இரண்டு நாட்களும் புதுமைப்பித்தன் நாடகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நாடகத்தை மிக அருமையாக உருவாக்கியிருக்கிறார்கள். நிறைய இளைஞர்கள் நாடகம் காண வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.
நாடக இயக்குநர் கே.எஸ்.கருணா பிரசாத், நடிகர்கள், மேடை அமைப்பு, ஒளியைக் கையாண்ட கலைஞர்கள். நாடகத்தைத் தயாரித்த கூத்துப்பட்டறைக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
புதுமைப்பித்தன் குடும்பத்தினர், புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன், கண்மணி கமலாவிற்கு நூலை வெளியிட்ட இளையபாரதி, புதுமைப்பித்தன் கதைகளின் செம்பதிப்பை உருவாக்கிய ஆ.இரா.வேங்கடாசலபதி. அதை வெளியிட்ட காலச்சுவடு கண்ணன். புதுமைபித்தன் ஒவியம் வரைந்த ஆதிமூலம். அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த அபராஜிதன். சீர் பதிப்பகம் மூலம் புதுமைப்பித்தன் கதைகளை சிறப்புவிலை பதிப்பாக கொண்டு வந்த டாக்டர் அரசு மற்றும் பதிப்பகத்தார், மணிக்கொடி, தினமணி இதழ்கள், புதுமைப்பித்தனின் வாழ்விற்கு உதவிய இலக்கிய நண்பர்கள். என அனைவரையும் நன்றியோடு நினைவு கொள்கிறேன்.
எனது அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த இயக்குநர் வசந்தபாலன், டாக்டர் ஸ்ரீவர்மா, டாக்டர் அன்பு, டாக்டர் நந்தினி, இசைவிமர்சகர் நடிகர் ஷாஜிக்கு எனது அன்பும் நன்றியும்.
இன்னும் மூன்று நாட்கள் இந்த நாடகம் கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெறுகிறது. சரியாக மாலை 6.45 மணிக்கு நாடகம் துவங்கிவிடும். சிறிய அரங்கு என்பதால் முன்னதாக வருகை தருவது அவசியம்.
அனைவரும் வருக என வரவேற்கிறேன்.
கூத்துப்பட்டறை முகவரி
16/58, 3rd Main Road, Sri Ayyappa Nagar, Virugambakkam,, Chennai







புகைப்படங்கள்
நன்றி
நந்தா
ஹரி
