புத்தக வெளியீடு

கவிஞர் க.வை.பழனிசாமி எழுதியுள்ள கவிதையின் அந்தரங்கம் என்ற விமர்சன நூலின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்கிறேன்.

நாளை மாலை கோவை புத்தகக் கண்காட்சி அரங்கினுள் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

நவீன கவிதைகயை எப்படி புரிந்து கொள்வது, கவிதைக்குள்ளிருந்து ஒலிக்கும் கவிதைசொல்லி யார், கவிதையின் ஊடாக எதையெல்லாம் பெறுகிறோம், கவிதையின் ரகசியங்களாக எதைச் சொல்லலாம் எனப் பல்வேறு நிலைகளில் கவிதைகளை ஆராய்ந்திருக்கிறார் க.வை.பழனிசாமி

தமிழின் 14 முக்கிய கவிஞர்களின் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளை முன்வைத்து மாறுபட்ட கவித்துவப் பார்வையை உருவாக்கியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

0Shares
0