admin

ஒரு அடியீடு மட்டும்

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற மலையாள எழுத்தாளர் என். பி. முஹம்மதுவின் ஒரு அடியீடு மட்டும் மறக்கமுடியாத சிறுகதை. பாலைவனத்தின் காட்சிகளை மிகச்சிறப்பாக எழுதியிருக்கிறார். இவரது வேறு கதைகள் எதுவும் தமிழில் வெளியாகியுள்ளதா எனத் தெரியவில்லை. இந்தக் கதையை வாசித்துப் பல ஆண்டுகள் ஆகியும் மனதில் அப்படியே பசுமையாக இருக்கிறது. நீதிக்கதைகளின் சாயலில் எழுதப்பட்டிருந்த போதும் கொள்ளைக்கார யூசுஃப் யாத்ரீகனை சந்திக்கும் காட்சியும் நன்மையின் பாதையில் செல்ல முற்படுவதும் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அடி தான் இடைவெளி …

ஒரு அடியீடு மட்டும் Read More »

சொற்களின் புதிர்பாதை

– வாசிப்பு அனுபவம் தயாஜி, மலேசியா தேர்ந்த எழுத்தாளர்கள் தன் படைப்பின் மீது மட்டுமே தம் வாசகர்கள் ஆர்வம் கொண்டிருப்பதை விரும்புவதில்லை. தான் ரசித்த தன்னைப் பாதித்த பிற படைப்புகளையும் பிற படைப்பாளிகளையும் தன் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறார்கள். அதுவே தம் வாசகர்களுக்கு அவர்கள் செலுத்தும் நன்றியாகப் பார்க்கின்றேன். வாசகர்களின் வாசிப்பை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்ல அதுவே வழி. இவ்வாறாக எஸ்.ராவின் கட்டுரைகள் வழி பல மொழி படைப்புகள் குறித்தும் படைப்பாளிகள் குறித்தும் அறிந்துக் கொண்ட …

சொற்களின் புதிர்பாதை Read More »

காற்றில் பறந்த மலர்கள்

ஜப்பானிய இயக்குநர் யசுஜிரா ஓசு இயக்கிய பெரும்பான்மை திரைப்படங்கள் திருமணத்தை மையமாக் கொண்டவை. தகுந்த இடத்தில் மகளுக்கோ, மகனுக்கோ திருமணம் செய்ய விரும்பும் தந்தை. தனிமையில் வசிக்கும் தந்தைக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் மகள். விதவையான பெண்ணுக்கு நடக்கும் மறுதிருமணம், குழந்தையோடு தனித்து வாழும் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆசை. உறவிற்குள் திருமணம் செய்வதில் ஏற்படும் சிக்கல். காதல் திருமணத்தினை வீடு எப்படிப் புரிந்து கொள்கிறது என்ற சிக்கல். சகோதரிகளுக்குள் திருமணத்தால் ஏற்படும் …

காற்றில் பறந்த மலர்கள் Read More »

சிறப்பு சலுகை

தேசாந்திரி பதிப்பகம் புதிய சிறப்பு சலுகையினை அறிவித்துள்ளது இணைப்பு தேசாந்திரி பதிப்பகம் , டி1, கங்கை குடியிருப்பு, எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93 (044)-23644947 desanthiripathippagam@gmail.com https://www.desanthiri.com/ desanthiri-travel-combo  

முடிவில்லாத அறைகள்

1924 ஆம் ஆண்டில், ஜெர்மன் கணிதவியலாளர் டேவிட் ஹில்பர்ட் ஒரு விசித்திரமான கேள்வியை எழுப்பினார்  அதாவது சில முடிவிலிகள் மற்றவற்றை விடப் பெரியதா? (are some infinities bigger than others?)  அவர் தந்த பதில் ஆம் என்பதே. அதை விவரிப்பதற்காக எண்ணிக்கையற்ற அறைகள் கொண்ட ஒரு ஹோட்டலைக் கற்பனை செய்து கொள்ளும்படியாக செய்தார். அதன் எல்லா அறைகளிலும் விருந்தினர்கள் இருந்தார்கள். அங்கே அறை காலியில்லை என்ற பலகை தொங்குகிறது. ஆனால் புதிதாக ஒருவரை தங்க அனுமதிக்க …

முடிவில்லாத அறைகள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள்

2016ம் ஆண்டில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதினேன். தியேட்டர் லேப் ஜெயராவ் தன் குழுவினருடன் அதை மேடையேற்றினார். ஒரு மணி நேர நாடகமது. சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு முன்பு புதுவை பல்கலைக்கழகத்தில் முருகபூபதி நாடகக்கலை படித்த போது அவருக்காக மரணவீட்டின் குறிப்புகள் எனத் தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from a Dead House யை மையமாகக் கொண்டு நாடகம் எழுதினேன். அந்த நாடகம் புதுவையில் …

தஸ்தாயெவ்ஸ்கி நாடகங்கள் Read More »

கவிதையின் ரகசியப் பாதை

அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் பில்லி காலின்ஸ்.(billy collins) Poet Laureate ஆகத் தேர்வு பெற்றவர், நியூயார்க்கில் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.. Questions about angels: poems 2) . Picnic, lightning. 3) Sailing alone around the room: new and selected poems. 4) Nine horses: poems 5) Trouble with poetry and other poems. 6) Ballistics: poems 7) Aimless love: new and selected poems. …

கவிதையின் ரகசியப் பாதை Read More »

அபாயவீரன்

.ஒரு புத்தகத்தின் பக்கங்களை பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப படிக்க வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட ஆங்கில சிறார் நூல் ஒன்றை 2008ல் படித்தேன். என் பையன் ஆகாஷ் அப்போது ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்காக வாங்கப்படும் புத்தகங்களை நானும் படிப்பேன். புத்தகத்தை வைத்து விளையாடுவது பிடித்திருந்த காரணத்தால் அது போன்ற ஒன்றை நானே எழுதலாம் என்று முடிவு செய்து சிறிய புத்தகம் ஒன்றை உருவாக்கினேன். அதை வீட்டிற்கு வரும் சிறுவர்களிடம் …

அபாயவீரன் Read More »

மாடத்தி

லீனா மணிமேகலை தயாரித்து இயக்கியுள்ள மாடத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் சிறந்த படம். கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான லீனா தொடர்ந்து மாற்றுசினிமாவை முன்னெடுத்து வருபவர். தனது ஆவணப்படங்களின் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற லீனா மாடத்தியின் வழியே புதிய திரைச்சாதனையைச் செய்திருக்கிறார். சுயாதீனப்படங்களின் வருகை தமிழ் சினிமாவிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்குகிறது. அந்த வகையில் மாடத்தி மிக முக்கியமான படம் என்பேன். மாடத்தி கோவிலுக்குச் செல்லும் புதுமணத்தம்பதிகளின் வருகையில் …

மாடத்தி Read More »

கதைகளின் வழியே

எழுத்தாளர் வால்டர் பெஞசமின் கதை சொல்வதன் முக்கியத்துவத்தை விளக்கி The Storyteller Essays என ஒரு கட்டுரை தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். சிறப்பான கட்டுரைகள் உள்ளன. அதில் உள்ள ஒரு கட்டுரையில் கதைகளில் சில விஷயங்கள் ஏன் என்று விளக்கப்படாமல் விடப்படுகின்றன. அந்த விடுபடல் தான் கதையின் சுவாரஸ்யம். அதுவே கதைகளைக் காலம் தாண்டி பேசவைக்கின்றன என்கிறார். பாரசீக பேரரசர் காம்பிசஸால் தோற்கடிக்கப்பட்டா மன்னர் சம்மேனிடஸ் தனது மகள் சிறைபிடிக்கப்பட்டபோதோ, மகன் மரணதண்டனையை நோக்கிச் செல்லும் போதோ கண் …

கதைகளின் வழியே Read More »