admin

அம்மாவின் சுதந்திரம்

வாழ்வின் தேவை -சிறுகதை குறித்து தயாஜி. மலேசியா •• அம்மாவிற்கு குடும்பத்தில் என்ன மாதிரியான இடத்தை கொடுக்கின்றோம் என்கிற அடிப்படை கேள்வியை முன் வைக்கும் கதை. யோசிக்கையில் இதுவெல்லாம் ஒரு கேள்வியா என்றும் தோன்றலாம். ஆனால், அந்த யோசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறது ‘வாழ்வின் தேவை’. அப்பா இறந்துவிட்டார். அவர் இருக்கும் வரையில் அம்மாவை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார். வெளியூரில் வசிக்கும் மகளுக்கு இரண்டாம் பிரசவத்திற்கு பின் அம்மா அங்கு செல்ல வேண்டி வருகிறது. கொஞ்ச …

அம்மாவின் சுதந்திரம் Read More »

காதலின் மஞ்சள் மலர்

உலகின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது Sunflower (Italian: I girasoli). விட்டோரியா டிசிகா இயக்கியுள்ள இந்தப்படம் வழக்கமான காதல்கதை போலக் காதலுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பேசுவதில்லை. மாறாகக் காதலின் புதிய பரிமாணத்தை அடையாளம் காட்டுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது கதை நடக்கிறது போர் முடிந்த போதும் வீடு திரும்பாத ராணுவ வீரர்களின் நிலையைப் பற்ற அறிந்து கொள்ள இத்தாலியிலுள்ள அரசாங்க தகவல் மையத்தில் பலரும் காத்து கிடக்கிறார்கள். அங்கே தன் கணவன் என்ன ஆனான் …

காதலின் மஞ்சள் மலர் Read More »

கனவினை வடிவமைப்பவர்கள்

“Devrim Arabaları” (Cars of the Revolution) என்ற துருக்கிப்படத்தினைப் பார்த்தேன் துருக்கியில் 1960 ல் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரே. பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தால் மட்டுமே தேசம் சுதந்திரமாக இருக்க முடியும் என்று புதிய அதிபர் ஜெனரல் செமல் நம்புகிறார். இதற்காக நாட்டில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் என்கிறார். ஆனால் பொருளாதார வளமில்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் செய்கிறார்கள். துருக்கியால் சிறிய குண்டூசியைக் கூடத் தயாரிக்க முடியாது. …

கனவினை வடிவமைப்பவர்கள் Read More »

கடைசிப் போராட்டம்

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்த இந்தியாவைச் சித்தரிக்கும் ஆங்கிலப் படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். பெரும்பான்மை அமெரிக்கப்படங்கள். அவர்களின் வணிக லாபங்களுக்காக இந்தக் கதைக்களனைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தின் பெருமை பாடுவதே இந்தப் படங்களின் தலையான நோக்கம். இப்படங்கள் இந்தியர்களை முட்டாள்கள். போக்கிரிகள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளாகவே சித்தரிக்கின்றன. போவானி ஜங்ஷன் என்பது கற்பனையான ஒரு ரயில் நிலையம். ஜான்சி ரயில் நிலையத்தின் சாயலில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். Bhowani Junction ஜான் மாஸ்டர்ஸ் எழுதிய நாவல். இதை மையமாகக் …

கடைசிப் போராட்டம் Read More »

வாழ்வின் தேவை

சிறுகதை குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள். இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள். அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து …

வாழ்வின் தேவை Read More »

உடலின் அலைகள்

. பினா பாஷ்( Pina Bausch. )உலகப்புகழ் பெற்ற நடனக்கலைஞர். இவரது Orpheus and Eurydice – Dance opera என்ற நடனநிகழ்வினைப் பற்றிய படத்தைப் பார்த்தேன். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. 1994ல் பினா பாஷ் சென்னையில் நடனநிகழ்ச்சி நடத்திய போது நேரில் கண்டிருக்கிறேன். மேடையமைப்பும் ஒளியும் நடனமிடும் கலைஞர்களின் உடல்திறனும் வியப்பில் ஆழ்த்தியது. நடனக்கலைஞர் சந்திரலேகாவின் புதுவகை நடனங்களைக் கண்டு ரசித்திருந்த எனக்குப் பினா ஒப்பற்ற சாதனையாளராகத் தோன்றினார். அவர் சந்திரலேகாவின் நண்பர். இருவரும் இணைந்து …

உடலின் அலைகள் Read More »

கைதட்டுகள் போதும்

சிறுகதை அந்த ஊரில் ரங்கசாமியின் வீட்டிற்கு மட்டும் கதவில்லை. தனக்குக் கதவு தேவையில்லை என்று பிடுங்கி எறிந்துவிட்டார். கதவற்ற அவரது வீட்டிற்கு யார் வரப்போகிறார்கள். காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் அபூர்வமாக வரும் மழையையும் தவிர வேறு மனிதர்கள் அந்த வீட்டிற்கு வருவதேயில்லை. ரங்கசாமி சர்க்கஸில் வேலை செய்ததன் அடையாளமாக அவரிடம் மிஞ்சமிருந்தது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே. அந்தச் சைக்கிளில் தான் இப்போதும் அவர் வெளியே போய் வருகிறார். விளாம்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தில் …

கைதட்டுகள் போதும் Read More »

இயற்கையின் வண்ணங்கள்

Life in Colour என்ற டேவிட் அட்டன்பரோவின் புதிய ஆவணத்தொடரைப் பார்த்தேன். இயற்கையின் வண்ணங்களை ஆராயும் இந்தத் தொடர் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்குக் கொடையாக வழங்கியுள்ள வண்ணங்களையும் அதன் தனித்துவத்தையும் மிக அழகாக விவரிக்கிறார் அட்டன்பரோ. அவர் அளவிற்கு உலகெங்கும் சுற்றி இயற்கை வளங்களை, உயிரினங்களை, கடலை, கானகங்களைக் கண்டவரில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் அவர் இயற்கையின் வண்ணங்களைப் படமாக்கியுள்ள விதம் அபாரம். குறிப்பாக ஒரு நண்டின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதைக் …

இயற்கையின் வண்ணங்கள் Read More »

இலக்கற்ற பயணம்

 ‘தேசாந்திரி’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை வீட்டின் சாளரங்களின் (ஜன்னல்களின்) வழியாக நிலாவைப் பார்ப்பதற்கும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அல்லது வீட்டின் தோட்டத்தில், முற்றத்தில் நின்று நிலாவைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. சாளரங்கள் நம் பார்வைக் கோணத்தைக் கட்டுப்படுத்தும்; நமது சுதந்திரத்தைத் தடுக்கும். ஆனால், மொட்டை மாடியும் தோட்டமும் முற்றமும் நமக்கு அனைத்துச் சுதந்திரத்தையும் கொடுக்கும்; எல்லாக் கோணத்திலும் நிலாவைப் பார்க்க நம்மை அனுமதிக்கும். பயணங்கள் சுதந்திரமானவை. அவை தரும் காட்சிப் பதிவுகள் …

இலக்கற்ற பயணம் Read More »

சத்யஜித்ரேயின் நூற்றாண்டு

இயக்குநர் சத்யஜித்ரேயின் நூற்றாண்டு இன்று துவங்குகிறது. அவரது திரைப்படங்களை மிகவும் விரும்பிப் பார்த்திருக்கிறேன். பதேர் பாஞ்சாலி எனக்கு மிக விருப்பமான படம். அந்தப் படம் குறித்து விரிவான புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை வாசித்துப் பாராட்டிய பாலுமகேந்திரா அது போல ஒரு திரைப்படத்திற்கு விரிவான நூல் வெளியானதில்லை என்று பாராட்டுக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். பதேர் பாஞ்சாலியை தற்போது வண்ணமயமாக்கி வருகிறார்கள். அதன் சில காட்சிகளை முன்னோட்டமாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அற்புதமாக உள்ளது. குறிப்பாக அபுவும் துர்காவும் ரயிலைக் …

சத்யஜித்ரேயின் நூற்றாண்டு Read More »