இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள்.

ஒரு கவிதையைப் போல இன்னொரு கவிதை இருப்பதில்லை. எந்த இரண்டு கவிதைகளையும் ஒன்று போல வாசிக்கவும் முடியாது. செவ்வியல் இசையை ரசிப்பதைப் போலக் கவிதை வாசிப்பதற்கும் சில பயிற்சிகள். அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகின்றன. அதே நேரம் திரையிசை பாடல்களைக் கேட்பதை போல நேரடியாக மனதில் சென்று தேங்கிவிடும் கவிதைகளும் இருக்கின்றன, ஒரு கவிதையைப் புரிந்து கொண்ட விதத்தை வைத்து மற்றொரு கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒரு சாவியிருக்கிறது. கவிதை துளையில்லாத பூட்டு. எங்கே …

இன்னொரு கவிதை -1 கவிதையின் படிக்கட்டுகள். Read More »

இனிக்கும் இருள்

எழுத்தாளர் கோ.புண்ணியவான், மலேசியா கல் மனங்களிலும் கனிவு பிறக்கும் என்பது இக்குறும்படத்தின் கதைப் பொருள். அதனை கலைநயம் குன்றாமல் கொண்டு செல்கிறார் ஹரி பிரசாத். நிலத்தை எப்படியாவது பார்வையற்ற தம்பதியினரின் தலையில் கட்டிவிடவேண்டும் என்று கண்ணையா புரோக்கரும் அவர் சகாவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் பார்வைக்குறைவானவர்கள் என்று முதற் சந்திப்பிலேயே தெரிந்துகொள்ளும் கண்ணையா ஓரு கரிசனமான மன அசைவை அற்புதமாகக் காட்டியிருக்கிறார். வீட்டு மனையின் நிலப்பட்டாவை வாங்க பணம் தேவையென்று சொன்னதும் வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளும்படி சொல்கிறார்கள் தம்பதிகள். …

இனிக்கும் இருள் Read More »

ஆங்கில இதழில்

எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகளின் தொகுப்பினை டாக்டர் சந்திரமௌலி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள குறுங்கதை ஒன்று https://borderlessjournal.com இதழில் வெளியாகியுள்ளது. நன்றி டாக்டர் சந்திரமௌலி.

திணைகள் விருது விழா

திணைகள் கவிதை விருது விழா நவம்பர் 23 ஞாயிறு சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. கவிஞர் பூவிதழ் உமேஷ் விருது பெறுகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விருது வழங்கி உரையாற்றுகிறேன்.

குறும்பட விழா

நேற்று ஹரிபிரசாத் இயக்கிய இருள் இனிது குறும்படத்தின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் ஞானவேல், இயக்குநர் ஸ்ரீகணேஷ், இயக்குநர் பொன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு குறும்படம் குறித்த பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. எனது எல்லாச் செயல்பாடுகளுக்கும் துணை நிற்கும் அன்பு வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி. எனது அழைப்பை ஏற்று வருகை தந்த அன்பு நண்பர் …

குறும்பட விழா Read More »

பெத்ரோவின் உலகம்.

மெக்சிகோவின் குடிசைப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற சிறார்களையும் அவர்களின் குற்றச் செயல்களையும் சித்தரிக்கிறது Los Olvidados. லூயி புனுவல் இயக்கிய இந்தத் திரைப்படமே பின்னாளில் உலகின் கவனத்தைப் பெற்ற City of God போன்ற படங்களுக்கான அடிப்படை. பதின் வயதுப் பையன்களின் உலகை மிகவும் அசலாகப் படமாக்கியிருக்கிறார் புனுவல். ஒளிரும் நகரவாழ்க்கையின் மறுபக்கமாக இது போன்ற இருண்ட உலகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் புனுவல் தான் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். ஏழ்மையும் வறுமையும் கொண்ட வாழ்க்கையில் அவர்கள் …

பெத்ரோவின் உலகம். Read More »

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது.

எனது நேசத்திற்குரிய நண்பரும் மலேசியாவின் மிகச்சிறந்த கல்வியாளருமான பி.எம். மூர்த்தி இந்த ஆண்டிற்கான வல்லினம் விருது பெறுகிறார். டிசம்பர் 21 அன்று மலேசியாவில் வல்லினம் விருதளிப்பு நடைபெறுகிறது. பி.எம். மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும். மலேசிய தேர்வு வாரியத்தின் உதவி இயக்குநராக மூர்த்தி மேற்கொண்ட பணிகள் மிகுந்த பாராட்டிற்குரியவை. அவரது விருது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். ஆனால் டிசம்பர் 25 எனது …

பி.எம். மூர்த்தி : வல்லினம் விருது. Read More »