admin

புதிய புத்தகங்கள் 1 : கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

ஹெர்மன் மெல்வில், கோ யுன், மோ யான், ஸ்டீன்பெக்,லேர்மன்தேவ், கொரலன்கோ,.பால்சாக், பாஷோ, ஓனோ நோ கோமாச்சி, ஜேவியர் மரியாஸ் என உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் முக்கியப் படைப்பு குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

நூலக மனிதர்கள். 27 பெயரெனும் கண்ணாடி.

நூலகத்திற்கு வரும் அனைவரும் புத்தகம் படிப்பதற்கென்று மட்டும் வருவதில்லை. சிலர் விநோத காரணங்களுக்காகவும் நூலகத்திற்கு வருகிறார்கள். தேடுகிறார்கள். தான் பிறந்த வருஷத்தில் வெளியான புத்தகங்களைத் தேடிப் படிப்பதில் ஒருவருக்கு ஆர்வம் அதிகம். நூலில் எந்த ஆண்டு வெளியானது என்று தான் முதலில் பார்ப்பார். இன்னொருவருக்கோ நாவல்களில், கதைகளில் வருகிறவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள். எந்த ஊரில் வசிக்கிறார்கள் என்பது முக்கியம். வேறு ஒருவருக்கு இதுவரை யாரும் எடுத்துப் போகாத புத்தகத்தை மட்டுமே தேடி எடுத்துப் படிப்பது வழக்கம். இதற்கு …

நூலக மனிதர்கள். 27 பெயரெனும் கண்ணாடி. Read More »

ஊரின் நினைவில்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஒருவர் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்குப் போகிறார். அங்கே ஊரின் மிகவும் புகழ்பெற்ற குடிமகன் என விருது தரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தப் பயணமும் அதில் ஏற்படும் அனுபவங்களையும் மிக அழகாக விவரிக்கிறது The Distinguished Citizen திரைப்படம். காஸ்டன் டுப்ராட் மற்றும் மரியானோ கோன் இயக்கி 2016 வெளியான திரைப்படமிது. நோபல் பரிசு விழாவில் டேனியல் மன்டோவானி விருது பெறுவதில் படம் துவங்குகிறது. இத்தனை காலமாற்றங்களுக்குப் …

ஊரின் நினைவில் Read More »

நூலக மனிதர்கள் 26 காகிதப் பொம்மைகள்.

நூலகரின் மேஜை முன்னால் நான்கு காகித வண்ணத்துபூச்சிகள் இருந்தன. அழகான அந்தக் காகித பொம்மைகளை யார் செய்தது எனக்கேட்டேன் “நம்ம லைப்ரரியிலே புக் எடுக்கிற ஒரு வாத்தியார். அவரா கத்துகிட்டு செய்திருக்கிறார்“ என்றார் அடுத்த முறை அந்த ஆசிரியர் நூலகத்திற்கு வரும் போது நூலகர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் அவர் பெயர் கே.ஆர்.நாதன். கிராமப்புற பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். அன்றாடம் டவுன் பஸ்ஸில் பள்ளிக்கு போய் வருவார். அந்தப் பள்ளிக்கென மைதானம் கூடக் …

நூலக மனிதர்கள் 26 காகிதப் பொம்மைகள். Read More »

கர்னலின் நாற்காலி

ஊரடங்கு காலத்தில் நான் இணையதளத்தில் எழுதிய 125 குறுங்கதைகளின் தொகுப்பு கர்னலின் நாற்காலி என்ற பெயரில் வெளியாகிறது. டிசம்பர் இறுதியில் இதன் வெளியீட்டு விழா நடைபெறும் தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

நூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.

அந்த இளைஞருக்கு முப்பது வயதிருக்கக் கூடும். பேஸ்கட் பால் பிளேயர் போன்ற உயரம். கழுத்தில் ஒரு கறுப்பு கயிறு. அடர் பச்சை வண்ண பேண்ட். இரண்டு பாக்கெட்டுகள் கொண்ட சட்டையை அணிந்திருந்தார். பொதுநூலகத்திற்குப் போய் வருவதில் உள்ள சௌகரியம். நிறையப் புதிய மனிதர்களைச் சந்திக்க முடிவது. அவர்களுடன் பேசிப் பழகி நட்பு கொள்வது. அப்படித்தான் அந்த இளைஞரும் அறிமுகமானார். அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தார். பெரும்பாலும் நைட் ஷிப் என்பதால் பகலில் உறங்கிவிடுவார். வாரம் …

நூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது. Read More »

அந்திமழை 100

அந்திமழையின் நூறாவது இதழ் வெளியாகியுள்ளது. என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்திமழை துவங்கப்பட்ட நாளிலிருந்து அதை அறிவேன். கால்நடை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற நண்பர்கள் பத்திரிக்கையுலகின் மீது ஆர்வம் கொண்டு சிற்றிதழாகத் துவங்கி பின்பு இணைய இதழ், அச்சிதழ், பதிப்பகம் என்று வளர்ந்திருக்கிறார்கள் நல்ல நண்பர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்சிகள் எப்போதும் வெற்றிபெறும் என்பதற்கு அந்திமழையின் நண்பர்களே சாட்சி. இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், பண்பாடு என அந்திமழையின் பரந்த பார்வையும் …

அந்திமழை 100 Read More »

நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு

1980களில் பொது நூலகங்களுக்கு GDR Review என்ற ஆங்கில இதழை ஜெர்மன் தூதரகம் அனுப்பி வந்தது. அழகான வண்ண காகிதத்தில் மிக நேர்த்தியான புகைப்படங்களுடன் அந்த இதழ் வெளிவந்தது. கிராமப்புற நூலகத்தில் யார் ஆங்கில இதழைப் படிக்கப் போகிறவர்கள். ஆகவே நூலகர் இதழின் உறையைக் கூடப் பிரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பார். நான் ஒருவன் தான் அதைக் கேட்டு வாங்கிப் பிரித்துப் படிப்பவன். அந்த இதழின் சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை புது டயரி மற்றும் காலண்டர் ஒன்றை …

நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு Read More »

தெலுங்கில்

அவன் பெயர் முக்கியமில்லை என்ற எனது சிறுகதை தெலுங்கில் வெளியாகியுள்ளது. மொழியாக்கம் செய்திருப்பவர் ஜி.பாலாஜி.

ஆவநாழி

ஆவநாழிஎன்ற இணைய இதழை கவிஞர் சுதேசமித்ரன் நடத்தி வருகிறார். முன்பு ஆரண்யம் என்ற கலை இலக்கிய இதழை ஸ்ரீபதி பத்மநாபாவோடு இணைந்து கொண்டுவந்திருக்கிறார்., நான்கு இதழ்கள் வெளியாகியுள்ளன. இலக்கியம் சினிமா கலை என தீவிரமான கட்டுரைகள் நேர்காணல்களுடன் மிகச்சிறப்பான வடிவமைப்புடன் வெளியானது. சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி, பத்மராஜனின் ஓரிடத்தொரு பயில்வான், எம் டி வாசுதேவன் நாயரின் பெருந்தச்சன் மற்றும் ஷேக்ஸ்பியர் இன் லவ் ஆகிய படங்களின் முழுமையான திரைக்கதைகள் அதில் வெளியாகியிருந்ததை மறக்கமுடியாது. சுதேசமித்ரன் சிறந்த வடிவமைப்பாளர் …

ஆவநாழி Read More »