சிறப்பு சலுகை
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தேசாந்திரி பதிப்பகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. ஆன் லைன் விற்பனையும் உண்டு. இந்த மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக இருபது சதவீதத் தள்ளுபடியில் அனைத்து நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்
ஊரடங்கு காரணமாக ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த தேசாந்திரி பதிப்பகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. ஆன் லைன் விற்பனையும் உண்டு. இந்த மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக இருபது சதவீதத் தள்ளுபடியில் அனைத்து நூல்களையும் பெற்றுக் கொள்ளலாம்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள். அறிஞர்கள். திரைக்கலைஞர்களின் சிறந்த நேர்காணல்களைக் கொண்ட யூடியூப் சேனல் Web of Stories. இதில் இரண்டு நிமிஷங்கள் முதல் ஐந்து நிமிஷங்கள் வரை சிறுசிறு பகுதியாக நேர்காணலை எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தச் சேனலில் பிரான்சின் முக்கிய எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமானJean-Claude Carrière நேர்காணல் உள்ளது. அவசியம் காண வேண்டிய நேர்காணலிது. Jean-Claude Carrière – A house with a history
மாங்கா எனப்படும் ஜப்பானிய கிராபிக் நாவல்களை விரும்பி வாசிப்பேன். அதன் சித்திரங்களும் கதை சொல்லும் முறையும் வியப்பூட்டக்கூடியவை. இன்றைய ஹாலிவுட் சினிமாவில் இதன் தாக்கம் அதிகமிருக்கிறது. குறிப்பாக வித்தியாசமான கேமிரா கோணங்களை இந்த வகை மாங்காவிலிருந்தே உருவாக்குகிறார்கள். படக்கதை என்ற சம்பிரதாயமான வடிவத்தின் பெரிய பாய்ச்சலாகவே இது போன்ற சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகின்றன. Lone Wolf and Cub இந்த வரிசையில் மிக முக்கியமானது. இதன் 28 தொகுதிகளையும் வைத்திருக்கிறேன். இந்தத் தொகுதியிலிருந்து ஆறு திரைப்படங்கள் மற்றும் ஒரு …
முனைவர் ப. சரவணன், மதுரை புனைவுக்கும் உண்மைக்குமான ‘இடைவெளி’, ‘தொலைவு’, ‘நெருக்கம்’ என்பன, நமக்கும் வாழ்வுக்குமான தொலைவினை ஒத்தவைதான். ‘நமக்கும் வாழ்வுக்குமான இடைவெளி’ என்பது, மிகவும் நெருங்கியிருக்கும் வெகுதொலைவுதானே! புனைவும் உண்மையும் ஒன்றையொன்று தழுவும்போதும் நாமும் வாழ்வும் ஒன்றாகிப் போகிறோம். நாமே பெரும்புனைவுதான்!. வாழ்வே பேருண்மைதான்!. ‘நமக்கும் வாழ்க்கைக்குமான உறவு’ என்பது, புனைவும் உண்மையும் கலந்த கட்டுரைக்கு நிகராது. தான் பெற்ற ஆகச்சிறந்த அனுபவங்களையும் பிறரின் வாழ்க்கையின் வழியாகத் தான் கண்டுணர்ந்த ‘வாழ்வியல் சிடுக்கு’களையும் இணைத்துத் தனக்கேயுரிய …
மலையாள எழுத்தாளர் சி.வி. பாலகிருஷ்ணன் தனக்குப் பிடித்தமான சிறந்த திரைப்படங்களைப் பற்றி ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அது சினிமாவின் இடங்கள் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இதனைத் தமிழாக்கம் செய்திருப்பவர் கவிஞர் ஸ்ரீபதிபத்மநாபா. சுவாரஸ்யமான புத்தகம். அதில் வரும் ஒரு கட்டுரையின் சிறுபகுதியை மீள்பிரசுரம் செய்கிறேன் •• கடற்கரைக் காற்று சி.வி. பாலகிருஷ்ணன் தமிழில்: ஸ்ரீபதிபத்மநாபா •• ஒரு பத்திரிகையாளர் நடிகை ஷீலாவிடம் செம்மீன் படத்தின் கருத்தம்மா கதாபாத்திரத்தைக் குறித்துக் கேட்டார். ஷீலா இவ்வாறு பதில் சொன்னார்: ”அது …
புதிய சிறுகதை அந்த இரண்டு ஜப்பானியர்களும் ஏழாயிரம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வந்திருந்தார்கள். கியாத்தோவிலிருந்து இந்தியாவின் தென்கோடியிலிருந்த கொடைக்கானல் மலைக்கு வந்து சேர்ந்த தூரமது. உடல்வாகை வைத்து ஜப்பானியர்களின் வயதைக் கண்டறிய முடியாது. முகத்திலும் பெரிய மாற்றமிருக்காது. முழுவதுமாகத் தலைநரைத்த ஜப்பானியர் ஒருவரைக் கூட நந்தகுமார் கண்டதில்லை. கொடைக்கானலுக்கு வரும் வெள்ளைக்காரர்களில் ஒரு சிலரே வசதியானவர்கள். மற்றவர்கள் அந்த நாடுகளில் நடுத்தர வருமானமுள்ள தொழிலாளர்களாகவோ, அலுவலகப் பணியாளர்களாகவே இருப்பவர்கள். அபூர்வமாக ஒன்றிரண்டு இசைக்கலைஞர்கள், புகைப்படக்கலைஞர்கள் வருவதுண்டு. இதுவரை …
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐந்து லட்ச ரூபாய் பரிசுடன் கூடிய இலக்கிய மாமணி விருது மூன்று பேருக்கு வழங்கப்படும். ஞானபீடம், சாகித்ய அகாதமி உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் கனவு இல்லம் கட்டித்தரப்படும் மதுரையில் எழுபதுகோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் உருவாக்கப்படும் என்று மூன்று முக்கிய அறிவிப்புகளை இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த நற்செய்தியைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழையும் தமிழ் …
.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போது இலங்கையின் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் குறுநில மன்னர்களைப் போல மக்கள் மீது அதிகாரம் செலுத்தினார்கள். சொகுசான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரின் கதையைத் தான் Elephant Walk திரைப்படம் விவரிக்கிறது. படம் ஜான் வைல் என்ற தேயிலைத் தோட்ட உரிமையாளர் இங்கிலாந்திற்கு வருவதில் துவங்குகிறது. அங்கே ரூத் என்ற வாடகை நூலகத்தினை நடத்தி வரும் இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான் வைல். ரூத்திற்கு இலங்கையைப் பற்றி எதுவும் …
திருச்சியை சேர்ந்த மீ. அ. மகிழ்நிலா எட்டாம் வகுப்பு பயிலுகிறார். எனது ஏழு தலை நகரம் சிறார் நாவலுக்கு மகிழ்நிலா எழுதியுள்ள விமர்சனம் ••• அக்கடா, கிறு கிறு வானம், ஏழு தலை நகரம் போன்ற நாவல்களையும் எழுதத் தெரிந்த புலி, தலை இல்லாத பையன் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்துள்ளேன். இவற்றுள் ஏழு தலை நகரம் என்ற நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் எனக்கு இந்தக் கதை என் நண்பர்களின் …
நான் என்னிலிருந்து வெளியே நீந்திப் போனேன் என்னைக் கூப்பிடாதே நீயும் உன்னிலிருந்து வெளியே நீந்திப் போ நாம் நீந்திப் போய்விடுவோம், நமது உடல்களை விட்டு கரையில் ஒரு ஜோடி கடற்கரைச் செருப்புகள் போல அன்னா ஸ்விர் (Anna Swir) போலந்தின் முக்கியக் கவிஞர். இவரது தந்தை ஒரு ஓவியர். ஆகவே குழந்தைப் பருவம் முழுவதும் ஒவியக்கூடத்திலே கழிந்தது. கல்லூரி படிப்பை முடித்த அன்னா சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றியிருக்கிறார். …