admin

உளவு பார்க்கும் உலகில்

ஒரு நிகழ்வு துவங்கும் போது அது எப்படி முடியும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. இயல்பாக முடிந்துவிட்டால் அன்றாடச் செயலாகிவிடுகிறது. எதிர்பாராமல் முடிந்துவிட்டால் மறக்கமுடியாத அனுபவமாகிறது. சலூனுக்குச் சிகை அலங்காரம் செய்து கொள்ளச் சென்ற ஒரு பெண் மீள முடியாத பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்வது என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். அதுவும் நட்பாகப் பழகிய தோழியால் வஞ்சிக்கப்படுவதும், மிரட்டி சதிவேலையில் ஈடுபடச்செய்வதும் அதிர்ச்சியான விஷயங்கள். அதைத் தான் Huda’s Salon விவரிக்கிறது. ஹானி அபு-ஆசாத் …

உளவு பார்க்கும் உலகில் Read More »

யுவபுரஸ்கார் விழா

நேற்று நடைபெற்ற சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன். இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் கண்டுகொள்ளவேயில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் நாள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. மிகவும் குறைவான கூட்டம். புகைப்படங்கள் நன்றி : ஸ்ருதி டிவி

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான்

பிச்சைக்காரன் எஸ் ராமகிருஷ்ணனின் மழைமான் சிறுகதை தொகுதி சமீபத்தில் மனநிறைவளித்த ஒரு கதை தொகுப்பு. எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை எந்த நிமிடத்திலும் திசை திரும்பி விடக்கூடியது. அறம் அழிவது அன்றாடச் செயல்பாடாகி வருகிறது; என்ற பின்னட்டைக்குறிப்புகள் இந்தச் சிறுகதைத் தொகுதியை முடித்தபின்பு வேறோரு பொருளைத்தருகின்றன எளிய மனிதர்கள் என்பதே ஒரு ரிலேட்டிவ் பதம்தான். ஒரு பார்வையில் மனிதர்கள் அத்தனைப்பேருமே எளியவர்கள்தான். காலம்தான் சிலரை அவ்வப்போது ஒவ்வொரு இடத்தில் வைக்கிறது.ஒரு நிமிடத்தில் மாறி விடக்கூடியதுதான். இந்தத் தொகுப்பில் …

வெளிச்சத்தைப் பரப்பும் மழைமான் Read More »

கிரா ஓவியம்

கி.ராவின் கன்னிமை கதை குறித்து எழுதிய பதிவை வாசித்த சேது வேலுமணி நாச்சியாரை ஓவியமாக வரைந்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

சாகித்திய அகாதமி விழா

சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு சென்னையில் மார்ச் 30 மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வடபழனியிலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது

நாச்சியாரு, என் பிரியே

கி.ராவின் ’கன்னிமை’ சிறுகதையில் வரும் நாச்சியாரைப் பற்றி நினைக்கும் போது மனதில் மணிமேகலையின் உருவம் தோன்றி மறைகிறது. இருவருக்கும் ஒரே சாயல். நாச்சியார் கன்னிப்பெண்ணாக இருந்த போது எல்லோருக்கும் அள்ளிக் கொடுக்கிறாள். ஒடியோடி உதவிகள் செய்கிறாள். அன்பு மயமாக இருக்கிறாள். வேலைக்காரர்களுக்குக் கூட அவள் கையில் தான் கஞ்சி ஊற்றுவது பிடித்திருக்கிறது. பருத்தி எடுக்கும் பெண்கள் கூட அவள் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மாஎன்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப் படைத்துப் படைத்து …

நாச்சியாரு, என் பிரியே Read More »

உறக்கத்தை வரைபவர்

ஹென்றி மாங்குயின் (Henri Manguin )என்ற பிரெஞ்சு ஓவியரின் La Sieste என்ற ஓவியம் உறக்கத்திலுள்ள ஒரு பெண்ணைச் சித்தரிக்கிறது. 1905ல் வரையப்பட்ட இந்த ஓவியத்திலிருப்பவர் மாங்குயினின் மனைவி ஜீன். அவளை மாடலாகக் கொண்டு மாங்குயின் நிறைய ஓவியங்களை வரைந்திருக்கிறார் இந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் மனதில் ஜப்பானிய நாவலாசிரியரான யாசுனாரி கவாபத்தா எழுதிய House of the Sleeping Beauties நாவல் தான் நினைவிற்கு வந்தது. மயக்க நிலையில் உறங்கும் பெண்ணின் அருகில் அவளறியாமல் படுத்து உறங்கும் …

உறக்கத்தை வரைபவர் Read More »

பச்சை வாசனை

Yellow Flowers on the Green Grass என்ற வியட்நாமிய படத்தைப் பார்த்தேன். 2015ல் வெளியான இப்படத்தை இயக்கியுள்ளவர் Victor Vũ. இரண்டு சிறார்களின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் பால்ய வயதின் கொண்டாட்டங்களை, பயத்தை, இழப்புகளை அழகாகப் பதிவு செய்திருக்கிறது 1980 களின் மத்திய வியட்நாமில் கதை நடக்கிறது. 12 வயது தியூ, 7 வயதான அவனது தம்பி துவாங் இருவரையும் மையமாகக் கொண்ட கதை. சின்னஞ்சிறிய கிராமம். சுற்றிலும் பசுமையான வயல்கள். தூரத்து மலை. வண்ணத்துப்பூச்சிகள் …

பச்சை வாசனை Read More »

இளமையின் குழப்பங்கள்

நாட்சுமே சோசெகியின் கோகொரோ நாவல் 1959ல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நாவல் ஜப்பானில் 1914ல் தொடராக வெளியானது. கோகொரோ என்பதன் பொருள் இதயம் அல்லது இதயத்தால் உணரப்படுவதாகும். மூன்று பகுதிகளாக உள்ள இந்த நாவல் சென்ஷி எனப்படும் முதியவரும் சோசெகிக்குமான நட்பையும் சோசெகியின் குடும்பப் பின்புலம் மற்றும் சென்ஷியின் கடந்தகாலத்தையும் விவரிக்கிறது விடுமுறை நாளில் காமகுரா கடற்கரையில் தற்செயலாக ஒரு முதியவரைச் சந்திக்கிறான் கல்லூரி மாணவனான சோசெகி. கிழவர் கடலில் நிதானமாக நீந்தும் விதம் மற்றும் …

இளமையின் குழப்பங்கள் Read More »

நித்தியத்துவத்தின் அடையாளம்

The Adoration of the Magi என்ற இயேசுவின் பிறப்பைக் குறித்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 1440 ஆண்டு வரையப்பட்ட அந்த ஓவியத்திலுள்ள மயில் என்னை மிகவும் கவர்ந்தது. மாட்டுத்தொழுவம் மீது அமர்ந்துள்ள அந்த மயிலின் தோற்றம் அலாதியானது. இந்திய மினியேச்சர் ஓவியங்களில் மயில் மிக அழகாகச் சித்தரிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக ராஜஸ்தானிய நுண்ணோவியங்களிலும், மொகலாய நுண்ணோவியங்களிலும் மயில் முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கிறது. இயேசுவின் பிறப்பை விவரிக்கும் இந்த ஓவியத்தில் மயில் இடம்பெற்றிருப்பது தனிக்கவனத்தைப் பெறுகிறது. கலை …

நித்தியத்துவத்தின் அடையாளம் Read More »