admin

பதவிக்குப் பின்னால்.

‘கே பிளான்’ எனப்படும் “காமராஜர் திட்டம்”இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நேரு பிரதமராகப் பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினுள் நிறையப் பதவிச் சண்டைகள். போட்டிகள் உருவாகின. இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட காலம் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தைக் காமராஜர் முன்மொழிந்தார். இந்தத் திட்டம் பெரிதாக வெற்றிபெறவில்லை. ஆனால் இது பற்றி இன்று வரை …

பதவிக்குப் பின்னால். Read More »

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி.

லா.ச.ராவின் அபிதா இருக்கிறதா என்று அவர் நூலகரிடம் கேட்டபோது நான் திரும்பிப் பார்த்தேன். பொதுவாக நூலகரிடம் லா.ச.ராவின் புத்தகங்களைக் கேட்பவர்கள் அரிது. பெரும்பாலும் பொன்னியின் செல்வன். சிவகாமியின் சபதம் கடற்புறாவைத் தேடுபவர்கள் தான் அதிகம். ஆனால் அந்த மனிதர் லா.ச.ராமாமிருதம் எழுதிய அபிதா புத்தகத்தைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் தான் அந்தப் புத்தகத்தை இரவல் எடுத்துப் போயிருந்தேன். ஆகவே நூலகர் என்னைச் சுட்டிக்காட்டி அவர் இன்னமும் திருப்பித் தரலை என்று சொன்னார். உடனே அந்த மனிதர் …

நூலக மனிதர்கள் 3 லா.ச.ராவின் வாசகி. Read More »

டோமிரிஸின் கோபம்.

“The Legend of Tomiris” ஸ்டெப்பிப் பழங்குடிக்குள் உள்ள பகை மற்றும் பழிவாங்குதலைப் பேசும் படம். தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகளின் கதை என்பது சினிமாவில் மிகப்பழையது. ஆனால் படமாக்கப்பட்ட முறை மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாகச் சண்டைக்காட்சிகளை மிக நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் காசன் கைடிராலியே மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டோமிரிஸ் அரசியின் கதையைத் தான் படம் விவரிக்கிறது. கிமு 484-425க்கு இடையில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் வரலாற்றுப் …

டோமிரிஸின் கோபம். Read More »

நூலக மனிதர்கள் 2 தந்தையின் நிழலில்

விருதுநகர் பொது நூலகத்தில் அவர்கள் இருவரையும் பார்த்திருக்கிறேன். அந்தச் சிறுவனுக்கு பத்து பனிரெண்டு வயதிருக்கும். அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவனது அப்பா நூலகத்திற்கு அழைத்துக் கொண்டு வருவார். ஒரு முறை கூட அப்பா தனியே நூலகத்திற்கு வந்ததாக நினைவேயில்லை. பெரும்பாலும் சனிக்கிழமை காலையிலும் ஞாயிறு மாலையிலும் அவர்கள் நூலகத்திற்கு வருவார்கள். அப்பா நூலகத்தின் நீண்ட அடுக்குகளுக்குள் அந்த பையனை அழைத்துக் கொண்டு போய் மெல்லிய குரலில் புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருப்பார். அந்த …

நூலக மனிதர்கள் 2 தந்தையின் நிழலில் Read More »

நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு

நூலகங்களுடன் எனக்குள்ள தொடர்பு நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சின்னஞ்சிறிய மல்லாங்கிணர் கிராமப்புற நூலகத்தில் துவங்கி உலகின் மிகப் பெரிய நூலகங்கள் வரை தொடர்பு கொண்டிருப்பவன் என்ற முறையில் நூலகங்கள் தான் எனது உலகம். நான் நூலகத்திலிருந்து உருவாகி வந்தவன் . புத்தக அடுக்குகள் தரும் ஈர்ப்பினை வேறு எதுவும் தருவதில்லை. சிறுவயதில் கிராம நூலகத்திற்குச் செல்லும் போது அங்கேயே உட்கார்ந்து படிக்க வேண்டும் என்பார்கள். படிப்பதற்கு ஏற்ற இருக்கைகள் இருக்காது. அதை விடவும் அடுத்தவர் முன்னால் உட்கார்ந்து …

நூலக மனிதர்கள் 1 படிப்பதற்குப் பரிசு Read More »

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலிலிருந்த எழுத்தாளர்களில் எவரது புத்தகமாவது தமிழில் வந்திருக்கிறதா எனப் பார்த்தேன். ஒன்று கூட வெளியாகவில்லை. கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் பேசப்பட்ட கவிதை, நாவல். சிறுகதை கட்டுரை தொகுப்புகள் ஏதாவது தமிழில் வந்திருக்கிறதா என்று யோசித்தாலும் ஒன்றும் வெளியாகவில்லை. உரிமை பெற்றுத் தமிழில் வெளியிடுவது என்பது பெரிய முயற்சி. நிறையப் பொருட்செலவு கொண்டது என்கிறார்கள். அது உண்மையே. மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகங்களே கூட நோபல் பரிசு பெற்றுள்ள ஒன்றிரண்டு …

ஐம்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். Read More »

சிறுமியின் கனவு.

தி ரிக்கார்டர் எக்ஸாம் என்ற கொரியப்படத்தைப் பார்த்தேன். 27 நிமிஷங்கள் ஓடும் அழகான திரைப்படம். 1988 ஆம் ஆண்டில் சியோலில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான யூன்-ஹீ என்ற  மாணவியின் ஆசையைப் பேசுகிறது. பள்ளியில் படிக்கும்  யூன்-ஹீ ஒரு நாள் ரிக்கார்டர் என்ற குழலிசைக் கருவியை வீட்டில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். தன் அம்மாவிற்குப் போன் செய்து அதைப் பள்ளியில் கொண்டு வந்து கொடுக்கும்படி சொல்வதில் படம் துவங்குகிறது. பள்ளியில் குழலிசைத் தேர்வு நடைபெறவுள்ளது. அதில் …

சிறுமியின் கனவு. Read More »

ஆர்மேனியச் சிறுகதைகள்

ஆர்மேனியச் சிறுகதைகள் நூலை வல்லிக்கண்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் மிகச்சிறந்தவை. இணையத்தில் தற்போது இலவசமாகத் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/175-armeniyachchirukathaikal.pdf இந்தத் தொகுப்பிற்கு அசோகமித்ரன் எழுதியுள்ள முன்னுரை ஆர்மேனியர்களின் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து மிக நுட்பமாக விவரிக்கிறது. எவ்வளவு அரிய தகவல்கள். உண்மைகள். அசோகமித்ரனுக்கே உரித்தான நகைச்சுவை இதிலும் வெளிப்படுகிறது. அபூர்வமான முன்னுரையது. ••• “அவர்கள் என் ஜனங்களைக் கொல்கிறார்கள். அவர்கள் என் சகோதரர்களைக் கொன்று தள்ளுகிறார்கள். “ இலவசமாக முடிவெட்டிக்கொள்வதற்காகச் …

ஆர்மேனியச் சிறுகதைகள் Read More »

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி

“அந்தோ”! என்றது எலி, “ஒவ்வொரு நாளும் உலகம் முழுமையும் சிறிதாகிக் கொண்டேவருகிறது. ஆரம்பத்தில் நான் பயப்படும் அளவுக்கு இது பெரியதாக இருந்தது, நான் ஓடினேன் ஓடினேன், ஓடிக்கொண்டேயிருந்தேன், தூரத்தே வலது புறமும் இடது புறமும் சுவர்கள் தோன்றியதைக் கண்டு மகிழ்ந்தேன், ஆனால் இந்தச் சுவர்கள் விரைவில் குறுகத் தொடங்கின, நான் இப்போது கடைசி இடத்திற்கு ஏற்கனவே வந்து விட்டேன், ஆனால் இங்கு எனக்காகப் பொறி ஒன்று காத்திருந்தது, அதற்குள்தான் நான் செல்லவேண்டுமாம்”. “நீ உன் திசையை மாற்றவேண்டிய …

காலைக்குறிப்புகள் 25 காஃப்காவின் எலி Read More »