கவிதை

உலகம் ததும்பும் ஒசை

நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான யாசுனாரி கவாபத்தாவின் நோபல் ஏற்புரையில் தான் முதன்முறையாக  தோஜென் (Priest Dogen) என்ற மதகுருவைப்பற்றி விரிவாக அறிந்து கொண்டேன், முன்னதாக அவரது ஒன்றிரண்டு ஜென் கவிதைகளை தொகுப்பில் வாசித்திருந்த போதும் அவர் மீது தனித்த கவனம் குவிந்ததில்லை, பாஷோ தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவி. ஆனால் கவாபத்தாவின் நோபல் உரை அதுவரையான எனது  ஜென் கவிதைகள் பற்றிய மதிப்பீட்டினை அப்படியே உருமாற்றுவதாக அமைந்தது, கடந்த இருபத்தைந்து வருசங்களில் நோபல் …

உலகம் ததும்பும் ஒசை Read More »

தாகூரும் கலாப்ரியாவும்

கவிஞர் கலாப்ரியாவின் ஒடும் நதியை வாசித்துக் கொண்டிருந்தேன், குங்குமம் இதழில் தொடராக வந்த போது வாசித்திருந்தாலும் ஒரே புத்தகமாகப் படிக்க நன்றாக இருக்கிறது, அந்திமழை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது, மருதுவின் அரிய ஒவியங்களுடன் உருவாக்கப்பட்ட சிறப்பான புத்தகமது, கலாப்ரியாவின் உரைநடை  தன்னியல்பான  வசீகரத்துடனிருக்கிறது .  இந்தப் புத்தகத்திற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த முன்னுரை, வரிக்கு வரி  அடிக்கோடிடத் தூண்டுகிறது, எனது புத்தகங்களுக்கு நானே முன்னுரை எழுதிக் கொள்கிறேன், வேறு எவரும் எழுதியதேயில்லை, இப்போது …

தாகூரும் கலாப்ரியாவும் Read More »

விருப்பமான கவிதைகள்

எனக்கு விருப்பமான 7 கவிதைகள்  ** தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய் நிற்கிறாள் சிறுமி கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள் சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன அவள் கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் அவளைக் கடந்து சென்றன வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில் இன்னொரு பகலில் போய்க் கொண்டிருக்கும் குண்டுப்பெண் சிறுமியின் ஷூ லேஸ் அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள் சொல்லவிரும்பிக் கை அசைத்தாள் சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது கொஞ்சம் புரியவில்லை. …

விருப்பமான கவிதைகள் Read More »

அடோனிஸ்

Being a poet means that I have already written but that I have actually written nothing. Poetry is an act without a beginning or an end. It is really a promise of a beginning, a perpetual beginning. –Adonis கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசி சுற்றுவரை வந்து தேர்வு செய்யப்படாமல் போன நம் காலத்தின் மிக முக்கிய …

அடோனிஸ் Read More »

ஷெல் சில்வர்ஸ்டைன்

குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் மிக குறைவு. உலக அளவில் பிரசித்தி பெற்ற பல குழந்தைகளுக்கான படைப்புகள் இன்னமும் தமிழில் வெளியாகவில்லை. நான் லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம் நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். உலகம் முழுவதும் சிறுவர்களுக்கு சொல்லப்படும் இயற்கை குறித்த கதைகளை கால்முளைத்த கதைகள் என்று தனித்த நூலாக வெளியிட்டிருக்கிறேன். ஏழு தலை நகரம், கிறுகிறுவானம் என்ற இரண்டு நாவல்களை குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறேன். எழுத்தறிவு இயக்கம் சார்பில் மக்கள் வாசிப்பிற்கான எளிய புத்தகங்களை உருவாக்கிய போது …

ஷெல் சில்வர்ஸ்டைன் Read More »

பாஷோவின் மேகம்.

  Each day is a journey, and the journey itself home,” ஜென் கவிஞரான பாஷோ இயற்கையை நெருங்கி அறிவதற்காக ஒரு நீண்ட நடைபயணம் ஒன்றினை மேற்கொண்டார். அந்த பயண அனுபவம் குறித்து அவர் எழுதிய குறிப்புகளையும் பயணத்தின் ஊடே அவர் எழுதிய கவிதைகளையும் வாசித்த போது அற்புதமாக இருந்தது. இவை அவரது பயணத்தின் குறிப்புகள் சிலவற்றின் மொழியாக்கங்கள்.***நீண்ட சாலையின் துவக்கம்முடிவில்லாத காலத்தின் நித்ய பயணிகளே நாட்களும் மாதங்களும். கடந்து போன வருசங்களும் அப்படியானதே. …

பாஷோவின் மேகம். Read More »

ஜென் கவிதைகள்.

தொடர்ந்து சில வாரங்கள் ஜென் கவிதைகளாக வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜென் கவிதை குறித்து என் மனதில் தோன்றிய குறிப்புகள் இவை. ஜென் கவிதைகள் இயற்கையை கடந்த காலத்தில் வைத்து பார்ப்பதில்லை. நாம் ஒரு மலையை அருவியை சந்திக்கும் போது இந்த கணம் என்ற மட்டுமே நம்மோடு இருக்கிறது. அருவிக்கு கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் யாவும் இக்கணமாகவே வெளிப்படுகிறது. அதை தான் ஜென் கவிதைகள் தன் கவிதைகாலமாக முன்வைக்கின்றன கவிதையில் வரும் மலை தன்  வருசத்தை …

ஜென் கவிதைகள். Read More »

நகுலனின் பத்துக் கவிதைகள்

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழியும் அகப்பார்வையும் தனித்த கவியுலகமும் கொண்டவர்கள். மூவரது கவிதைகளிலும் அடிநாதமாக தமிழின் கவித்துவமரபும் சங்க இலக்கியம் துவங்கி சமகால உலக இலக்கியம் வரை வாசித்த நுட்பமும் ஒடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்த மூவருக்கும் பொது ஒற்றுமைகள் கிடையாது. தன்னளவில் இவர்கள் தனித்துவமான ஆளுமைகள். இவர்களின் பாதிப்பு இளம்கவிஞர்களிடம் கண்கூடாக காண முடிகிறது. மூவருடன் பழகி …

நகுலனின் பத்துக் கவிதைகள் Read More »

குஞ்நுண்ணி கவிதைகள்.

குஞ்நுண்ணி மலையாளத்தில் முக்கியமான நவீன கவிஞர். இவரது கவிதைகள் நேரடியான மொழியில் எளிய அனுபவங்களை முன்வைக்ககூடியவை.  அவரது கவிதைகள் குஞ்நுண்ணி கவிதைகள் என்று தமிழில் மொழியாக்கம் செய்து தனித்தொகுப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் பா. ஆனந்த குமார். மலையாள நவீன கவிதையில் நாட்டார் இலக்கிய மரபுகளை முன்னிறுத்தி சமுக அரசியல் உணர்வோடு கவிபாடுகின்ற போக்கினை சார்ந்தவர் குஞ்நுண்ணி என்று அவரை அறிமுகம் செய்து வைக்கிறார் ஆனந்த குமார். வலப்பாடு என்ற ஊரில் பிறந்த குஞ்நுண்ணி கோழிக்கோடு ராமகிருஷ்ண மிஷின் …

குஞ்நுண்ணி கவிதைகள். Read More »