அடங்க மறுத்த குதிரைகள்
பிரெஞ்சு ஓவியரான ரோசா பான்ஹர் விலங்குகளை வரைவதில் தேர்ச்சிபெற்றவர். குறிப்பாகக் குதிரைகளையும் சிங்கங்களையும் ஆட்டு மந்தையினையும் மிக அழகான ஓவியங்களாக வரைந்திருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பெண் ஓவியராகக் கொண்டாட்டப்பட்ட. இவரது இருநூறாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று கூகிள் தனது முகப்பில் இவரது உருவத்தை வைத்திருந்தது. இவரது புகழ்பெற்ற குதிரை சந்தை என்ற ஓவியத்தை நான் நியூயார்க்கில் நேரில் பார்த்திருக்கிறேன். வியப்பூட்டும் ஒவியமது. ரோசா பான்ஹரின் தந்தை ஒரு ஒவியர் என்பதால் சிறுவயதிலே …









