admin

நன்றி

49வது சென்னை புத்தகத் திருவிழா இன்றோடு நிறைவுபெற்றது. கடந்த இரண்டு வாரங்களாக நிறைய வாசகர்களை, நண்பர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. எனது தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து புத்தகங்கள் வாங்கி ஆதரித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த முறை இளைஞர்களே அதிக அளவில் புத்தகங்களை வாங்கினார்கள். தனது அப்பா அம்மாவிற்கு, தோழிக்கு, நண்பனுக்கு, உறவுகளுக்கு என அவர்கள் கைநிறைய புத்தகங்களை வாங்கிக் கையெழுத்து பெற்றுக் கொண்டது வாசிப்பில் உருவாகியுள்ள  புதிய மாற்றத்தின் அடையாளமாகவே …

நன்றி Read More »

லண்டனில் நரிகள்

தனது 99வது வயதில் டேவிட் அட்டன்பரோ இயக்கியுள்ள வைல்ட் லண்டன் ஆவணப்படம் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. பிபிசி இதனைத் தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டிடங்களும் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்களும் கொண்ட லண்டன் மாநகரம் எண்ணிக்கையற்ற பூங்காங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நகரில் வளரும் விலங்குகளை அட்டன்பரோ ஆவணப்படுத்தியிருக்கிறார். லண்டன் நகரில் உலவும் நரிகளைக் காண ஆச்சரியமாகவுள்ளது. குறிப்பாகப் புதரிலிருந்து திடீரென ஒரு நரி வெளியே வருவதைக் காண சிலிர்ப்பாக உள்ளது. பத்தாயிரத்திற்கும் அதிகமான நரிகள் லண்டனில் வசிப்பதாகச் …

லண்டனில் நரிகள் Read More »

இடக்கை நாவல் கன்னடத்தில்

எனது இடக்கை நாவல் கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. கனகராஜ் மற்றும் சம்பா ஜெயபிரகாஷ் இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். விரைவில் இந்த நூல் வெளியிடப்படவுள்ளது. சென்னை சர்வதேச புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இதனை கன்னடத்தில் வெளியிடுகிறார்கள்.

புத்தகப் பரிந்துரைகள் -1

சென்னைப் புத்தகக் காட்சியில் நிறைய புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. நான் முக்கியம் எனக் கருதும் சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இஸ்ஸாவும் பூஸனும் ஜப்பானின் புகழ்பெற்ற ஜென் கவிகளான இஸ்ஸா மற்றும் பூஸனின் தேர்ந்தெடுக்கபட்ட கவிதைகளை யுவன் சந்திரசேகர் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். நூல்வனம் வெளியிட்டுள்ளது. மிகச்சிறந்த புத்தகமாக்கம். அனாகத நாதம். இளந்தலைமுறையின் சிறந்த சிறுகதையாசிரியரான செந்தில் ஜெகன்நாதனின் சிறுகதைகளின் தொகுப்பு அனாகத நாதம். தனித்துவமிக்க மொழியழகும் கதைக்களமும் கொண்ட நேர்த்தியான கதைகள். சொற்றுணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது …

புத்தகப் பரிந்துரைகள் -1 Read More »

சாய்ந்தாடும் குதிரை

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. இதில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சாய்ந்தாடும் குதிரை படித்தவுடன் எழுதுகிறேன். எங்கள் வீட்டில் ஒரு சிகப்பு நிற மரக்குதிரை இருந்தது. பதற்றத்துடன் இரட்டை சடை போட்ட சிறுமியாக அக்கா குதிரையில் அமர்ந்திருக்கும் ஒரு போட்டோ உண்டு. இப்போது குதிரையும் இல்லை. அக்காவும் இல்லை. ஆனால் எனது மனம் இன்று கசிவது கதையில் வரும் இரண்டு மரக்குதிரைகளுக்காக.சாய்ந்தாடும் குதிரை அற்புதமான கதை சந்தானம். பெங்களூர்.

மஞ்சள் தருணங்கள்

இத்தாலிய நியோ ரியலிசத் திரைப்படங்கள் துவங்கி சமகால சர்வதேச திரைப்படங்கள் வரையிலான சினிமா கட்டுரைகளின் தொகுப்பு மஞ்சள் தருணங்கள். ஒவ்வொரு பண்பாட்டிற்கும் அதற்கென சொந்தக் குரல் உள்ளது. அது இலக்கியத்தில் மட்டுமின்றி திரைப்படங்கள் வழியாகவும் வெளிப்படுகிறது. ஆகவே சர்வதேச திரைப்படங்களைப் பார்ப்பது பல்வேறு சமூகங்களை, கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் உலகளாவிய அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. ஹாலிவுட் சினிமாவிற்கு வெளியே இயங்கும் திரைப்பட ஆளுமைகளையும், அவர்களின் தனித்துவமிக்க திரைப்படங்களை நாம் அறிந்து கொள்ள …

மஞ்சள் தருணங்கள் Read More »

குற்றமுகங்கள்

காலனிய காலத்தின் குற்றங்களை முன்வைத்து நான் எழுதிய புனைவுகளின் தொகுப்பு குற்றமுகங்கள். இந்த நூல் குறித்து கவிஞர் ஷங்கர ராமசுப்ரமணியன் சிறப்பான மதிப்பீட்டை எழுதியுள்ளார். அகல் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி ••• எஸ். ராமகிருஷ்ணனின் குற்றமுகங்களில் வரும் சம்பவங்களும், நாயக, நாயகியரும் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர்கள். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய அதே காலப்பகுதியில், இந்தியாவை ஆள்வதற்காக வந்த …

குற்றமுகங்கள் Read More »

அவர்களின் திருமணம்.

தொழிலதிபரான தனது கணவனை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைத்த இளம் மனைவி ஒரு திட்டம் தீட்டுகிறாள். அதன்படி வேறு ஒரு பெண்ணுடன் அவர் ஹோட்டல் அறையில் இருப்பது போன்ற நாடகத்தை ஏற்பாடு செய்கிறாள். அதைக் காரணம் காட்டி மிரட்டி அவரது சொத்துகளை எழுதி வாங்கிவிட முயலுகிறாள். ஆசை மனைவியால் ஏமாற்றப்படுவதை அறிந்த ஃப்ரெடி மெல்ரோஸ் தடுமாறிப்போகிறார். அந்தப் பெண் ஒரு வக்கீலை அழைத்து வந்து அவள் பெயருக்கு எல்லாச் சொத்துகளையும் எழுதி வாங்கிவிட முயலுகிறாள். சொத்து கிடைத்தவுடன் …

அவர்களின் திருமணம். Read More »

நாவல்வாசிகள்

இந்தியாவின் மகத்தான நாவல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்து தமிழ் திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தியப் பண்பாடு மற்றும் சமூக வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்திய இலக்கியம் சிறப்பாகப் பிரதிபலித்துள்ளது. அதன் உன்னதப் படைப்பாளிகளையும் அவர்களின் தனித்துவமிக்க நாவலையும் இந்தத் தொடரில் அடையாளப்படுத்தியிருக்கிறேன் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள இந்த நூல்கள் நேஷனல்புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி பதிப்பகங்களில் கிடைக்கின்றன. புத்தகத் திருவிழா தேசாந்திரி பதிப்பகத்தின் அரங்கு எண் 472 & 473 …

நாவல்வாசிகள் Read More »

தபால் பெட்டி எழுதிய கடிதம் / ஆங்கிலத்தில்

தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. அந்த நூல் குறித்த அகிலேந்திரா என்ற மாணவரின் கடிதம் தபாலில் வந்து சேர்ந்தது. அவருக்கு நானும் நன்றிக் கடிதம் தபாலில் அனுப்பி வைத்தேன்.