admin

அடங்க மறுத்த குதிரைகள்

பிரெஞ்சு ஓவியரான ரோசா பான்ஹர் விலங்குகளை வரைவதில் தேர்ச்சிபெற்றவர். குறிப்பாகக் குதிரைகளையும் சிங்கங்களையும் ஆட்டு மந்தையினையும் மிக அழகான ஓவியங்களாக வரைந்திருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான பெண் ஓவியராகக் கொண்டாட்டப்பட்ட. இவரது இருநூறாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று கூகிள் தனது முகப்பில் இவரது உருவத்தை வைத்திருந்தது. இவரது புகழ்பெற்ற குதிரை சந்தை என்ற ஓவியத்தை நான் நியூயார்க்கில் நேரில் பார்த்திருக்கிறேன். வியப்பூட்டும் ஒவியமது. ரோசா பான்ஹரின் தந்தை ஒரு ஒவியர் என்பதால் சிறுவயதிலே …

அடங்க மறுத்த குதிரைகள் Read More »

கதாவிலாசம் ஆங்கிலத்தில்

தமிழக அரசின் முன்னெடுப்பு காரணமாக சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு வெளியான நூல்களில் எனது கதாவிலாசமும் இடம்பெற்றுள்ளது. கதாவிலாசம் ஆங்கிலப் பிரதிகளை வேண்டுகிறவர்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்

கனடாவில்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘மண்டியிடுங்கள் தந்தையே’  என்ற நாவல் குறித்த பார்வை கருத்துரைப்பவர்:  ‘கனடா’ மூர்த்தி நாள்:      18-03-2022 வெள்ளிக்கிழமை  கனடா ரொறன்ரோ நேரம்:    இரவு 8:00 – 10:00 மணி (இந்தியா, இலங்கை நேரம்: 19 03 2022 சனிக்கிழமை காலை 5:30 – 7:30) Join Zoom Meeting Meeting ID: 847 7725 7162 Passcode: 554268

பிரிவின் சொற்கள்

The Letter Room என்ற முப்பது நிமிஷம் ஓடக்கூடிய குறும்படம் ஒன்றைப் பார்த்தேன். சிறைக் கைதிகளுக்கு வரும் கடிதங்களைத் தணிக்கை செய்து ஒப்படைக்கும் அதிகாரியின் கதை. தனிமையில் வாழும் சிறை அதிகாரி ரிச்சர்ட் இரக்க குணம் கொண்டவர். சிறைக்கைதிகளிடம் அன்பாக நடந்து கொள்கிறார். இவரைத் தகவல் தொடர்பு இயக்குநராகப் பதவி உயர்வு கொடுத்து நியமிக்கிறார்கள். தனது புதிய வேலையில் கைதிகளுக்கு வரும் கடிதங்களைப் படித்துத் தணிக்கை செய்கிறார். சிறைக்கோப்பிற்காக இந்தக் கடிதங்களை ஸ்கேன் செய்து வைப்பதும் அவரது …

பிரிவின் சொற்கள் Read More »

நாவலின் ஒவியம்

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை நாவலில் வரும் சுப்புவை படம் வரைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணா. ஒரு நாவல் எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு மூன்று இயக்குநர்கள் வேறுவேறு தருணங்களில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. அதற்கான சரியான தருணம் விரைவில் வரக்கூடும் என நம்புகிறேன்

உயிருள்ள பொம்மைகள்

மண் பொம்மை காளிந்தீசரண் பாணிக்ராஹியின் நாவல். ஒரிய மொழியில் எழுதப்பட்ட இந்நாவலை ரா. வீழிநாதன் தமிழாக்கம் செய்திருக்கிறார். நான் அறிந்தவரை மூன்றோ நான்கோ ஒரிய நாவல்கள் தான் இதுவரை தமிழில் வந்துள்ளன. ஒரியச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் வெளியாகியுள்ளது. சமகால ஒரிய இலக்கியப் படைப்புகள் அதிகம் தமிழில் வெளியாகவில்லை. ஆங்கிலத்தில் சில வாசிக்கக் கிடைக்கின்றன. ஒரியக் கவிதைகள் பெற்ற கவனத்தை ஒரிய கதைகள் பெறவில்லை என்றே தோன்றுகிறது. காளிந்தி சரண் பாணிகிராஹி …

உயிருள்ள பொம்மைகள் Read More »

தன்னை மறந்தவள்

எமி பிரஸ்டன் நடுத்தர வயது பெண். அவளது கணவர் ஜிம் ஒரு டிம்பர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணமாகி இருபது ஆண்டுகள் சந்தோஷமான வாழ்க்கையைத் தொடர்கிறாள். பதின்வயதிலுள்ள மகன் பிரைன் பேச்சுப் போட்டியில் ஆர்வம் கொண்டவன். அவர்கள் லண்டனின் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்கள். ஐம்பதுகளில் கதை நடக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் படம் துவங்குகிறது. எமி பிரஸ்டனுக்கு வானொலியில் இசை கேட்பது பிடித்தமானது. சமையலறையில் உணவு தயாரித்தபடியே சங்கீதம் கேட்கிறாள். வேறு பக்கம் கவனம் திரும்பவே …

தன்னை மறந்தவள் Read More »

தெலுங்கில்

எனது சிற்றிதழ் சிறுகதை தெலுங்கில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் ஜி. பாலாஜி. நன்றி vaartha.com ஜி. பாலாஜி

இடக்கைக்குள் நீதி

கோபாலகிருஷ்ணன் நீதி என்பது எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக் கட்டியை போல மனிதர்களைக் கொண்டு செல்கிறது. உணவுக்காகவும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மனிதன் அலைவதை போலவே நீதிக்காகவும் மனிதன் காத்திருக்கிறான், போராடுகிறான். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “இடக்கை ” புத்தகம் வாசித்து முடித்ததும் இந்திய வரலாற்றின் மீது படிந்த கறையைத் தொட்டு பார்த்ததைப் போல உணர முடிந்தது. பின்னர்தான் புரிந்தது அது கறையல்ல தழும்புகள் மறைந்து போகாத நினைவுகள். உடலில் காயம் ஏற்பட்டு ஆறிய பின்னர்க் …

இடக்கைக்குள் நீதி Read More »

நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள்

ஆங்கிலக் கவிஞர் மீனா அலெக்சாண்டரின் கவிதை ஒன்றின் வழியே தான் சீனக்கவிஞர் லி சிங்-சாவ் (Li Ch’ing-chao )பற்றி அறிந்து கொண்டேன். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெண்கவியை நினைவு கூர்ந்து மீனா அலெக்சாண்டர் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். காட்டுவாத்துகளுடன் லிசிங் சாவ் பனிக்காலத்தை எதிர் கொண்டதை பற்றிப் பேசும் இந்தக் கவிதையின் வழியே பனிமூட்டத்திற்குள் ஒளிரும் நட்சத்திரம் போல லிசிங் சாவ் அறிமுகமானார். கடந்த சில நாட்களாக லி சிங் சாவோவின் உலகிற்குள் புகை போலச் …

நினைவில் பறக்கும் காட்டுவாத்துகள் Read More »