இதயத்திலிருந்து உதிரும் இலைகள்
பிரெஞ்சு எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர் ஜூலியன் பார்ன்ஸ். ஜூலியன் பார்ன்ஸ் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பிறந்தவர். அவரது பெற்றோர் பிரெஞ்சு வம்சாவழியை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆகவே இயல்பாகவே அவருக்குப் பிரெஞ்சு மொழி மற்றும் இலக்கியத்தின் மீது விருப்பமிருந்தது. தனது ஆதர்ச எழுத்தாளரான குஸ்தாவ் ஃபிளாபேரைக் கொண்டாடும் விதமாக அவர் எழுதிய நாவல் Flaubert’s Parrot. 1984 இல் வெளியானது. நாவலின் நாயகனாக வரும் மருத்துவர் ஜெஃப்ரி பிரைத்வைட் ஒருவகையில் ஜூலியன் …









