செகாவ் சிறப்புரை

                                                          ஜனவரி 21  வெள்ளிக்கிழமை அன்று (21.1.11) மாலை 6 மணி அளவில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் ருஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவின் 150 ஆண்டு விழாவை ஒட்டிச் சிறப்புரை நிகழ்த்த இருக்கிறேன் இந்த விழாவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு  விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன் ••

மேடைப்பேச்சு

எழுத்தாளனின் வேலை எழுதுவது மட்டுமில்லை, நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்வதும். சமூக அக்கறை சார்ந்து தன்னளவில் செயல்படுவதும், பிற படைப்புகளை வாசித்து எதிர்வினை தருவதும். பள்ளி, கல்லூரி, ஊடகம்  என பலதரப்பிலும் எழுத்து, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை. வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும், போர்ஹே பல்கலைகழக மாணவர்களுக்காக ஆங்கில இலக்கியம், செவ்வியல் நாவல் என்று நூறு சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார். இப்படி நான் அறிந்தவரை உலக இலக்கியவாதிகளான நபகோவ். வில்லியம் பாக்னர். மார்க்வெஸ். உம்பர்த்தோ ஈகோ. வோலே சோயிங்கா. ரேமண்ட் …

மேடைப்பேச்சு Read More »

100 சிறந்த புத்தகங்கள்

விஜய் டிவி நிகழ்ச்சியில் நான்  குறிப்பிட்ட சிறந்த 100 புத்தகங்களின் பட்டியல் பற்றி பலரும் மின்னஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள், அவர்களின் விருப்பத்திற்காக மீண்டும் இதைப் பதிவிடுகிறேன் இந்தப்பட்டியல் முற்றிலும் எனது ரசனை சார்ந்தது, அதிலும்  முதன்மையாகப் படைப்பிலக்கியம் சார்ந்தது. இவையின்றி பல முக்கியமான புத்தகங்கள் உள்ளன என்பதை நான் அறிவேன், இது தரவரிசையில்லை. புதிய வாசகன் கற்றுத் தேர வேண்டியது என நான் கருதும்  ஒரு பட்டியலாக எடுத்துக் கொள்ளவும் இவை முழுமையாக எங்கே கிடைக்கும் என …

100 சிறந்த புத்தகங்கள் Read More »

நீயாநானா

நேற்று இரவு விஜய் டிவியில் வெளியான நீயா  நானா  நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு பேசிய பகுதியின் காணொளி இணைப்பு  இணைக்கப்பட்டுள்ளது இந்த இணைப்பை வலையேற்றி உதவிய அன்பு நண்பர் பா.ரமேஷ்க்கு நன்றி இணைப்பு : https://www.youtube.com/watch?v=Oj14D4DGTuk&feature=player_embedded

விஜய் டிவி

 நாளை ஞாயிற்றுகிழமை (16.1.11) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நான் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருக்கிறேன். நண்பர்கள் அனைவரும் அவசியம் காணவும் **

புத்தகப் பரிந்துரை

சென்னை புத்தகக் காட்சியில் இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் நிறைய புதிய வாசகர்களைச் சந்திக்க முடிந்தது, துயில் நாவலை நிறைய இளம் மருத்துவர்கள் வாங்கிப் படித்து ஆழமாக விவாதித்தது சந்தோஷம் தருவதாக இருந்தது சென்னை புத்தகக் காட்சியில் நான் பரிந்துரைக்கும் முக்கியப்புத்தகங்கள் இவை. 1)      இதற்கு முன்பும் இதற்குப் பின்பும் மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய கவிதை தொகுப்பு. சமீபத்தில் நான் வாசித்த ஆகச்சிறந்த கவிதைகள் இதில் உள்ளன, நவீன தமிழ்கவிதையில் புதிய பாய்ச்சலை உருவாக்கியுள்ள இந்தக் கவிதை தொகுப்பு …

புத்தகப் பரிந்துரை Read More »

புத்தகக் கண்காட்சி

 கடந்த இரண்டு நாட்களாக சென்னைப் புத்தக கண்காட்சிக்கு சென்று வருகிறேன். புதிய வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது உத்வேகம் தருவதாக இருக்கிறது. நேற்று மதியம் பாரதி புத்தகாலயத்தில் லெப்ட் வேர்ட் என்ற ஆங்கிலப்பதிப்பகம் வெளியிட்டுள்ள காரல் மார்க்சின் மூலதனம் நூலின் இந்தியப்பதிப்பு வெளியீடும் மூலதனத்தை எப்படி புரிந்து கொள்வது என்பதைப்பற்றி வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய நூலும் வெளியிடப்பட்டது, இந்தநூலை தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன். மார்க்சின் மூலதனத்தின் முதல் தொகுதியை வாசித்திருக்கிறேன், அதை ஒரு …

புத்தகக் கண்காட்சி Read More »

துயில் வெளியீட்டு விழா

எனது புதிய நாவல் துயில் வெளியீட்டு விழா அரங்குநிரம்பிய பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது, நான் விரும்பியபடியே நாவல் பற்றிய கலந்துரையாடல்  தனித்துவமானதாக அமைந்திருந்தது, துயில் நாவல் அச்சு  மற்றும் வடிவாக்கத்தில் வெகு நேர்த்தியாக உருவாகப்பட்டிருக்கிறது. அதற்காக உயிர்மை பதிப்பக ஊழியர்களுக்கும் நண்பர் மனுஷயபுத்திரனுக்கும் மனம் நிறைந்த நன்றி   விழாவிற்கு வந்து சிறப்பித்த அத்தனை பேருக்கும், மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பிய நண்பர்களுக்கும் இனிய நன்றி புத்தக கண்காட்சியில் சந்திப்போம் ஜனவரி எட்டாம் தேதி முதல் தினசரி மாலை …

துயில் வெளியீட்டு விழா Read More »

புத்தாண்டு வாழ்த்துகள்.

 உலகெஙகும் உள்ள தமி்ழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2011ல் உங்கள் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும் ** இந்தப் புத்தாண்டில் யாவரும் நினைக்க வேண்டிய கவிதை ** சென்றதினி மீளாது மூடரே!நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா. –          பாரதியார்

அசடன்

தஸ்தாயெவ்ஸ்கியின் முக்கிய நாவலான இடியட்டைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் எம்.ஏ.சுசீலா. இவர் முன்னதாக குற்றமும் தண்டனையும் நாவலை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், மார்ச் மாதம் வெளியாக உள்ள இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்காக ஒரு முன்வெளியீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இலக்கிய வாசகர்கள் அனைவரும் இதில் முன்பதிவு செய்து ஆதரிக்க வேண்டுகிறேன் •• தஸ்தாயெவ்ஸ்கியின் Crime And Punishment, The Idiot, The Possessed (or Devils), The Brothers Karamazov. ஆகிய  நான்கு நாவல்களும் தனித்துவமானவை, அவற்றை …

அசடன் Read More »