காலைக்குறிப்புகள் 15 கனவெனும் நாடகம்.
கணிப்பொறி வந்தபிறகு கையால் எதையும் எழுதுவதேயில்லை. அரிதாக வெளியூர் பயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்கள் கையால் எழுதியிருக்கிறேன். மற்றபடி 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கணிப்பொறியில் தான் எழுதுகிறேன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர்கள் பலரும் டைப்ரைட்டரில் எழுதினார்கள். பாப்லோ நெரூதா தலைமறைவாக ஒளிந்து வாழ்ந்த போது கூடத் தன் கையோடு ஒரு டைப்ரைட்டரை தூக்கிக் கொண்டே அலைந்தார். அறிவியல் புனைகதை எழுத்தாளரான ஐசக் அசிமோவிற்குக் கணிப்பொறியில் எழுதுவது என்றால் பயம். அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட கணிப்பொறியை வாழ்நாள் முழுவதும் …