கோவையில் உரையாற்றுகிறேன்

புகழ் பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா

தனது பட்டிமன்ற நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் தனியிடம் பிடித்தவர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்தவர். சங்க இலக்கியம் குறித்து ஆழ்ந்து அறிந்தவர்.

இவரது தமிழ்பணியைப் போற்றும் விதமாக 2021ல் பத்மஸ்ரீ விருது அளிக்கபட்டது.

அவரது நகைச்சுவை உணர்வும் , சமூக அக்கறையும் மிகுந்த பாராட்டிற்குரியது

நீண்டகாலமாக அவரை அறிவேன். சிறந்த பண்பாளர்.

காலவரிசைப்படுத்தி, புதிய உரையுடன் இவர் வெளியிட்ட ‘புறநானூறு’ – புதிய வரிசை நூல் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அகநானூறு பாடல்களைத் தொகுத்துள்ள முறையை ஆராய்ந்து. பொருளுக்கேற்ற பாடலை எளிதாகத் தேர்வு செய்யும் வகையில் எளிமையாக வரிசைப்படுத்தி புதிய விளக்கவுரையை எழுதியிருக்கிறார். மூன்று தொகுதிகளாக வெளியாகியுள்ளன.

கவிதா பதிப்பகம் இந்நூல்களை வெளியிட்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா அவர்களின் அகநானூறு தொகுதிகளின் அறிமுக விழா கோவையில் ஏப்ரல் 17 ஞாயிறு மாலை நடைபெறுகிறது

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

நிகழ்வு நடைபெறும் இடம் : கிக்கானி அரங்கம், கோயம்புத்தூர்.

நாள் :ஏப்ரல் 17 ஞாயிறு

நேரம். :மாலை ஆறுமணி

இந்த நிகழ்வில் சிறந்த பேச்சாளர்கள் சுகிசிவம், ராஜா, பாரதி பாஸ்கர், மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள் . கவிதா சொக்கலிங்கம் முன்னிலை வகிக்கிறார். சாலமன் பாப்பையா அவர்கள் ஏற்புரை வழங்குகிறார்.

கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளது.


0Shares
0