சிறுகதை

பசித்தவர்

புதிய சிறுகதை தரையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து அடுக்கு டிபன்கேரியரைப் பார்த்தபடியே இருந்தார் துரைக்கண்ணு. நாற்பத்தியாறு வயதிற்குள் தலை முழுவதும் நரைத்துப் போய்விட்டது. எப்போதும் அணிவது போன்ற வெள்ளைச் சட்டை. பளுப்பு நிற பேண்ட். அகலமான பிரேம் கொண்ட கண்ணாடி. அவரது சட்டைபையில் ஒரு மொபைல் போன். கையில் ஒரு மொபைல் போன். சற்றே பெரிய காதுகள். இடது கண் ஓரம் சிறிய மச்சம். சமீபமாக யாராவது அதிர்ந்து பேசினால் கை நடுக்கம் வந்துவிடுகிறது. அரசாங்க விருந்தினர் …

பசித்தவர் Read More »

அப்பாவின் வருகை.

புதிய சிறுகதை. 2024 சண்டிகரிலிருந்த அவனது வீட்டுப் படியில் அப்பா உட்கார்ந்திருந்தார். குமார் அவரை எதிர்ப்பார்க்கவில்லை. மதுரையில் இருந்த அப்பா எதற்காகத் திடீரென வந்து நிற்கிறார் என்று புரியவும் இல்லை. தனது பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு புன்சிரிப்புடன் அப்பாவை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்தவுடன் அப்பா எழுந்து கொண்டபடி கையில் வைத்திருந்த காய்ந்த கொய்யா இலையை வீசி எறிந்தார். ஒடிசலான உருவம். தலை முழுவதும் நரைத்துவிட்டது. எப்போதும் அணிவது போலக் கோடு போட்ட சட்டை. அடர்பச்சை நிற …

அப்பாவின் வருகை. Read More »

சிறகுள்ள புலி

புதிய நெடுங்கதை. அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்குப் பதினாறு ஆண்டுகள் ஆகியிருந்தது. இன்று அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்கள். பூமாலை கொல்லப்பட்ட போது வெயிலானுக்கு வயது ஆறு. அந்த வழக்கில் எதிரிகளில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட தனுக்கோடி நாலு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போய்விட்டார். முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கமாரியப்பன் இப்போது நகராட்சி துணைத் தலைவராகிவிட்டார். அவரது இரண்டாவது மகன் ஆனந்த் உள்ளூரிலே வக்கீல் , அடுத்தவன் பிரபு பைபாஸ் ரோட்டில் பெரிய ஹோட்டல் …

சிறகுள்ள புலி Read More »

இரண்டாவது நிழல்

புதிய சிறுகதை என் பெயர் ராமசேஷன். இதே தலைப்பில் எழுத்தாளர் ஆதவன் நாவல் எழுதியிருப்பதை அறிவேன். எனது கல்லூரி நாட்களில் நான் ஆதவனை விரும்பிப் படித்திருக்கிறேன். எனக்கு இந்தப் பெயரை வைத்த என்னுடைய தந்தை ஆதவனைப் படித்ததில்லை. தாத்தாவின் பெயர் என்பதால் எனக்கு வைத்துவிட்டார். சொல்லப் போனால் நானும் ஆதவன் போலவே நடுத்தரவயது கொண்ட, விருப்பமில்லாத அரசுத்துறை ஒன்றில் பணியாற்றுகிறவன். எனக்குச் சில புத்திசாலித்தனமான கிறுக்குத்தனங்கள் உண்டு. அதில் ஒன்று நானாக எதையும் கற்பனை செய்து கொள்வது. …

இரண்டாவது நிழல் Read More »

முப்பது வயதுச் சிறுவன்

புதிய சிறுகதை. சேதுராமனின் அப்பா கனவில் வந்திருந்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மனிதர் இப்போது ஏன் கனவில் தோன்றினார் என்று முரளிதரனுக்கு வியப்பாக இருந்தது. கண்விழித்த பிறகும் அவரைப் பற்றிய நினைவே மேலோங்கியது. படுக்கை அருகேயிருந்த இரவு விளக்கைப் போட்டார். ஆரஞ்சு வெளிச்சம் பரவியது. சுவரில் இருந்த கடிகாரம் மணி மூன்றரை என்று காட்டியது. இப்போது இந்தியாவில் பகல்நேரம். டென்வரில் பின்னிரவு. விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது. முதுமையில் தான் பள்ளி பற்றிய கனவுகள் நிறைய வருகின்றன. …

முப்பது வயதுச் சிறுவன் Read More »

மரங்களின் கடல்

புதிய சிறுகதை நரேந்திரன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது அலுவலகத்திலிருந்து பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சுற்றுலா அனுப்பி வைக்கபடுவார்கள். இந்த முறை அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அயோகிகஹாரா என்ற புகழ்பெற்ற வனத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி அந்தக் காட்டின் காணொளிகளைப் பார்த்தான். தற்கொலைக்குப் புகழ்பெற்ற காடு என்றார்கள்.. அவர்கள் நிறுவனத்தில் நேரந்தவறாமை, முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்வது. உரத்த சப்தமின்றிப் பணியாற்றுவது அடிப்படை விதிகளாகும். …

மரங்களின் கடல் Read More »

கவளம்

புதிய சிறுகதை. ஜனவரி 2. 2024 சமையல் வேலையிலிருந்த சாந்தாவிற்கு அப்பா எதையோ சப்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பது கேட்டது. பக்கவாதம் வந்து வலதுகையும் காலும் செயல்பட முடியாமல் அப்பா படுக்கையில் கிடந்தார். முகமும் லேசாகக் கோணிப்போயிருந்தது. பகல் முழுவதும் எதிரே யாரோ இருப்பது போலத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருப்பது அவரது வழக்கம். சில சமயம் சப்தமாக “சாந்தா. கொஞ்சம் வாயேன்“ என்று கூப்பிடுவார். அந்த அழைப்பிற்கு ஒரு காரணமும் இருக்காது. அவள் அப்பா படுத்திருந்த அறைக்குள் …

கவளம் Read More »

கதவைத் தட்டிய கதை

குறுங்கதை தனது வீட்டுக்கதவைத் தட்டிய கதையைப் பற்றி அந்தக் கவிஞன் எழுதியிருந்தான். புதுடெல்லியின் குளிர்கால இரவு ஒன்றில் அவனது வீட்டினைக் கதை தட்டியது. தொலைதூரத்திலிருந்து வந்த விருந்தாளியை வரவேற்பது போலக் கதையை வரவேற்றான். கதை ஒரு முதியவரின் தோற்றத்திலிருந்தது. கிழிந்த சட்டை, கவலை படிந்த முகம், கதைக்கு உறுதியான கால்களும் கைகளும் இருந்தன. கதை மூச்சுவிட்டுக் கொண்டுமிருந்தது. கதையின் கண்கள் மட்டும் தொல்சுடரென ஜொலித்தன. “நீண்ட தூரம் பயணம் செய்திருப்பீர்கள் போலிருக்கிறதே“ என்று கேட்டான் “கதைகள் நடந்த …

கதவைத் தட்டிய கதை Read More »

பனிக்கரடியின் கனவு

புதிய சிறுகதை. மே 2023. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழுவினர் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நாளிலிருந்து அந்த அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாறிமாறி தொலைபேசி அழைப்புகள். உயரதிகாரிகளின் அவசர உத்தரவுகள், இதன் காரணமாக வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றிய தயாபரன் பதற்றமாகியிருந்தார். அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி பின் மண்டை மற்றும் புருவங்கள் வலிக்க ஆரம்பித்திருந்தன. வழக்கமாகச் சாப்பிடும் பிரஷர் மாத்திரையை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்துக் கொண்டார். …

பனிக்கரடியின் கனவு Read More »

இரவுக்காவலாளியின் தனிமை

புதிய சிறுகதை. அந்திமழை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது. மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேர்களுக்கு மேலாக இரவுகாவலாளிகள் இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது. அவன் ஒரு தேவாலயத்தின் இரவுக்காவலாளியாக இருந்தான். கர்த்தருக்கும் திருடனுக்கும் நடுவே தானிருப்பதாக உணர்ந்தான். புனித மரியன்னை தேவலாயம் நூற்றாண்டு பழமையானது. கோவிலின் பெரிய கோபுரம் நூற்று இருபது அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதியில் எட்டு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றில் நிறப்பதிகைக் …

இரவுக்காவலாளியின் தனிமை Read More »