்கு Read More »

மகிழ்ச்சியின் இசைத்தட்டு

புதிய சிறுகதை. செப்டம்பர் 1 , 2024 புதன்கிழமையோடு ஜெயசங்கரி அலுவலகத்திலிருந்து ஓய்வு பெறுகிறாள். அதற்கான பிரிவு உபசார விழா விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். விழாவைப் புதுமையாக நடத்த வேண்டும் என்றாள் விமலா. ஆனால் என்ன புதுமை. அதை எப்படிச் செயல்படுத்துவது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஜெயசங்கரி பற்றிய புகைப்படக் கண்காட்சி ஒன்று வைக்கலாம் என்ற யோசனையைச் சொன்னது மதுரவன். அவரே அலுவலக விழாக்களில் எடுக்கபட்ட பழைய புகைப்படங்களைத் தேடி …

மகிழ்ச்சியின் இசைத்தட்டு Read More »