இணைய வழியில் நடைபெற்ற எஸ்.ரா கதைகள் -நூறு நிறைவு நிகழ்ச்சியில் நேற்று மாலை கலந்து கொண்டேன்.

எனது உரைக்குப் பதிலாக கலந்துரையாடலை வைத்துக் கொள்வோம் என்று சொன்னேன். நிறைய வாசகர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டார்கள். இரண்டு மணி நேரம் உரையாடல் நீண்டது,
இன்னும் நிறைய கேள்விகள் மிச்சமிருந்தன. நேரமில்லாத காரணத்தால் அவர்களுக்குப் பதில் அளிக்க இயலவில்லை.
பேராசிரியர் வினோத் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி.
அய்யா ஆறுமுகசாமி நேற்றைய நிகழ்விலும் இன்று குறுஞ்செய்தியிலும் தனது அன்பைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.
இந்த நிகழ்வைப் போல மாதம் ஒருமுறை விரிவான கலந்துரையாடல் நிகழ்வை இணையத்தில் நடத்தலாம் என்று நினைக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் இதனை முன்னெடுக்கும். இதற்கான அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார்கள்.
•••
