இருள் இனிது

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள புதிய குறும்படம் இருள் இனிது. எனது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ள இந்தக் குறும்படத்தின் அறிமுகவிழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை மீடியா சயின்ஸ் படித்துள்ள ஹரி பிரசாத் NFDC யில் திரைப்பட படத்தொகுப்பு பயின்றுள்ளான். தற்போது தேசாந்திரி யூடியூப் சேனலை நடத்தி வருவதுடன். White Knights என்ற டிஜிட்டில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றையும் …

இருள் இனிது Read More »

கல்பனாவின் வியாழக்கிழமை

புதிய சிறுகதை. சதாசிவம் வீட்டின் முன்பு வந்து கல்பனா நின்றபோது மணி நாலு இருபத்தியாறு ஆகியிருந்தது. அவளாகத் தேர்வு செய்து எடுத்து வந்திருந்த வுதரிங் ஹைட்ஸ் நாவலை கையில் வைத்திருந்தாள். நிச்சயம் அவருக்குப் பிடிக்கக் கூடும் என்று தோன்றியது. சதாசிவம் வீட்டினை சேர்மன் ஹவுஸ் என்று அழைத்தார்கள். சதாசிவத்தின் அப்பா நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அவர் யானை சின்னத்தில் நின்று தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். அதன் நினைவாக வீட்டுத் தோட்டத்தில் யானை சிலை செய்து வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் …

கல்பனாவின் வியாழக்கிழமை Read More »

குலேர் நுண்ணோவியங்கள்

குலேர் நுண்ணோவியங்கள் தனித்த மரபைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாகக் கிருஷ்ணன் ராதையின் காதலைச் சித்தரிக்கும் இந்த வகை ஓவியங்கள் அடர் வண்ணத்தாலும் சித்திரம் வரையப்பட்ட முறையாலும் புதிய பாணியைக் கொண்டிருக்கின்றன. குலேர் ராஜ்ஜியம் உருவானது விசித்திரமான கதை. 1405 இல் பஞ்சாப்பின் காங்க்ரா ஆட்சியாளராக இருந்த ராஜா ஹரிசந்த் வேட்டைக்குச் போது தனது குழுவிலிருந்து பிரிந்து போனார். வழிதெரியாமல் அலைந்த அவர் கால்தவறி ஒரு கிணற்றில் விழுந்துவிட்டார். வேட்டைக்குழுவினர் அவரைத் தேடிச்சலித்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் ராஜா …

குலேர் நுண்ணோவியங்கள் Read More »

ஒளிரும் வானவேடிக்கைகள்

வானவேடிக்கைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, பிரமாண்டமான விழாக்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் வாணவேடிக்கைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை விளக்கும் அரிய ஓவியங்களைக் காண முடிகிறது. முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் திருமணத்தைச் சித்தரிக்கும் 1633ல் வரையப்பட்ட ஓவியத்தில் இரவு வானத்தில் ஒளிரும் வானவேடிக்கைகளைக் காண முடிகிறது. ஓவியத்தில் மணமகன் தாராவும் அவரது குழுவினரும் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு வருகிறார்கள். அவர்களை நதிரா பானுவின் குடும்பத்தினர் எதிர் கொண்டு வரவேற்கிறார்கள். தாரா …

ஒளிரும் வானவேடிக்கைகள் Read More »

லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய்

“மக்கள் ஒரு தடயமும் இல்லாமல் தொலைந்து போகிறார்கள், சில வேளைகளில் தங்கள் தடயங்களை மறைக்கிறார்கள், சிலர் மறைக்கப்பட்ட தடயங்களைக் காண்கிறார்கள். சில நேரங்களில், கிட்டத்தட்ட ஒரு தடயமும் இல்லாமல் மறைந்து, பின்னர் வேறு எங்காவது தோன்றி, புதிதாகக் காணாமல் போகிறார்கள். இந்த நாட்களில் அமைதிக்கும் இருளுக்கும் உள்ள உறவை எவ்வாறு விவரிப்பது? இப்போதெல்லாம் துயரமான இடங்கள் கூடப் பயங்கரமான சத்தத்தாலும், பயங்கரமான வெளிச்சத்தாலும் நிரம்பியுள்ளன“ – லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் ஹங்கேரிய நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் இந்த ஆண்டிற்கான …

லாஸ்லோ க்ராஸ்னாஹோர்காய் Read More »

ஒரு கடிதம்

எனது தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலை வாசித்துவிட்டு தங்ககோபி என்ற மாணவன் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்திருக்கிறான். அதில் முதன்முறையாக தான் தபால் பெட்டியை பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளான். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது. தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அந்நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும் தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வர வேண்டும் …

ஒரு கடிதம் Read More »

அற்ப வாழ்க்கை

. ஃபெடெரிகோ ஃபெலினியின் Il bidone அவரது பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். மதகுரு போல வேஷம் போட்டுக் கொண்டு கிராமப்புற விவசாயிகளை ஏமாற்றும் ஒரு மோசடி கும்பலைப் பற்றியது. ஒரு காரில் கிராமப்புறத்தை நோக்கிச் செல்லும் இந்தக் கும்பல் ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்று அவர்கள் நிலத்தில் ஒரு புதையல் இருப்பதாக நம்ப வைத்து நாடகம் ஆடுகிறது. அந்தச் செல்வத்தைப் புதைத்து வைத்தவன் போரில் இறந்து போய்விட்டதாகவும் புதையலை நிலத்தின் உரிமையாளரே தோண்டி எடுத்துக் கொள்ளலாம் …

அற்ப வாழ்க்கை Read More »

குற்றமுகங்கள் 25 சோனாபானி

இரண்டு ஆண்டுகள் நாற்பத்தி மூன்று நாட்கள் தேடி அலைந்த பிறகு சோனாபானியை துல்ஜாபூரில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். சோனாபானி ஒரு நாய். அதுவும் திருடர்களின் தூதுவனைப் போலச் செயல்பட்ட நாய். கைபா என்ற குற்றக்கும்பல் அதனைப் பழக்கியிருந்தார்கள். சோனாபானியின் கழுத்தில் ஒரு தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு இலையைக் கட்டி அனுப்பி வைப்பார்கள். என்ன இலை. எத்தனை இலைகள் என்பதைப் பொறுத்து தகவல் மாறக்கூடியது. ஒளிந்து வாழ்ந்து வந்த கைபா கும்பல் தங்கள் வீட்டிற்குத் தகவல் தருவதற்கும், …

குற்றமுகங்கள் 25 சோனாபானி Read More »