கோவை புத்தகக் கண்காட்சியில் இரண்டு நாட்களும் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். இனிமையான அனுபவமாக இருந்தது.








வாசிக்க வேண்டிய புத்தகங்கள், அரிய ஒவியங்கள், உலகசினிமா, மற்றும் எழுதும் கலை குறித்து அறிந்து கொள்வதில் இளம்வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
தேசாந்திரி சார்பில் இதற்கென சிறப்பு நிகழ்வுகளை நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நாள் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சனிக்கிழமை மாலை மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற கோல்டன் லீப் அவார்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்
உணவுக் கலையில் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்துவரும் ஒன்பது பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
திருப்பூர் ”சாய் கிருபா சிறப்புப் பள்ளி”நடத்தி வருபவர் திருமதி. கவின் திருமுருகனுக்கு விருது அளித்துப் பாராட்டினேன்.
இரண்டு நாட்களும் உடனிருந்து உபசரித்த மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி. டாக்டர் சந்திரமௌலி நேற்றிரவு சிறந்த விருந்து அளித்தார். நண்பர் வசந்த் காலையில் விமானநிலையம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.