இரண்டாவது நிழல்
புதிய சிறுகதை என் பெயர் ராமசேஷன். இதே தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் நாவல் எழுதியிருப்பதை அறிவேன். எனது கல்லூரி நாட்களில் நான் ஆதவனை விரும்பிப் படித்திருக்கிறேன். எனக்கு இந்தப் பெயரை வைத்த என்னுடைய தந்தை ஆதவனைப் படித்ததில்லை. தாத்தாவின் பெயர் என்பதால் எனக்கு வைத்துவிட்டார். சொல்லப் போனால் நானும் ஆதவன் போலவே நடுத்தரவயது கொண்ட, விருப்பமில்லாத அரசுத்துறை ஒன்றில் பணியாற்றுகிறவன். எனக்குச் சில புத்திசாலித்தனமான கிறுக்குத்தனங்கள் உண்டு. அதில் ஒன்று நானாக எதையும் கற்பனை செய்து கொள்வது. …