பிரான்சில் தமிழ் இலக்கிய விழா

பிரான்சு வரலாற்றில் முதன்முறையாக பாரீசுக்கு அருகில் Centre- Val de Loire மாகாணத்தில் இரண்டு நகரங்களில் (Jargeau & Châteaudun) ‘ Tu Connais la nouvelle எனும் இலக்கிய அமைப்பு இருவாரங்கள் தமிழ் நவீன இலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்த விழாவை எடுக்கிறார்கள்.

Editions Zulma என்ற பிரெஞ்சு பதிப்பாளர் இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் அவருடன் Yanne Dimai என்கிற பிரெஞ்சு படைப்பாளியும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் நவீன தமிழிலக்கியத்தின் இன்றைய நிலை குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன. கூடுதலாக தமிழ் கதைகளின் மொழிபெயர்ப்பு வாசிக்கபடவுள்ளன.

இந்த நிகழ்வில் எனது சிறுகதை ஒன்றை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து வாசிக்கிறார்கள்

எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவிற்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்

0Shares
0